Sunday, April 26, 2009

பிரதமர் மன்மோகன்சிங் மீது `ஷூ' வீச்சு




குஜராத் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மன்மோகன்சிங் மீது என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஒருவர், `ஷூ' வீசினார். மேடைக்கு சற்று தொலைவிலேயே அது விழுந்தது.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் மீது செருப்பு வீசும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 1983-ம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை விடுவித்ததற்காக, கடந்த 7-ந் தேதி அன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஒருவர் ஷூ வீசினார்.
அதன் பிறகு, ஏப்ரல் 10-ந் தேதியன்று அரியானா மாநிலம் குருசேத்ராவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிந்தால் மீது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவர் ஷூ வீசினார். அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி அமர்ந்திருந்த மேடை மீது அதிருப்தி பா.ஜனதா பிரமுகர் ஒருவர் செருப்பை எறிந்தார். அந்த வரிசையில் பிரதமர் மன்மோகன்சிங் மீது நேற்று ஷூ வீசப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் முதன் முறையாக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஆமதாபாத் நகரில் உள்ள தாகூர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் அவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்து ஒரு வாலிபர் திடீரென எழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், தனது `ஷூ'வை கழற்றி பிரதமர் மன்மோகன்சிங்கை நோக்கி வேகமாக வீசினார்.
ஆனால், மேடை வரை அது செல்லவில்லை. பிரதமர் இருந்த இடத்தில் இருந்து சில அடிகள் முன்னதாக மைதானத்தில் விழுந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக 30 அடி தொலைவில் மேடை அமைக்கப்பட்டு இருந்ததால் பிரதமர் மேடையில் ஷூ விழவில்லை.
உடனே, பிரதமரின் பாதுகாப்புக்கு நின்றிருந்த தேசிய பாதுகாப்பு கமாண்டோ வீரர்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து இழுத்துச்சென்றனர். பின்னர், மாநில குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், `அந்த வாலிபரின் பெயர் ஹிதேஷ் சவுகான் என்பதும் பாபுநகரை சேர்ந்த அவர், ஆமதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்ïட்டர் என்ஜீனியரிங் மாணவர் என்பதும்' தெரியவந்தது.
இதற்கிடையே, ஷூ வீச்சு சம்பவம் நடந்த போதிலும் பிரதமர் தனது பேச்சை பாதியில் நிறுத்தவில்லை. முழுமையாக பேசி முடித்த பிறகு, மாநில காங்கிரஸ் தலைவர் சக்தி சிங்கை அழைத்து, `அந்த மாணவரை மன்னித்து விட்டேன். அவர் மீது வழக்கு எதுவும் பதியாமல் விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோகில், "பிரதமர் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது'' என்றார்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், "இதுபோன்ற சம்பவங்களை எப்போதுமே நாங்கள் கண்டித்து வருகிறோம். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க ஏராளமான வழிகள் உள்ளன. இந்த சம்பவத்தால் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் கூறுவது அற்பத்தனமானது. டெல்லியில் ப.சிதம்பரம் மீது ஷூ வீசப்பட்டபோது காங்கிரஸ் என்ன செய்தது'' என்றார்.

Saturday, April 25, 2009

எட்டு வயது சுட் டி . ..

திருச்சி மக்கள வைத்தொகுதியில் போட்டியிடும் லட்சியதி.மு.கவேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறர்.
இலங்கைத்தமிர்களின் நிலையை முன்வைத்து பிரசாரம் செய்யும் மன்சூர்அலிகானுக்கு ஆதரவாக, அவரது மூத்த மகள் லைலா, இளைய மகள் தில்ரூபா ஆகியோர் திறந்த வேனில் சென்றபடிபிரசாரம்செய்துவருகின்றனர்.
ராம்ஜிநகர்பகுதியில் அண்மையில்பிரசாரம் செய்த‌போதுபேசியதில்ரூபா, "" பாசத்திற்கும், நேசத்திற்கும் உரியதமிழ்மக்களே! எனது தந்தைக்காக இங்கு வாக்கு கேட்டு நான் வந்துள்ளேன். இதுவரை எத்தனையோ பேருக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் நோட்டை மட்டுமே சம்பாதித்து விட்டு உங்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்து பட்டை நாமம் சாத்தி விட்டார்கள். தமி ழ் உணர்வுள்ளர்களே! எனது தந்தையை உங்கள் வேலைக்காரனக தேர்ந்தெடுத்தால், அவர் மக்களவையில் தமிழர்களுக்காக சண்டையி ட்டாவது வெற்றி யைத் தேடி தருவார்' என்றாறர்.

Friday, April 24, 2009

ஏன்மறந்தீர்?

ஏன்மறந்தீர்?
விவாகரத்துக்கு நீதிமன்றம்
ஏறி இறங்கும்தம்பதியரே
உங்கள் சந்தோச உயிர்ப்பான
பிள்ளைகளின் எதிர்காலத்தை
சிந்திக்கவேண்டாமா?
உங்கள் சுயநலம் பெரிதா?
பிள்ளைகள் நல்வாழ்வுபெரிதா?
வஹாப்,கல்பிட்டி


மேலே உள்ளகவிதையின்
சுயநலம் பெரிதா ?
பிள்ளைகள் வாழ்க்கை பெரிதா ? என்ற கேள்விக்கான பதில்கவிதை

காதலித்து கரம்பிடிப்பவர்களே
கடைசி மூச்சு வரை காதலியுங்கள்
சுய நலத்துக்காக வாழ நினைக்கும்
பெற்றோர்களே நீங்கள்
உங்கள் பிள்ளையின் வாழ்வுக்காக
வாழ்ந்து கொள்ளுங்கள்
ஐ. நஸ்ரின்,
நிந்தவூர் 15.
கசத்துப் போன
வாழ்க்கையில் எதற்கு
சுய நலம் எனக்கு
என் தியாகங்களெல்லாம்
அவர்களின் நல்வாழ்வு
பெரிதென்பதற்காக
என். சஹீம்,
அக்கரைப்பற்று
பிள்ளைகள் நல்வாழ்வு
பெரிதென கருதின்
அவர் தாம் புத்திசாலி தம்பதியினர்
ஜெஸீமா அஸீஸ்
அலபடகம
கணவன் மனைவி என்ற
இருதயக் கூண்டின் இடைவெளியில்
பிரிவு எனும் பிணக்கு உதித்த பிறகு
அவர்கள் நலம் பேணுவதே
கேள்வியாக மாறியுள்ளவேளை
அன்புச் செல்வங்கள் பிள்ளைகள்
நலம் பெரிதென எப்படிக் கருதுவார்கள்!
சாலிஹ எம்.றியாழ்,
சுங்காவில்
கல்யாணச் சந்தையிலே இவர்களின் உணர்ச்சிக்கு
மதிப்பளிப்பதில்லை இவர்களின் பெற்÷றார்கள்
அதனால்தான் விவாகரத்து மேடையில் இவர்களின்
குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு
மதிப்பளிப்பதில்லை.
இவர்கள் அங்கும் சுய நலம் இங்கும் சுயநலம்
மொத்தத்தில் இந்த உலகிலில்லை பொது நலம்

சுபையில் அஸீஸ்
சாய்ந்தமருது 05
விவாகரத்து பெற்று உன் குழந்தையின்
உறவை ரத்து செய்து
உறவுகள் பிரிந்தபின்
நீ வாழ்ந்து என்ன பயன்?
ஐ.ஹலால்தீன்
அப்புத்தளை
குழந்தைகளின் அன்பை!
மழலை சிரிப்பை மறந்த
தம்பதிகளே! உங்கள் பிரிவால்
வாடுவது ஒன்றும்அறியாத
குழந்தைகள் என்பதை மறக்காதீர்
விவாகரத்தை! நினைக்காதீர்கள்
தன்னைக் கேட்டு பிறக்காத
குழந்தைகளை நாம்
மண்ணைவிட்டு போகும்வரை
பாதுகாப்பதே உண்மையான
தம்பதிகளுக்கு உத்தரவாதம்
கிரேக் ஆர். சிசுபாலன்
பண்டாரவளை
பிள்ளைகளின் நல்வாழ்வு
எதிர்காலம் சந்தோஷம் எல்லாம்
கருத்திற் கொண்டு புரிந்து வாழணும்
இதுவே பெரிதும் நியாயமானது
பாத்திமா பைரோஸா பாஸி,
எஹலியகொடை
நல்ல அம்மாவாக ஏன் அப்பõவாக
மணவாழ்வில் வாழ முடியாத நிலையில்
பிள்ளைகளின் எதிர்காலம் எண்ணியே
விவாகரத்து நீதிமன்றத்தில் நாம்!
அனுஷா ஜெயந்தி,
வத்தேகம
பிள்ளைகளின் நலன்
அவரவர் பெற்றோரின்
சுயநலத்தில் தான் தங்கியுள்ளது.
ப. கனகேஸ்வரன்,
பொகவந்தலாவை
உங்கள் சுயநலத்துக்காக பிரிந்தீர்கள்
உங்கள் வாழ்க்கைக்காக எதை இழந்தீர்
உங்கள் அன்பான பாசப் பயிர்கள்
எங்களை ஏன் மறந்தீர்கள்?
கே. கஜேந்திரன்,
நாவலப்பிட்டி.
முட்கள் நிறைந்த வாழ்வின்
சுயநலம் கருதாது பிள்ளைகள்
எதிர்காலம் எண்ணி வாழ்ந்திடலாம்
ஆனால்.....
அதுவே பிள்ளைகளுக்கு பாதிப்பை தருமாயின் ....
சிந்தித்தால் ...
நலவாழ்வு கலந்த சுயநலம் பெரிது.
ஆ.கீதா,
கடியன்லேன
பிரச்சினைகள்
தொடருமானால் பிள்ளைகளின்
வாழ்வு பாதிக்கப்படும்
எல்லாவற்றுக்கும் தீர்வு
காண்பதற்காகவே
இச் செயற்பாடு
மு.ச. பாத்திமா ஸஹீறா
காத்தான்குடி 04
பிள்ளைகளின் எதிர்காலம்
கருதி தன்னையே
தியாகம் செய்து
தனியாக தன் செல்வங்களைக்
காத்து பராமரிப்பவள்
தாய் ஒருத்தி மட்டுமே
ஜெ. ஷீமா ஹக்,
கண்டி
இருபத்தி ஓராம் நூற்றாண்டு
சமுதாயம் இது பிள்ளைகள்
வளர்ப்பை வாழ்வையெல்லாம்
நினைக்க எங்கே நேரம்
இருக்கு?
ஏ.பி.யூ.எல். முஸ்தபா பஸ்னா
காத்தாகுன்டி 06
நீங்கள் கடந்து வந்த பாதை
முள்ளோ மலரோ எதுவோ
மறந்திடு
உன் செல்வங்கள்
நற் பாதையில் பயணிக்க
உங்கள் கலங்கிய வாழ்க்கைப் பந்தலில்
வளரவிடு வாசனை மல்லிகையை
அலி மூஸா,
நிந்தவூர் 03
ஒரு வேளை உண்ண அவதியுறும்
இவ்வேளை விவாகரத்து நீதிமன்றம்
விபரமறியாமல் ஏறி இறங்கும்
தம்பதியர் மத்தியில்
புரிந்துணர்வும், விட்டுக்கொடுப்பும்
இல்லாமையே முதன்மை காரணம்!
முஹம்மது முகாரம்,
ஏறாவூர்02
சுகமான சுயம் வரம் எனக்கு சிசு வொன்றை தந்தது
என் கணவன் இன்னொருவரின்
துணையாகிப் போனான்
என் நிலை கண்ணீர்க் கதை
அதில் சுயநலம் பெரிதா
பிள்ளையின் சுக வாழ்வு பெரிதா
எதைப் பற்றி சிந்திக்க எனக்கு
என்னையே சுமையாகிப் போனால் வாழ்வே
போராட்டமானால்
நான் என்ன செய்வதறியேன் இந்நாளில்
யூ.எல்.எம். பிர்தௌஸ்,
சாய்ந்தமருது 07
உடன் பிறப்புகளுடன் பிரச்சினை
வரும் போது நீதிமன்றங்களைத் தேடி
ஓடாத சுயநலவாதிகளே
புருஷன் மனைவிக்கிடையில்
சிறு பிரச்சினை வந்தாலும் பிள்ளைகளின்
நல்வாழ்வைக் கருதாமல் நீதிமன்றங்களை
தேடி ஓடுகிறீர்களே உங்களைத்
தூக்கு மேடைக்குத்தான் அனுப்ப வேண்டும்
ஸனூன் ஸரீமா பயாஸ்,
மக்கொன
என்ன சொல்வது அதையும் எப்படிச் சொல்வது
தூக்கத்திலும் வரும் துக்கமாக
மனிதன் நெருப்புத் தணலை விழுங்கும்
கேள்விகளால்
முடிவுரைக்கு மட்டும்தான் நல்ல எதிர்காலங்கள்
பணம் தேடும் பெற்றோர்கள்
மானிட ஜனனத்தை புரியாத வரை
எதிலும் சுயநலம்தான் அவர்களுக்கு சோபனம்!!
யாசீன் பாவா ஹுசைன்,
பொத்துவில்
வீணாக ஏறியிறங்கும் தம்பதியரே....
உங்கள் பிள்ளைகளின் நலம் பேணுங்கள்!
உங்கள் சுய நலம் வேண்டாம்?
உங்கள் வாழ்க்கையும் வீணாக்கிவிடும்!
எம்.எஸ்.எம். முலௌபர்
வெல்லம்பிட்டி

Wednesday, April 22, 2009

ஐஸ்வர்யாராயைகேட்டசுயேச்சை




வேலூரில் மனிதன் என்ற வித்தியாசமான பெயர்கொண்ட சுயேச்சை வேட்பாளர் தேர்தல் களத்தை கலக்கி வருகிறார். ஜனாதிபதி ஆகும் வரை பின்னால்தான் நடப்பேன் என்று சபதம் செய்துள்ள இவர், தற்போது மக்களவை தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்.
வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு நேற்று மனிதன் வந்தார். தனக்கு சின்னமாக பார்லிமென்ட் கட்டிடம், தாஜ்மகால் அல்லது ஐஸ்வர்யா ராயை ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டார். ‘அப்படி எல்லாம் ஒதுக்க முடியாது. தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னங்களில் ஒன்றைத்தான் தர முடியும் என்று கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.
சுயேச்சைகளுக்கு இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 59 சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
அலமாரி, பலூன், வாழைப்பழம், கூடை, கிரிக்கெட்மட்டை, மட்டை பந்தடி வீரர், மின்கல விளக்கு, கரும்பலகை, ரொட்டி, கைப்பெட்டி, பிரஷ், கேக், புகைப்பட கருவி, மெழுகுவர்த்திகள், கேரட், கூரை மின்விசிறி, கோட்டு, தேங்காய், சீப்பு, கட்டில், கப் அண்ட் சாஸர், டீசல்பம்ப், சிவிகை, மின்கம்பம், முள்கரண்டி, சிறுமியர் சட்டை, வாணலி, வாயுசிலிண்டர், வாயுஅடுப்பு, கண்ணாடி தம்ளர், ஆர்மோனியம், தொப்பி, ஐஸ்கிரீம், இஸ்திரிபெட்டி, கூஜா, கொதிக்கெண்டி, பட்டம், சீமாட்டி பணப்பை, கடிதப்பெட்டி, மக்காச்சோளம், முரசு, பிரஷர்குக்கர், ரயில்இன்ஜின், மோதிரம், சாலைஉருளை, ரம்பம், கத்தரிக்கோல், தையல் இயந்திரம், இறகுப்பந்து, சிலேட், தேக்கரண்டி, ஸ்டூல், மேஜை, மேஜைவிளக்கு, தொலைக்காட்சிபெட்டி, கூடாரம், வயலின், ஊன்றுகோல், ஊதல்.
இந்த சுயேச்சை சின்னங்களில் ஏதாவது 3 சின்னங்களை குறிப்பிட வேண்டும். அதில் ஒரே சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

நடிகர் ஜிதேந்திரா மீது செருப்பு வீச்சு

மகாராஷ்டிராவில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் ஜிதேந்திரா மீது செருப்புகள் வீசப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது, ஈராக் நிருபர் ஒருவர் ஷ§ வை எறிந்ததில் இருந்து, இந்த கலாசாரம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜிண்டால், பா.ஜ. தலைவர் அத்வானி ஆகியோர் மீதுஷூ க்கள் வீசப்பட்டன.
கோவாவில், காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மீது பிரியாணி பொட்டலம் வீசப்பட்டது. இப்போது, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் ஜிதேந்திரா மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் ஜிதேந்திராவின் நெருங்கிய நண்பர், மகாராஷ்டிரா முன்னள் அமைச்சர் அமரீஷ் படேல், காங்கிரஸ் சார்பில்தூ
லி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்ய தூ
லிக்கு ஜிதேந்திரா நேற்று வந்தார். இதையட்டி உள்ள நந்தூ
ர்பார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்ராவ் கவிட் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நந்தூ
ர்பாருக்கு சென்றார் ஜிதேந்திரா, அங்கு சாலையோரங்களில் கூடியிருந்த மக்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது, ஜிதேந்திரா மீது ஒருவர் செருப்புகளை தூ
க்கி விசினார். அவரது அருகில் செருப்புகள் விழுந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
செருப்புக்களை விசிய நபர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. வீடியோவில் பார்த்த போது, தாடி வைத்த ஒருவர், ஜிதேந்திரா மீது செருப்புகளை வீசியுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி அமரீஷ் படேல் கூறுகையில், ஜிதேந்திரா மீது செருப்புகளை வீசிய ஆசாமி குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. திட்டமிட்டே செருப்புக்கள் வீசப்பட்டுள்ளனஎன்றார். செருப்புகளை வீசிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Wednesday, April 8, 2009

சிதம்பரமும்ஷூவும்

இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மீது சப்பாத்து வீசிய சம்பவம்பரபரப்பாகப்பேசப்படுகிறது. தலைவர்களை அவமானப்படுத்தும் கலாசாரத்துக்கு பத்திரிகையாளர்களும் அடிமையாவது கவலையளிக்கிறது.பத்திரிகைகளளில் வெளியான சிலபுகைப்படங்கள்.










Tuesday, April 7, 2009

தேன்நிலவு கொண்டாட ரூ.11,000


ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் படுக்கையில், புது மணத்தம்பதியர் தேன்நிலவு கொண்டாடலாம். ஒரு நாள் இரவுக்கு கட்டணமாக ரூ.11,000 செலுத்த வேண்டும்.
ஈராக்கின் சிங்கமாக இருந்த அதிபர் சதாம் உசேன், அமெரிக்க படையினரால் 2003ல் பதவியை விட்டு விரட்டப்பட்டார். பின்னர் பாதாள குகை ஒன்றில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்க படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2006ல் அவரை தூக்கிலிட்டு கொன்றனர்.
சதாம் இருந்த காலம் வரையில் சர்வாதிகாரியாக, ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது கழிவறை, கை கழுவும் குழாய் கூட தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன என்றால், அவரது சொகுசு வாழ்க்கை புரிந்து இருக்கும். அவர் ஓய்வெடுப்பதற்காக, தலைநகர் பாக்தாத் அருகே ல்லா நகரில் ஒரு அரண்மனையை கட்டியிருந்தார்.
அமெரிக்க படையினர் வசம் ஈராக் வீழ்ந்தபின், இந்த அரண்மனையில்தான் அமெரிக்க வீரர்கள் தங்கினர். அவர்கள் அரண்மனையை ஒருவழி செய்திருந்தனர். சுவற்றில் கூரான பொருட்களால் கிறுக்கி சிதைத்து வைத்திருந்தனர். இந்த அரண்மனை மீண்டும் ஈராக் அரசிடம் கொடுக்கப்பட்டது.
இப்போது அந்த அரண்மனை சீர் செய்யப்பட்டு ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது. ரோமானிய காலத்துக்கு கட்டிக்கலை பாணியில் பெரிய, பெரிய தூண்கள், மிக அழகான சர விளக்குகள், விசாலமான குளியல் அறைகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றுகள் என்று முன்பிருந்த நிலைக்கு அரண்மனை மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள அறைகளில், சதாமின் பிரத்யேக படுக்கை அறை உள்ளது. அதில் விசாலமான மெத்தையு டன் கட்டில் உள்ளது.
இந்த கட்டிலில் புது மணத்தம்பதிகள் தேனிலவு கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் இரவு கட்டணமாக ரூ.11,000 செலுத்த வேண்டும். ஈராக்கில் இப்போது அமைதி திரும்பியுள்ள நிலையில், உலகம் முழுவதும் இருந்து புது மணத்தம்பதிகள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, April 1, 2009

பத்மஸ்ரீ விழா-அமர்சிங்கை ஓரம் கட்டிய ஐஸ்வர்யா

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருடன் வந்த அமர்சிங்கை ஓரம் கட்டிய பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யா ராயை சுற்றிச் சூழ்ந்ததால், அமர்சிங் வெறுத்துப் போய் ஓரமாக நகர்ந்து போய் விட்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவருடன் மாமனார் அமிதாப் பச்சனும் வந்திருந்தார். வழக்கம் போல 'கொடுக்கு' அமர்சிங்கும் கூடவே வந்திருந்தார்.பிங்க் நிற சேலையில் படு அழகாக வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் ஐஸ் மீதே இருந்தன.ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் டிவி கேமராக்களும், புகைப்படக்காரர்களின் கேமராக்களும் அவர் பக்கம் திரும்பி, படம் எடுத்துத் தள்ளின. விருது விழாவின் ஒரு பகுதியாக அருகில் இருந்த மண்டப அரங்கில் தேநீர் விருந்து நடந்தது. அந்த விருந்துக்காக வந்த வழியில் ஐஸ்வர்யாவை ஆட்டோகிராப் கேட்பவர்களும், கேமராமேன்களும், புகைப்படக்காரர்களும் சூழ்ந்து கொண்டனர்.கையில் கிடைத்ததை எல்லாம் காட்டி கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அங்கு அமிதாப் பச்சனும், கூடவே அமர்சிங்கும் வந்தனர். ஆனால் அவர்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.ஐஸ்வர்யாவுக்கு அருகில் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்த முயற்சித்தார் அமர்சிங். ஆனால் நெக்கியடித்த கூட்டத்தால் அவர் ஓரமாக தள்ளப்பட்டார்.போடுகிற டிவியில் எல்லாம் தனது முகமே காட்டப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா பக்கம் அத்தனை பேரும் திரும்பி விட்டதைப் பார்த்து வெறுத்துப் போனார் அமர்சிங். நான் இங்கே என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை என்று புலம்பியபடியே வேறு பக்கமாக நகர்ந்து போனார் அமர்சிங்.ஒரு வழியாக கூட்டத்தை விட்டு தப்பித்த ஐஸ்வர்யா அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவருக்குப் பின்னாலேயே அமிதாப் பச்சனும், அமர்சிங்கும் சென்றனர்.இங்கு மட்டும்தான் அமர்சிங்கால் அரசியல் செய்யவே முடியாது என்று குறும்புக்கார கேமராமேன் ஒருவர் காமென்ட் அடித்ததைக் கேட்க முடிந்தது. அமர்சிங்குக்கும் கூட அது கேட்டிருக்கலாம்.முன்னதாக, அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்மபவிபூஷண் விருதும், 62 பேருக்கு பத்மஸ்ரீவிருதையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்