Tuesday, October 27, 2009

கரீனாவின்கவர்ச்சி


சைப் அலி கானுக்கு முன்பு மேலாடை எதுவும் இன்றி வெளி்ப்படையாக கரீனா கபூர் நிற்பது போன்ற போஸ்கள் குர்பான் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன.
ஏற்கனவே இப்படத்தின் இசை இந்தி என்ற பெரிய அந்தஸ்து இவரிடம் உள்ளது. இதுதவிர அக்ஸ், ரங் தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார் ரென்சில். இயக்கத்தில் குர்பான்தான் முதல் படம்.
இதுகுறித்து ரென்சில் கூறுகையில், எனக்கு சைப் அலிகானை நன்கு தெரியும். அவர் மூலமாக கரீனாவையும் நன்கு அறிய முடிந்தது. விளம்பர உலகத்தில் இருந்ததால் அவர்களை கையாள்வது எளிதாக இருந்தது என்றார் ரென்சில்.
அதை விடுங்க, கரீனா டாப்லெஸ்ஸில் நடித்துள்ளாரா என்று கேட்டபோது, உண்மையான காதலர்களை திரையில் கையாளுவது நிச்சயம் கஷ்டமானது. திரையில் அவர்களது கெமிஸ்ட்ரியை அப்படியே காட்டுவதும் சற்று யோசிக்க வேண்டியது. காரணம், இவர்களை நிஜ வாழ்க்கையில் அத்தனை பேரும் கூர்ந்து பார்க்கிறார்கள். எனவே திரையில் இவர்கள் எதையாவது செய்தால் அது நிஜத்தைப் பாதிக்கக் கூடும்.
ஆனால் கரீனாவும், சைப் அலியும் புரபஷனல்கள் என்பதால் நல்லஒத்துழைப்புடன் நடித்துக் கொடுத்தார்கள். இதற்கு முன்பு செய்யாத பலவற்றை இப்படத்துக்காக செய்துள்ளனர். அவர்களது கெமிஸ்ட்ரி அட்டகாசமாக வந்துள்ளது.
டாப்லெஸ்ஸாக கரீனா தோன்றுவது படத்தில் வரும் ஒரு காட்சிதான். ஆனால் வி சானலில் அல்லது வேறு இசை வீடியோக்களில் வருவது போல இது இருக்காது. ஒரு பெண்ணின் முதுகைக் காட்டும் காட்சி மட்டுமே இது.
நன்கு கூர்ந்து இப்படத்தைக் கவனித்தால், முதுகுப் பகுதி மட்டுமே ஆடையின்றி இருக்கும், டாப்லெஸ் அல்ல என்பதை அறிய முடியும்.
இது மட்டுமல்லாமல், ஒரு குண்டுக் காயம் , கடற்கன்னி - இதற்கான விளம்பரத்திலும் நடித்துள்ளாராம்

Thursday, October 22, 2009

நிர்வாணவாடிக்கையாளர்கள் கடையில் அட்டகாசம்


பிரிட்டனிலுள்ள எரிய்பாருள் விற்பனை நிலையமொன்றுக்குள் முழு நிர்வாணமம்க பொருட்கள் வாங்கச் சென்ற 6 இளைஞர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேற்படி நபர்கள் டொவோன் நகருக்கு அருகிலுள்ள ஹொனிட்டன் எனும் இடத்தில் எரிபொருள் விற்பனை நிலையத்திலுள்ள கடைக்குள் மாலை 6.40 மணியளவில் புகுந்து செக்ஸ் சஞ்சிகைகள் வேண்டுமெனக் கேட்டனராம். அப்போது கடையில் இருந்தவர் 22 வயதான யுவதியொருவர். நிர்வாண வாடிக்கையாளர்களைக் கண்டு அதிர்ந்துபோன அந்த யுவதி அந்நபர்களை அங்கிருந்து துரத்தினார். பின்னர் அந்நபர்கள் தாம் வந்த மினி பஸ்ஸில் ஏறிச் சென்றனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்நபர்களை இனங்காண்பதற்கான முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்னனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராக்களில் அந்நபர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளன.
அக்காட்சிகளை வெளி யிட்டுள்ள பிரித்தானிய பொலிஸார், குறித்த நபர்களை அடையாளம் கண்டால் தகவல் தருமாறு கோரியுள்ளனர்.
இக்கடையில் முகாமையாளராக பணியாற்றும் கோபு ராசலிங்கம் என்பவர் இது குறித்து கூறுகையில்,
""நான் அச்சந்தர்ப்பத்தில் கடையில் இருக்கவில்லை. எமது காசாளர் இச்சம்பவத்தினால் மிகவும் அதிர்ந்துபோனார். ஏறத்தாழ அழும் நிலைக்கு வந்துவிட்டார். பின்னர் ஒருவம்று சுதாகரித்துக்கொண்டு ஆடையணிந்துகொண்டு வருமாறு கூறி அவர்களை துரத்தியுள்ளார்.
அப்போது கடையில் வேறு வாடிக்கையாளர்கள் இருக்கவில்லை. பெண்கள், சிறார்கள் யாராவது இருந்திருந்தால் பிரச்சினையாகியிருக்கலாம்'' எனக் கூறியுள்ளார். டொவோன் பிராந்திய பொலிஸ் அதிகாரியொருவர் இது தொடர்பாக கூறுகையில் ""அக்கடைக்குள் நிர்வாணமாகப் புகுந்த சகலரும் ஆணும் 2003 ஆம் ஆண்டின் பாலியல் குற்றவியல் சட்டத்தின்படி குற்றம்புரிந்துள்ளனர்.
அவர்களை முடிந்தவரை விரைவாக இனம்காண்பதற்கு முயற்சிக்கிறோம். அந்நபர்களாகவே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவ்விடயம் சற்று மென்மையான முறையில் கையாளப்படும்'' எனக் கூறியுள்ளார்

Wednesday, October 21, 2009

நிர்வாண உடலில் கலை வண்ணம்


அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் அன்டி கோலுப் என்பவர் நிர்வாண உடலில் ஓவியம் வல்ரவதையே பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டவர். 43 வயதான அன்டி கோலுப், தலைமுதல் கால்விரல் வரை விதவிதமான உருவங்களை வரைகிறார். பலரை ஒன்றிணைத்து அவர்களின் உடலில் ஓவியங்கள் வரைவதிலும் அவர் பெயர் பெற்றவர். அண்மையில் அத்தகைய ஓவியங்களை வைத்து கண்காட்சியொன்றை யும் நடத்தினார்.
ஆனால், தனிப்பட்ட ரீதியில் கட்டணம் பெற்றுக்கொண்டும் ஓவியங்கள் வரைகிறார்.
கடைத்தெருவுக்கு பெயின்ற் பிரஸ் என்பனவற்றுடன் செல்வார். ஓவியம் வரைந்து கொள்ள விரும்பும் நபர்களின் உடல்கள்தான் இவரின் கென்வாஸ்.
""10 வருடங்கள் தொழில்சார் ஓவியராக விளங்குகிறேன். 4 வருடங்களாக மனிதர்களின் உடலில் ஓவியம் வரைகிறேன். சாதாரணமாக ஒருவரின் உடலில் வரைவதற்கு 4 மணித்தியாலங்கள்வரை செல்லும். நான் 30 நிமிடத்தில் வரைந்து விடுவேன். பார்ட்டி நிகழ்வுகளிலோ ஊர்வலங்
களிலோ அதிக எண்ணிக்கையானோர் ஓவியம் வரைந்துகொள்ள விரும்பினால் இன்னும் வேகமாக வரைந்துவிடுவேன்.
பெரும்பாலும் பெண்கள்தான் தமது உடலில் ஓவியம் வரைந்துகொள்ள வருகின்றனர். சிலவேளை ஆண்களும் வருவதுண்டு.
தனது மனைவிக்கு அல்லது காதலிக்கு பிறந்தநாள் பரிசாக ஓவியம் வரைந்துகொள்ள அழைத்து வருபவர்களும் உண்டு'' என்கிறார் கோலுப்.

Thursday, October 15, 2009

படிக்கட்டில் வைத்து நடந்த உறவு


ஜேர்மனியின் புகழ்பெற்ற டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவரான பொரிஸ் பெக்கர், உணவுவிடுதியொன்றின் படிக்கட்டொன்றில் வைத்து பெண்ணொருவருடன் ரகசியமாக உறவுகொண்டதன் மூலம் திருமண உறவுக்கு அப்பால் தனக்கு ஒரு மகள் பிறந்ததம்க கூறியுள்ளார்.
41 வயதான பெக்கர் 1999 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வை அறிவித்தபின் லண்டனில் உணவு விடுதியொன்றில் தன்னுடன் உறவு கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு பெண்குழந்தையொன்று உள்ளதாகவும் மொடல் அழகியான ஏஞ்சலா ஏர்மாகோவா எனும் பெண் சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
உணவு விடுதியொன்றில் கழிவல்றயில் தும்புத்தடி வைக்கப்படும் கபர்ட்டில் வைத்து இவ்விருவரும் உறவுகொண்டதாக அப்பேம்து செய்தி வெளியாகியது. ஆனால் படிக்கட்டில் வைத்தே தாம் உறவுகொண்டதாக அண்மையில் பேட்டியொன்றில் பொரிஸ் பெக்கர் கூறியுள்ளார்.
""கழிவறை அதற்குப் பொருத்தமான இடமாகத் தெரியவில்லை. ஆனால் கழிவறைகளுக்கு இடையிலுள்ள படிக்கட்டொன்றிலேயே அது உண்மை
யில் நடைபெற்றது.
அது எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசிநாள். அச்சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். எனது மனை
விக்கு நான் துரோகமிழைத்தை உணர்ந்தேன். அது எனது திருமண வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது'' என பெக்கர் அப்பேட்டியில் கூறினார்.
ஏஞ்சலம் தனது வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருக்கவில்லை எனவும் அவருடனான தொடர்பு 5 விநாடிகள் மாத்திரமே நீடித்ததாகவும் முன்னர் பெக்கர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் அம்பலமான பின்னர் பெக்கருக்கும் அவரின் அப்போதைய மனைவி பார்பரா பெல்டஸுக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இருவரும் விவகாரத்துச் செய்தனர்.
எனினும் அவர் மூலம் பிறந்த மகள் அனா மிகவும் அழகானவள் எனவும் அக்குழந்தையை தான் மிகவும் நேசிப்பதாகவும் பெக்கர் கூறியுள்ளார்.பெக்கரின் புதிய மனைவியம்ன ஷேர்லி கேர்சன்பேர்க் விரைவில் ஒரு குழந்தைக்குத் தாயாகவுள்ளார். இது பெக்கரின் நான்காவது குழந்தையாகும்.

Wednesday, October 14, 2009

சல்மான்கானை திருமணம் செய்யத் துடிக்கும் இளைஞன்


பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலிப்பதாகவும் அவரை
திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான அஸான் அன்ஸாரி சல்மான் கானின் தீவிர ரசிகர். சாதாரண ரசிகராக அல்லாமல், சல்மானை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறாராம் அஸான். ஆணாக இருந்தால் சல்மானை திருமணம்செய்ய முடியாது என்பதால் தன்னை பெண்போல மாற்றிக்கொள்ள முயற்சிகிறார் அவர். சல்வார் கமிஸ் நகைகளைதான் அணிகிறார். தோடு, மூக்குத்தி, லிப்ஸ்டிக் என்பன மூலம்தன்னை அலங்கரிக்கும் அஸான் கடந்த 12 வருடங்களாக தான் சல்மானின் காதலியாக இருப்பதாக கூறுகிறார்.
சல்மானை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர்தான் எனது உயிர். அவருக்குக்காக மட்டுமே என்னை நான் முற்றாக மாற்றிக்கொண்டேன் என்கிறார் அன்சாரி. இவர் ஏற்öகனவே திருமணமானவர். சல்மானின் காதலியாக வாழ்வதற்காக பெற்றோரையும் மனைவியையும் 8 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து வந்துவிட்டாராம்.
""சல்மானுடனான எனது உறவு என் பெற்றோருக்கும் மனைவிக்கும் பிரச்சினையாக இருந்தது. அவர்களை சமாதானப்படுத்த நான் முயன்றேன். ஆனால் சல்மானை நான் திருமணம் செய்வதற்கு அவர்கள் அனுதிக்கமாட்டார்கள் என உணர்ந்தேன். அதனால் அவர்களைவிட்டுப் பிரிய நேர்ந்தது.
சல்மான் நடித்த "மெய்ன் பியார் கியா' திரைப்படத்தை நான் எனது நண்பர்களுடன் பார்த்தபோதுதான் சல்மானின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் நடித்த மேலும் சில திரைப்படங்களைப் பார்த்தபோது அந்த ஈர்ப்பு மேலும் அதிகரித்தது. இதை எனது நண்பர்களிடம்
சொன்னபோது அவர்கள் கேலி செய்தனர். ஆனால் சல்மான் மீதான எனது ஈர்ப்பு குறையவில்லை. அது காதலாகவும்
மாறிவிட்டது'' என்கிறார்.
அவர் சல்மானுக்கு இதுவரை 1000 இற்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளாராம். சல்மான் ஒரு கடிதத்திற்கு மாத்திரம் பதில் அனுப்பினாராம். அதில் "ஐ லவ் யூ ஜான்' என சல்மான் எழுதியிருந்ததை பார்த்து உருகிப்போய்விட்டாராம் அஸான் அன்சாரி.
அஸான் அன்சாரியின் நடவடிக்கைகள் அவரின் அயலவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. ""அவர் பெண்கோலம் பூண்டிருப்பதைப் பார்த்து ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக செய்கிறார் என நினைத்தேன். ஆனால் உண்மை தெரிந்தபோது பெரும் வியப்படைந்தேன்'' என்கிறார் அஸானின் அயலவர் ஒருவர்.

Monday, October 12, 2009

இலவசதேன்நிலவு


மலேஷியாவின் மாநில அரசாங்கமொன்று தம்பதியினருக்கு இலவச தேனிவுத் திட்டமொன்றை அறிவித்துள்ளது. விவம்ரத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாம்.

மலேஷியாவின் டெரங்கனு மாநில அரசாங்கமே இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டாவது தேனிலவுத்திட்டம் என இத்திட்டம் வர்ணிக்கப்படுகிறது.
அம்மாநில அரசாங்க அதிகாரியான அஷாரி இத்ரிஸ் இது தொடர்பாக கூறுகையில் ""பிரச்சினைக்குரிய தம்பதிகள் மாநிலத்தின் அழகிய தீவுகளில் அல்லது கடற்கரைகளிலுள்ள விடுதிகளில் இரு இரவுகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். மிக விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் முன்னுதாரணமான குடும்பங்களை உருவாக்கமுடியும் என எதிர்பார்க்கிறோம்'' எனக் கூறியுள்ளாம்ர்.
அதேவேளை இத்திட்டத்தை பயன்படுத்துவதற்கு விண்ணப்பிக்கும் தம்பதிகள் உளவியல் ஆலோசனைத் திட்டமொன்றிலும் பங்குபற்ற வேண்டும் எனவும் இத்ரிஸ் கூறியுள்ளார்.

Sunday, October 11, 2009

வெள்ளை நிற காகம்

புதுச்சேரியில் அரிய வகை வெள்ளை நிற காக்கையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள காக்கைகள் ஒன்றாக கூடி மற்றொரு காக்கையை விரட்டி விரட்டி தாக்கியது. அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். வெள்ளை நிற காக் கை ஒன்றை மற்ற காக்கைகள் துரத்தியது தெரியவந்தது.
உடனடியாக வெள்ளை நிற காக்கையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வெள்ளை காக்கை பிடிப்பட்டதை அறிந்த ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் வனத்துறையில் வைக்கப்பட்டுள்ள காக்கையை அதிசயமாக பார்த்து சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘மனிதர்களில் மரபியல் மாற்றம் காரணமாக ஏற்படும் நிறமாற்றத்தை அல்பினோ மனிதர்கள் என்பார்கள். அதே போலத்தான் காக்கைகளும் நிறக்குறைபாடு காரணமாக சில சமயங்களில் வெள்ளை நிறம் ஏற்படும்

Friday, October 9, 2009

செரீனாவின் நிர்வாண போஸ்

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஈ.எஸ்.பி.என். சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ்கொடுத்துள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க பகிரங்கத் தொடரில் பட்டம் வென்று நேற்றுமுன்தினம் உலகின் முதல் நிலை வீராங்கனையாக மீண்டும் தெரிவு செய்யப் பட்ட நிலையில் அவரின் நிர்வாண புகைப்படம் தாங்கிய மேற்படி சஞ்சிகை வெளியாகியுள்ளது.

தனது உடலமைப்பு குறித்து கவலை தெரிவித்திருந்தவர் செரீனா. எனது தொடைகள்
பெரிதாகவுள்ளன. கைகள் ஆண்களின் கைகளைப் போல் உள்ளன என்றெல்லாம்
கூறியவர் அவர். ஆனால் ஆடை எதுவுமின்றி மகிழ்ச்சியுடன் தனது உடலை வெளிப்படுத்தியுள்ளார் செரீனா.

Wednesday, October 7, 2009

தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு


செல்களின் டிஎன்ஏக்களில் உள்ள தகவல்களை வைத்து எப்படி உயிர்கள் உருவாகின்றன என்பதைக் கண்டுபிடித்த தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
இவருடன் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஸ்டேய்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனத் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த மூவரும் செல்களில் உள்ள ரிபோசோம்கள் (ribosomes) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் உள்ள எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.
இவர்கள் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிபோசோம்களி்ன் அணு கட்டமைப்பை முதன்முதலாக உலகுக்குத் தெரியப்படுத்தியவர்கள் ஆவர்.
உயிர்களில உள்ள ஜீன்களில் உள்ள டிஎன்ஏக்கள் சொல்லும் தகவல்களை வைத்து ரிபோசோம்கள் தேவையான உடலுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான புரோட்டீன்களைத் (புரத சத்துக்கள்) தயார் செய்கின்றன. டிஎன்ஏக்களின் கட்டளைகளை இந்த ரிபோசோம்கள் எப்படி பெறுகின்றன, அந்த கட்டளைகளை வைத்து புரதங்களை எவ்வாறு தயார் செய்கின்றன என்பதை இந்த மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
உயிர் வாழ இன்றியமையாத ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு செல்கள், என்ஸைம்கள் எனப்படும் ஜீரண ரசாயனங்கள் ஆகியவை இந்த புரதங்களில் அடங்கும்.
ரிபோசோம்கள் எப்படி இவற்றைத் தயாரிக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளதன் மூலம் நோய்களுக்கு எதிரான மருந்துகள் உற்பத்தியில் இந்த கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கும்.
மேலும் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களில் உள்ள ரிபோசோம்களை கட்டுப்படுத்தி அவற்றின் நோய் தாக்கும் திறனை ஒழிக்கவும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவும்.
ஸ்வீடனின் ராயல் அகாடமி ஆப் சயின்ஸஸ் வழங்கும் இந்த நோபல் பரிசு வரும் டிசம்பர் மாதத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும்