Friday, November 27, 2009

விபசார அழகியை மிரட்டிய பிரதமர்

.
இத்தாலி பிரதமர் சிலிவியோ மீது பல்வேறு “செக்ஸ்” புகார்கள் கூறப்பட்டன. 77 வயதான அவர் இந்த வயதிலும் செக்ஸ் விஷயத்தில் மோசமாக அலைவதாக அருவடைய மனைவி மோகுல் புகார் கூறி இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அடோரியா என்ற விபசார அழகியுடன் அவர் தனது வீட்டிலேயே உல்லாசமாக இருந்ததாகவும், புகார் கூறப்பட்டது. இந்த தகவலை அடோரியாவே வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் அடோரியா பிரதமருடன் இருந்த தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பிரதமருடன் உல்லாசமாக இருந்ததால் எனக்கு ஓட்டல் ஒன்று திறக்க உதவுவதாக கூறினார்கள். இதை நம்பி அவருடன் சென்றேன். ரோமில் உள்ள அவருடைய வீட்டிலேயே நாங்கள் ஒன்றாக இருந்தோம்.
ஆனால் இதற்காக எனக்கு பணம் எதுவும் தர வில்லை. அவர்கள் செய்து தருவதாக கூறிய உதவியும் செய்யவில்லை.
உல்லாசம் முடிந்ததும் எனது உள்ளாடைகள், மற்றும் ஆடைகள், செருப்பு, டைரி சி.டி. எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.

அவருடன் உல்லாசமாக இருந்த போது பதிவு செய்த ஆடியோ டேப் மட்டும் என்னிடம் உள்ளது.
எனக்கு கூலியாக பணம் அல்லது உதவி செய்யும்படி கேட்டதற்கு என்னை பிரதமர் மிரட்டினார். என் வீட்டிலேயே அடித்து நொறுக்கி விடுவதாக எச்சரித்தனர்.
இவ்வாறு அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

Tuesday, November 24, 2009

தினசரி செக்ஸை விரும்பும்பெக்காமின் மனைவி


கணவருடன் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதை நான் வெறுக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் விக்டோரியா பெக்காம்.
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் டேவிட் பெக்காமின் மனைவியும், முன்னாள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழு பாடகியுமான விக்டோரியா, பேஷன் டிசைனராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் தனது செக்ஸ் ஆர்வம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து விக்டோரியா கூறுகையில்,
தினசரி நான் இரவில் நிர்வாணமம்கத்தான் தூங்குவேன். அதேபோல எனது கணவருடன் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் தயங்கமாட்டேன்.
டேவிட்டுடன் தனிமையில் இருக்கும்போது முதலில் எதை விரும்புவேன் என்று கேட்டால் செக்ஸைத்தான் நாடுவேன். பிறகுதான் தூக்கம். செக்ஸ் இல்லாமல் தூக்கம் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. டேவிட்டுடன் தூங்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிச்சயம் அதற்கு முன்பு செக்ஸும் இருக்கும்.
எனக்குப் படுக்கையில் உடையுடன் படுக்கப் பிடிக்கவே பிடிக்காது. இருந்தாலும் டேவிட் எனக்காக ஆசைப்பட்டு வாங்கி வரும் உள்ளாடைகளை அவருக்காக அவ்வப்போது அணிந்து கொள்வேன் என்று கூறியுள்ளார் விக்டோரியா.

Sunday, November 22, 2009

மன்மதலீலை


2008ம் ஆண்டின் மிஸ் டிரினிடாட் டொபாகோ அழகிப் பட்டத்தை வென்றவர் சீ. இவர் தனது காதலர் வியாட் காலரி மற்றும் இன்னொரு பெண்ணுடன் ஜாலியா இருப்பதைப் போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.
அந்த இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் 2008 ஹிரோகோ மிமா என கூறப்படுகிறது.
ஆனால் இதை வியாட் மறுத்துள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோவில் நானும், சீயும் இருப்பது உண்மை. ஆனால் இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் அல்ல, அவர் வேறு பெண்.
இந்த வீடியோ 2007ல் படமாக்கப்பட்டது. எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். பழுதுபார்க்க லேப்டாப்பைக் கொடுத்தபோது இதை வெளியிட்டுள்ளனர்.
இதனால் அன்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஏற்பட்ட சங்கடத்திற்காக வருந்துகிறேன் என்றார்.
இந்த செய்திவெளியானதைத் தொடர்ந்து அன்யாவின் செக்ஸ் வீடியோ குறித்த தேடுதல் இணையதளங்களில் சூடு பிடித்துள்ளதாம்.

Wednesday, November 4, 2009

11 வயதில் தாயான சிறுமி

பல்கேரியாவில் 11 வயது சிறுமியொருவர் குழந்தையொன்றுக்குத் தாயாகியுள்ளாள். கோர்டெஸா எனும் இச்சிறுமி 19 வயதான தனது நண்பர் ஜெலிஸ்கோ திமித்ரோவுடன் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமடைந்தாள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோர்டெஸாவுக்கும் ஜெலிஸ்கோவுக்கும் கடந்த 22 ஆம் திகதி காலையில் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் மாலையில கோர்டெஸா பெண் குழந்தையொன்றை பெற்றாள். அக்குழந்தைக்கு வயலேட்டா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
பல்கேரியாவில் 13 14 வயதில் பெண்கள் தாயாகுவது சாதாரணமானதாம். ஆனால் உலகின் மிக இளமையான தாய் கோர்டெஸா எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான் இதுவரை பொம்மைகளை வைத்து விளையாடிவந்தேன். இப்போது எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை மிகவும் நேசிக்கிறேன்.
இனி நான் பாடசாலைக்குச் செல்லப்போவதில்லை. இப்போது நான் தாயாகிவிட்டேன் என்கிறாள் கோர்டெஸா.
ஆனால் கோர்டெஸாவின் கணவரான ஜெலிஸ்கோ திமித்ரோ சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டின் காரணமாக சிறைத்தண்டனைக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. நான் முதன் முதலில் கோர்டெஸாவை சந்தித்தபோது அவளுக்கு 15 வயது இருக்கலாம் என எண்ணினேன். தனக்கு 11 வயதுதான் என அவள் கூறவில்லை என்கிறார் திமித்ரோ.

Monday, November 2, 2009

நிர்வாண போஸ்கொடுத்தஆசிரியை


நியூஸிலாந்தில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர் ஆண்களுக்கான சஞ்சிகையொன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்ததையடுத்து நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.
26 வயதான ரசெல் வைட் வெல் ஆக்லாந்து நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலையில்
ஆசிரியையாக பணியாற்றுகிறார். அதேவேளை பகுதி நேரத் தொழிலாக விடுதிகளில் நடனமாடுவது சஞ்சிகைகளுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதுவது
என்பற்றிலும் அவர் ஈடுபடுகிறார்.
அண்மையில் அவர் நிர்வாணமாகவும் அரைநிர்வாணமாகவும் தோன்றும் பல புகைப்படங்கள் அவுஸ்திர்ரிலய சஞ்சிகையொன்றில் வெளியாகின.
பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் இது தொடர்பாக புகார் செய்ததையடுத்து ரசெல் வைட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நியூஸிலாந்து ஆசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அவர் ஆசிரியப் பணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தான் செய்தது தவறல்ல என்கிறார் ரசெல்.
சஞ்சிகையொன்றுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதியுள்ளேன்.
சொந்தமாக போல் டான்ஸிங் விடுதியொன்றையும் நடத்தி வருகிறேன்.
நான் 26 வயதான தனியான ஒரு பெண்.
நாட்டுக்கு வெளியே வெளியிடப்படும் சஞ்சிகை
ய்யான்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பது
தவறா? நிர்வாணப் புகைப்படங்கள் நான் நல்ல ஆசிரியை
என்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இது தொடர்பாக ஏன் இவ்வளவு பிரச்சினை கிளப்புகிறார்கள் எனப் புரியவில்லை '' என்கிறார் அவர் .ஆனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள
வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
எனவே ரசெல்லின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள
முடியாது என பலர் குறைகூறியுள்ளனர்.

Tuesday, October 27, 2009

கரீனாவின்கவர்ச்சி


சைப் அலி கானுக்கு முன்பு மேலாடை எதுவும் இன்றி வெளி்ப்படையாக கரீனா கபூர் நிற்பது போன்ற போஸ்கள் குர்பான் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன.
ஏற்கனவே இப்படத்தின் இசை இந்தி என்ற பெரிய அந்தஸ்து இவரிடம் உள்ளது. இதுதவிர அக்ஸ், ரங் தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார் ரென்சில். இயக்கத்தில் குர்பான்தான் முதல் படம்.
இதுகுறித்து ரென்சில் கூறுகையில், எனக்கு சைப் அலிகானை நன்கு தெரியும். அவர் மூலமாக கரீனாவையும் நன்கு அறிய முடிந்தது. விளம்பர உலகத்தில் இருந்ததால் அவர்களை கையாள்வது எளிதாக இருந்தது என்றார் ரென்சில்.
அதை விடுங்க, கரீனா டாப்லெஸ்ஸில் நடித்துள்ளாரா என்று கேட்டபோது, உண்மையான காதலர்களை திரையில் கையாளுவது நிச்சயம் கஷ்டமானது. திரையில் அவர்களது கெமிஸ்ட்ரியை அப்படியே காட்டுவதும் சற்று யோசிக்க வேண்டியது. காரணம், இவர்களை நிஜ வாழ்க்கையில் அத்தனை பேரும் கூர்ந்து பார்க்கிறார்கள். எனவே திரையில் இவர்கள் எதையாவது செய்தால் அது நிஜத்தைப் பாதிக்கக் கூடும்.
ஆனால் கரீனாவும், சைப் அலியும் புரபஷனல்கள் என்பதால் நல்லஒத்துழைப்புடன் நடித்துக் கொடுத்தார்கள். இதற்கு முன்பு செய்யாத பலவற்றை இப்படத்துக்காக செய்துள்ளனர். அவர்களது கெமிஸ்ட்ரி அட்டகாசமாக வந்துள்ளது.
டாப்லெஸ்ஸாக கரீனா தோன்றுவது படத்தில் வரும் ஒரு காட்சிதான். ஆனால் வி சானலில் அல்லது வேறு இசை வீடியோக்களில் வருவது போல இது இருக்காது. ஒரு பெண்ணின் முதுகைக் காட்டும் காட்சி மட்டுமே இது.
நன்கு கூர்ந்து இப்படத்தைக் கவனித்தால், முதுகுப் பகுதி மட்டுமே ஆடையின்றி இருக்கும், டாப்லெஸ் அல்ல என்பதை அறிய முடியும்.
இது மட்டுமல்லாமல், ஒரு குண்டுக் காயம் , கடற்கன்னி - இதற்கான விளம்பரத்திலும் நடித்துள்ளாராம்

Thursday, October 22, 2009

நிர்வாணவாடிக்கையாளர்கள் கடையில் அட்டகாசம்


பிரிட்டனிலுள்ள எரிய்பாருள் விற்பனை நிலையமொன்றுக்குள் முழு நிர்வாணமம்க பொருட்கள் வாங்கச் சென்ற 6 இளைஞர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேற்படி நபர்கள் டொவோன் நகருக்கு அருகிலுள்ள ஹொனிட்டன் எனும் இடத்தில் எரிபொருள் விற்பனை நிலையத்திலுள்ள கடைக்குள் மாலை 6.40 மணியளவில் புகுந்து செக்ஸ் சஞ்சிகைகள் வேண்டுமெனக் கேட்டனராம். அப்போது கடையில் இருந்தவர் 22 வயதான யுவதியொருவர். நிர்வாண வாடிக்கையாளர்களைக் கண்டு அதிர்ந்துபோன அந்த யுவதி அந்நபர்களை அங்கிருந்து துரத்தினார். பின்னர் அந்நபர்கள் தாம் வந்த மினி பஸ்ஸில் ஏறிச் சென்றனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்நபர்களை இனங்காண்பதற்கான முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்னனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராக்களில் அந்நபர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளன.
அக்காட்சிகளை வெளி யிட்டுள்ள பிரித்தானிய பொலிஸார், குறித்த நபர்களை அடையாளம் கண்டால் தகவல் தருமாறு கோரியுள்ளனர்.
இக்கடையில் முகாமையாளராக பணியாற்றும் கோபு ராசலிங்கம் என்பவர் இது குறித்து கூறுகையில்,
""நான் அச்சந்தர்ப்பத்தில் கடையில் இருக்கவில்லை. எமது காசாளர் இச்சம்பவத்தினால் மிகவும் அதிர்ந்துபோனார். ஏறத்தாழ அழும் நிலைக்கு வந்துவிட்டார். பின்னர் ஒருவம்று சுதாகரித்துக்கொண்டு ஆடையணிந்துகொண்டு வருமாறு கூறி அவர்களை துரத்தியுள்ளார்.
அப்போது கடையில் வேறு வாடிக்கையாளர்கள் இருக்கவில்லை. பெண்கள், சிறார்கள் யாராவது இருந்திருந்தால் பிரச்சினையாகியிருக்கலாம்'' எனக் கூறியுள்ளார். டொவோன் பிராந்திய பொலிஸ் அதிகாரியொருவர் இது தொடர்பாக கூறுகையில் ""அக்கடைக்குள் நிர்வாணமாகப் புகுந்த சகலரும் ஆணும் 2003 ஆம் ஆண்டின் பாலியல் குற்றவியல் சட்டத்தின்படி குற்றம்புரிந்துள்ளனர்.
அவர்களை முடிந்தவரை விரைவாக இனம்காண்பதற்கு முயற்சிக்கிறோம். அந்நபர்களாகவே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவ்விடயம் சற்று மென்மையான முறையில் கையாளப்படும்'' எனக் கூறியுள்ளார்

Wednesday, October 21, 2009

நிர்வாண உடலில் கலை வண்ணம்


அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் அன்டி கோலுப் என்பவர் நிர்வாண உடலில் ஓவியம் வல்ரவதையே பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டவர். 43 வயதான அன்டி கோலுப், தலைமுதல் கால்விரல் வரை விதவிதமான உருவங்களை வரைகிறார். பலரை ஒன்றிணைத்து அவர்களின் உடலில் ஓவியங்கள் வரைவதிலும் அவர் பெயர் பெற்றவர். அண்மையில் அத்தகைய ஓவியங்களை வைத்து கண்காட்சியொன்றை யும் நடத்தினார்.
ஆனால், தனிப்பட்ட ரீதியில் கட்டணம் பெற்றுக்கொண்டும் ஓவியங்கள் வரைகிறார்.
கடைத்தெருவுக்கு பெயின்ற் பிரஸ் என்பனவற்றுடன் செல்வார். ஓவியம் வரைந்து கொள்ள விரும்பும் நபர்களின் உடல்கள்தான் இவரின் கென்வாஸ்.
""10 வருடங்கள் தொழில்சார் ஓவியராக விளங்குகிறேன். 4 வருடங்களாக மனிதர்களின் உடலில் ஓவியம் வரைகிறேன். சாதாரணமாக ஒருவரின் உடலில் வரைவதற்கு 4 மணித்தியாலங்கள்வரை செல்லும். நான் 30 நிமிடத்தில் வரைந்து விடுவேன். பார்ட்டி நிகழ்வுகளிலோ ஊர்வலங்
களிலோ அதிக எண்ணிக்கையானோர் ஓவியம் வரைந்துகொள்ள விரும்பினால் இன்னும் வேகமாக வரைந்துவிடுவேன்.
பெரும்பாலும் பெண்கள்தான் தமது உடலில் ஓவியம் வரைந்துகொள்ள வருகின்றனர். சிலவேளை ஆண்களும் வருவதுண்டு.
தனது மனைவிக்கு அல்லது காதலிக்கு பிறந்தநாள் பரிசாக ஓவியம் வரைந்துகொள்ள அழைத்து வருபவர்களும் உண்டு'' என்கிறார் கோலுப்.

Thursday, October 15, 2009

படிக்கட்டில் வைத்து நடந்த உறவு


ஜேர்மனியின் புகழ்பெற்ற டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவரான பொரிஸ் பெக்கர், உணவுவிடுதியொன்றின் படிக்கட்டொன்றில் வைத்து பெண்ணொருவருடன் ரகசியமாக உறவுகொண்டதன் மூலம் திருமண உறவுக்கு அப்பால் தனக்கு ஒரு மகள் பிறந்ததம்க கூறியுள்ளார்.
41 வயதான பெக்கர் 1999 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வை அறிவித்தபின் லண்டனில் உணவு விடுதியொன்றில் தன்னுடன் உறவு கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு பெண்குழந்தையொன்று உள்ளதாகவும் மொடல் அழகியான ஏஞ்சலா ஏர்மாகோவா எனும் பெண் சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
உணவு விடுதியொன்றில் கழிவல்றயில் தும்புத்தடி வைக்கப்படும் கபர்ட்டில் வைத்து இவ்விருவரும் உறவுகொண்டதாக அப்பேம்து செய்தி வெளியாகியது. ஆனால் படிக்கட்டில் வைத்தே தாம் உறவுகொண்டதாக அண்மையில் பேட்டியொன்றில் பொரிஸ் பெக்கர் கூறியுள்ளார்.
""கழிவறை அதற்குப் பொருத்தமான இடமாகத் தெரியவில்லை. ஆனால் கழிவறைகளுக்கு இடையிலுள்ள படிக்கட்டொன்றிலேயே அது உண்மை
யில் நடைபெற்றது.
அது எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசிநாள். அச்சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். எனது மனை
விக்கு நான் துரோகமிழைத்தை உணர்ந்தேன். அது எனது திருமண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது'' என பெக்கர் அப்பேட்டியில் கூறினார்.
ஏஞ்சலம் தனது வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருக்கவில்லை எனவும் அவருடனான தொடர்பு 5 விநாடிகள் மாத்திரமே நீடித்ததாகவும் முன்னர் பெக்கர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் அம்பலமான பின்னர் பெக்கருக்கும் அவரின் அப்போதைய மனைவி பார்பரா பெல்டஸுக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இருவரும் விவகாரத்துச் செய்தனர்.
எனினும் அவர் மூலம் பிறந்த மகள் அனா மிகவும் அழகானவள் எனவும் அக்குழந்தையை தான் மிகவும் நேசிப்பதாகவும் பெக்கர் கூறியுள்ளார்.பெக்கரின் புதிய மனைவியம்ன ஷேர்லி கேர்சன்பேர்க் விரைவில் ஒரு குழந்தைக்குத் தாயாகவுள்ளார். இது பெக்கரின் நான்காவது குழந்தையாகும்.

Wednesday, October 14, 2009

சல்மான்கானை திருமணம் செய்யத் துடிக்கும் இளைஞன்


பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலிப்பதாகவும் அவரை
திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான அஸான் அன்ஸாரி சல்மான் கானின் தீவிர ரசிகர். சாதாரண ரசிகராக அல்லாமல், சல்மானை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறாராம் அஸான். ஆணாக இருந்தால் சல்மானை திருமணம்செய்ய முடியாது என்பதால் தன்னை பெண்போல மாற்றிக்கொள்ள முயற்சிகிறார் அவர். சல்வார் கமிஸ் நகைகளைதான் அணிகிறார். தோடு, மூக்குத்தி, லிப்ஸ்டிக் என்பன மூலம்தன்னை அலங்கரிக்கும் அஸான் கடந்த 12 வருடங்களாக தான் சல்மானின் காதலியாக இருப்பதாக கூறுகிறார்.
சல்மானை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்தான் எனது உயிர். அவருக்குக்காக மட்டுமே என்னை நான் முற்றாக மாற்றிக்கொண்டேன் என்கிறார் அன்சாரி. இவர் ஏற்öகனவே திருமணமானவர். சல்மானின் காதலியாக வாழ்வதற்காக பெற்றோரையும் மனைவியையும் 8 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து வந்துவிட்டாராம்.
""சல்மானுடனான எனது உறவு என் பெற்றோருக்கும் மனைவிக்கும் பிரச்சினையாக இருந்தது. அவர்களை சமாதானப்படுத்த நான் முயன்றேன். ஆனால் சல்மானை நான் திருமணம் செய்வதற்கு அவர்கள் அனுதிக்கமாட்டார்கள் என உணர்ந்தேன். அதனால் அவர்களைவிட்டுப் பிரிய நேர்ந்தது.
சல்மான் நடித்த "மெய்ன் பியார் கியா' திரைப்படத்தை நான் எனது நண்பர்களுடன் பார்த்தபோதுதான் சல்மானின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் நடித்த மேலும் சில திரைப்படங்களைப் பார்த்தபோது அந்த ஈர்ப்பு மேலும் அதிகரித்தது. இதை எனது நண்பர்களிடம்
சொன்னபோது அவர்கள் கேலி செய்தனர். ஆனால் சல்மான் மீதான எனது ஈர்ப்பு குறையவில்லை. அது காதலாகவும்
மாறிவிட்டது'' என்கிறார்.
அவர் சல்மானுக்கு இதுவரை 1000 இற்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளாராம். சல்மான் ஒரு கடிதத்திற்கு மாத்திரம் பதில் அனுப்பினாராம். அதில் "ஐ லவ் யூ ஜான்' என சல்மான் எழுதியிருந்ததை பார்த்து உருகிப்போய்விட்டாராம் அஸான் அன்சாரி.
அஸான் அன்சாரியின் நடவடிக்கைகள் அவரின் அயலவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. ""அவர் பெண்கோலம் பூண்டிருப்பதைப் பார்த்து ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக செய்கிறார் என நினைத்தேன். ஆனால் உண்மை தெரிந்தபோது பெரும் வியப்படைந்தேன்'' என்கிறார் அஸானின் அயலவர் ஒருவர்.

Monday, October 12, 2009

இலவசதேன்நிலவு


மலேஷியாவின் மாநில அரசாங்கமொன்று தம்பதியினருக்கு இலவச தேனிவுத் திட்டமொன்றை அறிவித்துள்ளது. விவம்ரத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாம்.

மலேஷியாவின் டெரங்கனு மாநில அரசாங்கமே இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டாவது தேனிலவுத்திட்டம் என இத்திட்டம் வர்ணிக்கப்படுகிறது.
அம்மாநில அரசாங்க அதிகாரியான அஷாரி இத்ரிஸ் இது தொடர்பாக கூறுகையில் ""பிரச்சினைக்குரிய தம்பதிகள் மாநிலத்தின் அழகிய தீவுகளில் அல்லது கடற்கரைகளிலுள்ள விடுதிகளில் இரு இரவுகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். மிக விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் முன்னுதாரணமான குடும்பங்களை உருவாக்கமுடியும் என எதிர்பார்க்கிறோம்'' எனக் கூறியுள்ளாம்ர்.
அதேவேளை இத்திட்டத்தை பயன்படுத்துவதற்கு விண்ணப்பிக்கும் தம்பதிகள் உளவியல் ஆலோசனைத் திட்டமொன்றிலும் பங்குபற்ற வேண்டும் எனவும் இத்ரிஸ் கூறியுள்ளார்.

Sunday, October 11, 2009

வெள்ளை நிற காகம்

புதுச்சேரியில் அரிய வகை வெள்ளை நிற காக்கையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள காக்கைகள் ஒன்றாக கூடி மற்றொரு காக்கையை விரட்டி விரட்டி தாக்கியது. அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். வெள்ளை நிற காக் கை ஒன்றை மற்ற காக்கைகள் துரத்தியது தெரியவந்தது.
உடனடியாக வெள்ளை நிற காக்கையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வெள்ளை காக்கை பிடிப்பட்டதை அறிந்த ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் வனத்துறையில் வைக்கப்பட்டுள்ள காக்கையை அதிசயமாக பார்த்து சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘மனிதர்களில் மரபியல் மாற்றம் காரணமாக ஏற்படும் நிறமாற்றத்தை அல்பினோ மனிதர்கள் என்பார்கள். அதே போலத்தான் காக்கைகளும் நிறக்குறைபாடு காரணமாக சில சமயங்களில் வெள்ளை நிறம் ஏற்படும்

Friday, October 9, 2009

செரீனாவின் நிர்வாண போஸ்

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஈ.எஸ்.பி.என். சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ்கொடுத்துள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க பகிரங்கத் தொடரில் பட்டம் வென்று நேற்றுமுன்தினம் உலகின் முதல் நிலை வீராங்கனையாக மீண்டும் தெரிவு செய்யப் பட்ட நிலையில் அவரின் நிர்வாண புகைப்படம் தாங்கிய மேற்படி சஞ்சிகை வெளியாகியுள்ளது.

தனது உடலமைப்பு குறித்து கவலை தெரிவித்திருந்தவர் செரீனா. எனது தொடைகள்
பெரிதாகவுள்ளன. கைகள் ஆண்களின் கைகளைப் போல் உள்ளன என்றெல்லாம்
கூறியவர் அவர். ஆனால் ஆடை எதுவுமின்றி மகிழ்ச்சியுடன் தனது உடலை வெளிப்படுத்தியுள்ளார் செரீனா.

Wednesday, October 7, 2009

தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு


செல்களின் டிஎன்ஏக்களில் உள்ள தகவல்களை வைத்து எப்படி உயிர்கள் உருவாகின்றன என்பதைக் கண்டுபிடித்த தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
இவருடன் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஸ்டேய்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனத் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த மூவரும் செல்களில் உள்ள ரிபோசோம்கள் (ribosomes) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் உள்ள எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.
இவர்கள் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிபோசோம்களி்ன் அணு கட்டமைப்பை முதன்முதலாக உலகுக்குத் தெரியப்படுத்தியவர்கள் ஆவர்.
உயிர்களில உள்ள ஜீன்களில் உள்ள டிஎன்ஏக்கள் சொல்லும் தகவல்களை வைத்து ரிபோசோம்கள் தேவையான உடலுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான புரோட்டீன்களைத் (புரத சத்துக்கள்) தயார் செய்கின்றன. டிஎன்ஏக்களின் கட்டளைகளை இந்த ரிபோசோம்கள் எப்படி பெறுகின்றன, அந்த கட்டளைகளை வைத்து புரதங்களை எவ்வாறு தயார் செய்கின்றன என்பதை இந்த மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
உயிர் வாழ இன்றியமையாத ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு செல்கள், என்ஸைம்கள் எனப்படும் ஜீரண ரசாயனங்கள் ஆகியவை இந்த புரதங்களில் அடங்கும்.
ரிபோசோம்கள் எப்படி இவற்றைத் தயாரிக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளதன் மூலம் நோய்களுக்கு எதிரான மருந்துகள் உற்பத்தியில் இந்த கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கும்.
மேலும் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களில் உள்ள ரிபோசோம்களை கட்டுப்படுத்தி அவற்றின் நோய் தாக்கும் திறனை ஒழிக்கவும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவும்.
ஸ்வீடனின் ராயல் அகாடமி ஆப் சயின்ஸஸ் வழங்கும் இந்த நோபல் பரிசு வரும் டிசம்பர் மாதத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும்

Monday, August 24, 2009

வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ்








மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர்.இதில், வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டம் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவைச் சேர்ந்த அழகியே பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார். முதல் ரன்னர் ஆக மிஸ் ஆஸ்திரேலியா ராச்சல் பின்ச், மிஸ் பியூர்டாரிகோ மாய்ரா மாடோஸ் பெரேஸ், 2வது ரன்னர் ஆக மிஸ் கொசாவோ கோனா டிராகுஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ல்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Sunday, August 9, 2009

சர்வக்ஞமூர்த்தி


உலகில் அறிவியில் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், முன்னோர்களின் முத்தான கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது இன்று வரை குறையவில்லை. சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர்கள் ஏராளம். அந்த வரிசையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ¬ஈரடியில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலை, தனது 1,330 குறள் மூலம் வழங்கி, வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
அதே வரிசையில், தெலுங்கு மொழியில், 1352ம் ஆண்டு பிறந்த வேம்மண்ணா, சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக கவிதைகள் வடித்து வழங்கி, 1430ல் மறைந்த இவர், சமூக நீதியை வலியுறுத்தி பல நூறு பாடல்களை வடித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 16ம் நூற்றாண்டில் தோன்றிய சர்வக்ஞமூர்த்தி என்ற தத்துவ கவிஞர் சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை தன்னுடைய கவிதைகள் மூலம் சாடியுள்ளார்.
கேரளாவில் 18ம் நூற்றாண்டில் நாராயணகுரு பிறந்து ஆன்மீகத்தோடு சமூக பற்றையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் நால்வரும் வெவ்வேறு மொழியை சார்ந்திருந்தாலும், இவர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்தமாக மனிதர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சர்வக்ஞமூர்த்தி: சர்வக்ஞர் (சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளில் முற்றும் துறந்தவர், அனைத்தும் அறிந்தவர் என்று பொருள்). இவர் மூன்று வரிகளில், வசன வடிவில், ஆன்மீகத்துடன் கலந்த சமூக சிந்தனையுள்ள கவிதைகளை, கன்னட மொழியில் எழுதியுள்ளார்.
கன்னட வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, தார்வார் மாவட்டத்தில் கடந்த 16ம் நூற்றாண்டில், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த விதவை தாய்க்கும், சைவ பிராமண தந்தைக்கும், வனப்பகுதியில் சர்வக்ஞர் பிறந்ததாகவும், இவரது இயர் பெயர் பசுபதி தத்தா என்று தெரிய வருகிறது.
பிறந்த சில ஆண்டுகளில் பெற்றோரை பிரிந்த பசுபதி தத்தா, ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். இவரது பயணத்தில் மக்களின் துயரங்களை கண்டு கலங்கியபடி, பாடல் புனைந்துள்ளார். அப்பாடல் முடியும்போது சர்வக்ஞ... என்று முடித்துள்ளார். இதன் காரணமாக இவரை சர்வக்ஞ மூர்த்தி என்று அழைக்க தொடங்கினர்.
சர்வக்ஞர் எழுதிய மூன்று வரி கவிதைகள் மொத்தம் 2 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளன

Thursday, August 6, 2009

சுவாமி மீது சூரிய ஒளி


ராமநத்தம் அருகே சுப்ரமணியர் சுவாமி மீது சூரிய ஒளி நேரடியாக விழுந்த காட்சியை, பக்தர்கள் பார்த்து வணங்கினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையந்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கி.பி., 1017ம் ஆண்டு மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டில் இக்கோவில் பெயரை, "பிரமீசுவரமுடைய நாயனார்' கோவில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள சுப்ரமணியர் சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்கிற்கு ஒரு வாரத்திற்கு முன்பும், ஆடிப்பெருக்கு முடிந்த ஒரு வாரத்திற்குதினமும் காலை 8 மணி முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுவது ஐதீகம் என கிராம மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு கோவிலில் மட்டுமே இது போன்று அருள்பாலிப்பு தருவதாகவும், அதன் பின்னர் கடலூர் மாவட்டம் பனையந்தூர் சிவன் கோவில், "சுப்ரமணியர் சுவாமி' மீது மட்டுமேசூரிய ஒளி விழுவதாகவும் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி விழும் காட்சியைக் காண நேற்று காலை 7 மணி முதலே ஏராளமான பக்தர்கள் பனையந்தூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் கூடியிருந்தனர். காலை 8 மணி முதல் 8.05 வரை சுப்ரமணியர்சுவாமி மீது நேரடியாக விழுந்த சூரிய ஒளியை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டு வணங்கினர்.

நிர்வாண சிலை


உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலிக்கு நிர்வாண சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஆளுயர சிலையான இது ஓக்லகாமா நகரில் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் சிலை திறக்கப்படவுள்ளது.
ஜூலி, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போல இந்த சிலையை வடித்துள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த சிற்பி டேணியல் எட்வர்ட்ஸ்.
செப்டம்பர் மாதம் இந்த சிலை திறக்கப்படவுள்ளதாம். லேன்ட்மார்க் ஃபார் பிரஸ்ட்பீடிங் என்று இந்த சிலைக்கு பெயர் வைத்துள்ளனர்.
தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஜூலி பால் கொடுப்பது போன்ற புகைப்படம் கடந்த ஆண்டு வெளியான டபிள்யூ என்ற இதழில் அட்டைப்படமாக வெளியானது.
இதைப் பார்த்துதான் ஜூலிக்கு அதே போஸில் சிலை வடிக்க முடிவு செய்தாராம் எட்வர்ட்ஸ்.
இந்த சிலையை வடிக்கும் வேலையை பேன்டம்-பினான்சியல் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சேன்டி வில்சன் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் இன்று தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
தாய்மார்கள், இந்த சிலையைப் பார்த்தாவது தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வருவார்கள் என நம்புகிறோம். அந்த உயரிய நோக்கத்திற்காகவே இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்

Tuesday, August 4, 2009

சஃபீனா முதலிடம் முன்னணி வீராங்கனைகள் விமர்சனம்


ஒரு கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் கூட வெல்லாது தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வரும் ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா மீது முன்னணி வீராங்கனைஅகளான ஜெலெனா ஜான்கோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் விமர்சனம் வைத்துள்ளனர்.

செரீனா வில்லியம்ஸ், ஒரு முறை, மக்களின் நம்பர் ஒன் நானே என்று கூறி சஃபீனாவை வெறுப்பேற்றினார்.

முன்னாள் நம்பர் 1 வீராங்கனையும் செர்பிய டென்னிஸ் நட்சத்திரமுமான தினாரா ஜெலெனா ஜான்கோவிச் "எனக்கு பிறகு நம்பர் ஒன் இடத்திற்கு ஒருவர் வரவேண்டுஎன்றால் அது செரீனா வில்லியம்ஸ்தான், நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ ஒருவர் முழுத் தொடரையும் வெல்ல வேண்டும், அதே போல் நம்பர் ஒன் என்றால் வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்த வேண்டும், அந்த வகையில் வில்லியம்ஸ் சகோதரிகள்குக்கு எதிராக நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன்." இவ்வாறு சஃபீனாவை இடித்துரைத்துள்ளார் ஜெலெனா ஜான்கோவிச்.

வில்லியஸ் சகோதரிஅகள் இருவருக்கும் எதிராக சஃபீனா 2- 9 என்று பிந்தங்கியுள்ள நிலையில் ஜான்கோவிச் 8- 8 என்று சம நிலையில் உள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஷ்ய வீராங்கனை தினாரா சஃபீனா:

"தரவரிசைகளை நான் உருவாக்கவில்லை. அவர்களுக்கு கேள்விகள் இருந்தால் அதனை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பிடம் கேட்கட்டும். ஒரு ஆண்டு முழுதும் ஒருவர் எவ்வளவு போட்டிகளை வெல்கிறார் என்பது பொறுத்தே தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. நான் ஆண்டு முழுதும் விளையாடுகிறேன், கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் சிறப்பாகவே விளியாடி வருகிறேன். செரீனாவையும் வீனஸையும் வெற்றி பெற்றால் மட்டுமே நம்பர் ஒன் இடத்திற்கு வந்து விடமுடியாது, ஆண்டு முழுதும் சிறப்பாக விளியாடினால்தான் இந்த இடத்தை பிடிக்க முடியும். ஒருவரது சாதனைகள் அந்த இரண்டு வீராங்கனைகளுக்கு எதிராக எப்படி உள்ளத் என்பதைப் பொறுத்து தரவரிசைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை." என்று பொரிந்து தள்ளியுள்ளார் தினாரா சஃபீனா.

மேலும் ஜெலெனா ஜான்கோவிச், வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு எதிராக வைத்திருக்கும் சாதனை வெற்றிகள் குறித்து சஃபீனா கூறுகையில் "ஜெலெனா, வில்லியம்ஸ் சகோதரிகளை கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டியில் வீழ்த்தியுள்ளாரா? இல்லை. அடுத்த மட்ட டென்னிஸ் தொடர்களில் அவர்களை வீழ்த்துவது போதுமானதல்ல" என்று எதிர் டோஸ் விட்டார்.

கிறிஸ்டியானோ ரொலான்ல்டோ கால்கள் 90மில். பவுண்டுகளுக்கு காப்பீடு


போர்ச்சுகல் அணி வீரரும், தற்போது ரியால் மேட்ரிட் அணிக்கு மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யபட்டவருமான கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்களை ரியால் மேட்ரிட் கிளப் 90 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு காப்பீடு செய்துள்ளது.

80 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியிடமிருந்து ரொனால்டோவை விலைக்கு வாங்கிய ரியால் மேட்ரிட், அவரது கால்களுக்கு ஏற்படும் காயங்களை உத்தேசித்து இந்த காப்பீட்டை செய்துள்ளதாக பிரிட்டன் ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் முழங்காலில் ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டதால் பதறிய ரியால் மேட்ரிட் கிளப் நிர்வாகம் உடனடியாக அவரது கால்களை காப்பீடு செய்துள்ளது.

இவரை வைத்து சாம்பியன்ஸ் லீக் பாட்டம் வெல்ல ரியால் மேட்ரிட் திட்டம் வகுத்துள்ளது.

எந்திரனுக்குப் பிறகு அரசியல்


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ரஜியினின் ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன்பும், தேர்தலுக்குத் தேர்தலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்திகள் வருவது வழக்கம்.
அந்த வகையில் இப்போது எந்திரன் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டுள்ள நிலையில், ரஜினியின் அண்ணன் இதைத் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் அளித்த கூறுகையில்,
எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் தம்பி ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவருக்கு நல்லது செய்ய மட்டும்தான் தெரியும். எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இதயம் ரஜினிக்கு.
மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
அவரே இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டதால் (!), ரசிகர்களாகிய நீங்கள் எந்த குழப்பத்துக்கும் (!!) ஆளாகத் தேவையில்லை. நிச்சயம் உங்களுக்கு நல்லது எதுவோ அதைத்தான் தம்பி செய்வார்.
தம்பி வந்தால், நிச்சயம் இன்றைக்கு உள்ள பண அரசியலுக்கு முடிவு கட்டுவார். அவருக்கு இதுபோன்ற சூழலே பிடிக்காது. பார்ப்போம்… ஆண்டவன் என்ன கட்டளை இடப் போகிறாரோ…
தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம், மக்களுக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் சத்யநாராயணா.
வேலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர் மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க சத்யநாராயணா ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது

Wednesday, July 22, 2009

17ம் நூற்றாண்டில் சூரியகிரகணம்:


கி.பி.17ம் நூற்றாண்டில் நடந்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கோயில் கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன், பழனியாண்டவர் பெண்கள் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் னோன்மணி,செல்வநாயகி, திலகவதி கொண்ட குழு பழநி பெரியநாயகியம்மன்
கோயிலில் நடத்திய ஆய்வில் சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது அறிக்கை: ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயில் கி.பி.14ம் நூற்றாண்டில் மாலிக் காபூர்படையெடுப்பால் அழிந்தது. அதன்பின் கி.பி. 17ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் சீரமைக்கப்பட்டது. இக்காலத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் யாகசாலை சுவரில் உள்ளது. இதில் உள்ள 4 வரிகளில் 2-வது வரிசூரியகிரகணத்தை குறிப்பிடுவது (சூரிய கிறாண புண்ணியகாலத்தின்...என்ற வரி). கி.பி. 17ம் நூற்றாண்டில் நடந்த ஒரு சூரிய கிரகண தினத்தன்று பழநி பெரிய நாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்திற்காக நிலம் தானமாக நீர் வார்த்து கொடுக்கப்பட்டது என்பது கல்வெட்டின் சாரம்சம். கல்வெட்டு மூலம் கிடைக்கும் தகவல்அரசனின் ஆட்சி ஆண்டு இருந்த பகுதி சிதைந்துள்ளதால் அவர் யார்என்பது தெரியவில்லை. இதிலுள்ள எழுத்துக்களை வைத்து பார்க்கும் போது, திருமலைநாயக்கரின் காலமான கி.பி. 17ம் நூற்றாண்டு என கொள்ளலாம். அக்காலத்தினர் சூரிய கிரகணம் குறித்து முன்கூட்டியே அறிந்துள்ளதும், அன்று கோயில்களுக்கு தானம் அளிக்கும் வழக்கம் இருந்ததும் உறுதியாகிறது. புண்ணிய காலம்: மலைக்கோயில் மூலவர் கருவறையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மல்லிகார்ச்சுனராயர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டிலும் சூரிய கிரகணம் குறித்தவார்த்தைகள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுகளும் கிரகண காலத்தை"புண்ணிய காலம்' என்றே குறிப்பிடுகிறது. ஆனால், இன்று இக்காலத்தை கெட்ட நேரம், சுனாமி ஏற்படும் நேரம் என்று சிலர் கூறுகின்றனர்தற்போதைய கிரகணம் 6 நிமிடம் 39 நொடிகள் நிகழும். இதுபோல் 360ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவேபெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு காலம் கி.பி. 1649ம் ஆண்டாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Thursday, July 2, 2009

மகா கும்பாபிஷேகம்



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. 14 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அனைத்தும் குன்றுகளின் மீதும் மலை மீதும் அமைந்து இருக்க, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டும் கடற்கரையில் அலைகளின் ஆர்ப்பரிப்பில் 137 அடி உயர ராஜகோபுரத்துடன் நிமிர்ந்து நிற்பது மற்ற சிறப்புகளுக்கு எல்லாம் சிகரமானதாகும்.மற்ற முருகனை எல்லாம் பக்தர்கள் தரிசிக்க மலைமேல் ஏறி செல்ல வேண்டும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க பக்தர்கள் இறங்கி வரவேண்டும். மனதாலும், உடலாலும் இறங்கி வரும் பக்தர்களை காக்கின்ற கண்கண்ட தெய்வம் பாலசுப்பிரமணியர்.
அளவிட முடியாத இத்தனை சிறப்புகளை கொண்ட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 9-7-1995 அன்று நடந்தது.14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.21/2 கோடி செலவில் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
திருப்பணிகளால் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, வெங்கடாசலபதி, நடராஜர் உள்பட அனைத்து சன்னதிகளும், விமானங்களும், ராஜகோபுரமும் திருப்பணிகள் செய்யப்பட்டன. இந்த திருப்பணிகள் மூலம் கோவில் புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.
கும்பாபிஷேக விழா கடந்த 26-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். வெங்கடாசலபதிக்குரிய யாகசாலை பூஜையை பட்டாச்சாரியார்கள் நடத்தினார்கள்.

Sunday, June 28, 2009

கட்டபொம்மன் காலத்து வெண்கல மணி ஒலிக்குமா?


திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்திலுள்ள கட்டபொம்மன் காலத்து மணியை ஜூலை 2-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது ஒலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வீமராஜா கூறியதாவது:
வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை திக்குவிஜய கட்டபொம்மு துரை ஆட்சியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெண்கல மணி வழங்கப்பட்டது. இந்த மணி கோயில் ராஜகோபுரத்தின் 7வது நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது இந்த மணி ஒலிக்கப்படும். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரையுள்ள 40 மணி மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்த மணிகள் ஒலிக்கும்.
அதன்பிறகே கட்டபொம்மன் பூஜை முடித்து காலை உணவை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் கோயில் பிரசாதம் குதிரை வீரர் மூலம் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்திலுள்ள மணி கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போது ஒலிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதன் இரும்பு சங்கிலிகள் துருப்பிடித்து இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தற்போது ஜூலை 2ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டபொம்மன் காலத்து மணியின் சங்கிலியையும் சரி செய்து கும்பாபிஷேகத்தின் போது ஒலி எழுப்பச் செய்யவேண்டும். தொடர்ந்து கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மணி ஒலிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளவேண்டும். இதன்மூலம் கட்டபொம்மன் காலத்து நினைவுகள் மலரும்.

Wednesday, June 24, 2009

கொதிக்கும் நெய்யில் கைகளால் பணியாரம் சுட்ட தம்பதி



திருவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் கணவன், மனைவி இருவரும் கொதிக்கும் நெய்யில் பணியாரம் சுட்டனர். இதைக் காண ஏராளமானோர் திரண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் முத்து இருளாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறும். கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக சாமியாடியும், அவரது மனைவியும் கொதிக்கும் நெய்யில் கைகளை விட்டு குழிப்பணியாரம் சுடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில் சாமியாடி ஆறுமுகப்பெருமாள்(55), மனைவி சுந்தரம்மாள்(50) ஆகியோர் பணியாரம் சுடத் தயாராகினர்.
மேளங்கள் முழங்க, பெண் பக்தர்கள் குலவை ஒலியெழுப்ப மாவை எடுத்து கொதிக்கும் நெய்யில் கையை விட்டு பணியாரம் சுட தொடங்கினர்.
கரண்டி எதுவுமின்றி பணியாரத்தை கையால் எடுத்து சேகரித்தனர். விடிய, விடிய ஆயிரத்துக்கும் அதிகமான பணியாரங்களை சுட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி அதிகாலை 4 மணி வரை நடந்தது. பின்னர், சாமிக்கு பணியாரங்கள் படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து சாமியாடி ஆறுமுகப்பெருமாள் கூறுகையில், ‘Ôஇந்த கோயிலில் பரம்பரையாக பணியாரம் சுடுகிறோம். 1982ம் ஆண்டு முதல் 27 ஆண்டாக பணியாரம் சுடுகிறேன்Ó என்றார்.

Monday, June 22, 2009

வீரகேசரி மென்பந்துச் சுற்றுப்போட்டி

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற வீரகேசரி நிறுவனத்தின் ஊழியர்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப்போட்டியில் ஒன்லைன் டிபென்டர்ஸ் அணி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது. அந்த நிகழ்வின் சில ஒளிப்படங்கள்.








Thursday, May 7, 2009

ஐ பி எல் கிசுகிசு

கைப்புள்ள கணக்காகக் கதறுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. போட்டிகளில் மற்ற ஏழு அணிகளும் வெளுத்துக் கட்டுவது போதாதென்று, உள்ளுக்குள்ளேயே ஊமைக்குத்து விழுந்தால், பாவம், என்னதான் செய்வார்கள்? முகம் தெரியாத ஒருவரின் கண்ணாமூச்சி கபடிதான் ஷாரூக்கின் அணிக்கு புது இம்சை. போலி ஐ.பி.எல். பிளேயர் என்ற பெயரில் சுய அறிமுகம் இல்லாமல் ஒரு வலைப்பூ அது. (http://fakeiplplayer.blogspot.com)
தான் ஒரு கொல்கத்தா அணி வீரர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த பிளாக் எழுத்தாளர், கொல்கத்தா மற்றும் பிற அணி வீரர்களின் அந்தரங்கத்தைக் கிசுகிசு டைப்பில் எழுதி அம்பலமாக்குகிறார். கோச் ஜான் புக்கனனுக்கு 'பூக்கா நான்', யுவராஜ் சிங்குக்கு 'பிரின்ஸ் சார்லஸ் ஆஃப் பாட்டியாலா' என்று ஒவ்வொருவருக்கும் விதவித பட்டப் பெயர்கள். அவை உண்மையா, பொய்யா என்று தெரியாத நிலையில், இந்திய வீரர்கள் பற்றி அதில் சிதறியிருக்கும் சில கிசுகிசுக்கள்...
பஞ்சாப் வீரர்கள் 'ஓபியம்' என்ற பாரில் பெண்களைக் கிண்டலடிக்க, அவ்வணியின் சிக்ஸர் பேட்ஸ்மேன் வழக்கம் போல ஓர் அழகான பெண்ணை உஷார் பண்ணித் தள்ளிக்கொண்டு சென்றுவிட்டார். முன்னாள் கேப்டனும் இன்னாள் வர்ணனையாளருமானவர் 'ஆன்ட்டி' ஹீரோவாகி, அழகு அம்மணிகளை வர்ணித்து வர்ணித்தே வாரிச் செல்கிறார்.
எங்கள் அணியில் இருக்கும் முடியும் உடலும் வளர்த்தியான இந்திய பவுலர் பார்ப்பதற்கு அம்மாஞ்சியாக இருந்தாலும், தென்ஆப்பிரிக்கா வந்ததில் இருந்து நெட் பிராக்டீஸைவிட செக்ஸ் பிராக்டீஸ்தான் அதிகம் செய்கிறார்!
சாம்பியன் அணியின் ஷாம்பெய்ன் ஸ்பின்னருக்குத் தனது புது ஓனர் கம் நடிகை மீது ஒரு கண். ஐ.பி.எல். சீஸன் 2 ஆரம்பித்ததில் இருந்தே அந்த ஒல்லி நடிகையை வீழ்த்தப் போராடுகிறார். விரைவிலேயே திருமணம் ஆகவிருப்பதால், நடிகையிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ். துக்கத்தை மறைக்க வழக்கம் போல் நாளுக்கு மூன்று பெண்களோடு சல்லாபிக்கிறார் ஸ்பின்னர்!
கவர்ச்சி உடை அணிந்து கிரிக்கெட் விவாதிக்கும் அந்த மந்திர லேடிதான் ஃபாரின் கிளிகள் சிக்காத வீரர்களுக்கு ஆறுதலும்அடைக் கலமும் தருவது. இதனால் அவரது ஒவ்வொரு இரவும் படு பிஸி!
கடந்த வருடம் கட்டிப்பிடி நடிகையும், புரூஸ் லீ வேகத்தில் பந்து வீசும் ஆஸ்திரேலிய பவுலரும் ஏடாகூடமாக இருப்பதைக் காதலர் பார்த்ததுதான் காதல் கசந்ததுக்குக் காரணமாம். இம் முறை, அணியில் விளையாடாவிட்டாலும், நடிகையைப் பார்ப்பதற்காகவே அந்த பவுலர் கிடைத்த கேப்பில் தென்னாப்பிரிக்கா வந்து செல்ல, மொத்தமாகக் கை கழுவிவிட்டார் காதலர்!
இதையெல்லாம் யார் எழுதுவது என்று கண்டுபிடிக்க முடியாமல், வீரர்களுக்கு இன்டர்நெட், லேப்டாப் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. அணியில் இருக்கும் வீரர்களில் ஆர்குட், ஃபேஸ்புக், பிளாக் இவற்றில் தீவிரமாக இருக்கும் ஆகாஷ் சோப்ராவைச் சந்தேகப்பட்டு, அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினார் ஷாரூக். ஆனாலும், பிளாக் அப்டேட்கள் குறைந்தபாடில்லை.
'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கடைசி ஆட்டம் முடிந்ததும், நான் யார் என்று உலகுக்கு அறிவிப்பேன். அதோடு, கிரிக்கெட்டில் இருந்தே விலகிவிடுவேன்' என்று அறிவித்திருக்கிறார் அந்த பிளாக் ஷீப். ஐ.பி.எல். மேட்ச்களைக் காட்டிலும், இந்த பிளாக் தகவல்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்!

Monday, May 4, 2009

பயந்தால்பார்க்காதே.....







கம்பளை ஆதார வைத்தியசாலையில் (23.04.2009) இளைஞர் ஒருவரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியாக வெளியேறிய 4 அடி நீளமுள்ள மரக்கிளையொன்றினை கம்பளை வைத்தியசாலையின் விஷேட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கணிஸ்ட்ட கமல் வைத்திய குழுவினர் சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.
கம்பளை தெல்பிட்டியைச்சேர்ந்த சமிந்த குமாரஎன்ற 25வயது இளைஞர் குறுந்துவத்தை என்ற இடத்தில் பாரிய செம்பக மரம் ஒன்றினை வெட்டிக்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக மரம் சரியவே ஓடும் பொழுது கால் இடறி வீழ்ந்ததால் இளைஞரின் அருகிலே விழுந்த மரத்தில் இருந்த கிளை ஒன்று இளைஞரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியோக வெளியேறியதையடுத்து 1 1/2 மணித்தியாலய போராட்டத்திற்கு பின் கம்பளை வைத்திய சாலைக்குசெல்லப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் மரக்கிளை அகற்றப்பட்டது

Sunday, April 26, 2009

பிரதமர் மன்மோகன்சிங் மீது `ஷூ' வீச்சு




குஜராத் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மன்மோகன்சிங் மீது என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஒருவர், `ஷூ' வீசினார். மேடைக்கு சற்று தொலைவிலேயே அது விழுந்தது.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் மீது செருப்பு வீசும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 1983-ம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை விடுவித்ததற்காக, கடந்த 7-ந் தேதி அன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஒருவர் ஷூ வீசினார்.
அதன் பிறகு, ஏப்ரல் 10-ந் தேதியன்று அரியானா மாநிலம் குருசேத்ராவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிந்தால் மீது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவர் ஷூ வீசினார். அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி அமர்ந்திருந்த மேடை மீது அதிருப்தி பா.ஜனதா பிரமுகர் ஒருவர் செருப்பை எறிந்தார். அந்த வரிசையில் பிரதமர் மன்மோகன்சிங் மீது நேற்று ஷூ வீசப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் முதன் முறையாக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஆமதாபாத் நகரில் உள்ள தாகூர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் அவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்து ஒரு வாலிபர் திடீரென எழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், தனது `ஷூ'வை கழற்றி பிரதமர் மன்மோகன்சிங்கை நோக்கி வேகமாக வீசினார்.
ஆனால், மேடை வரை அது செல்லவில்லை. பிரதமர் இருந்த இடத்தில் இருந்து சில அடிகள் முன்னதாக மைதானத்தில் விழுந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக 30 அடி தொலைவில் மேடை அமைக்கப்பட்டு இருந்ததால் பிரதமர் மேடையில் ஷூ விழவில்லை.
உடனே, பிரதமரின் பாதுகாப்புக்கு நின்றிருந்த தேசிய பாதுகாப்பு கமாண்டோ வீரர்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து இழுத்துச்சென்றனர். பின்னர், மாநில குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், `அந்த வாலிபரின் பெயர் ஹிதேஷ் சவுகான் என்பதும் பாபுநகரை சேர்ந்த அவர், ஆமதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்ïட்டர் என்ஜீனியரிங் மாணவர் என்பதும்' தெரியவந்தது.
இதற்கிடையே, ஷூ வீச்சு சம்பவம் நடந்த போதிலும் பிரதமர் தனது பேச்சை பாதியில் நிறுத்தவில்லை. முழுமையாக பேசி முடித்த பிறகு, மாநில காங்கிரஸ் தலைவர் சக்தி சிங்கை அழைத்து, `அந்த மாணவரை மன்னித்து விட்டேன். அவர் மீது வழக்கு எதுவும் பதியாமல் விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோகில், "பிரதமர் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது'' என்றார்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், "இதுபோன்ற சம்பவங்களை எப்போதுமே நாங்கள் கண்டித்து வருகிறோம். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க ஏராளமான வழிகள் உள்ளன. இந்த சம்பவத்தால் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் கூறுவது அற்பத்தனமானது. டெல்லியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டபோது காங்கிரஸ் என்ன செய்தது'' என்றார்.