Saturday, December 7, 2013

அச்சத்தில் "உலக சாம்பியன்' ஸ்பெயின்

மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. "பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது உலக கோப்பை தொடர், வரும் 2014, ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வெளியானது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 32 நாட்களில் 64 போட்டிகள் நடக்கும். லீக் முறையில் நடக்கும் போட்டிகள் முடிந்த பின், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், "நாக்-அவுட்' ("ரவுண்டு-16') சுற்றுக்கு முன்னேறும். ரியோ டி ஜெனிரோவில் பைனல் (ஜூலை 13) நடக்கும். பிரேசில் சாதகம்: ஜூன் 12ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் ("ஏ' பிரிவு), தொடரை நடத்தும் பிரேசில், குரோசியா அணிகள் மோதவுள்ளன. சொந்தமண் என்பதால் பிரேசில் அணி இம்முறை கோப்பை வெல்லும் என, நம்பப்படுகிறது. ஸ்பெயினுக்கு சிக்கல்: "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் அணி, இம்முறை "பி' பிரிவில் உள்ளது. இத்துடன் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகளும் உள்ளன. கடந்த 2010ல், லீக் சுற்றில் சிலி அணியை சிரமப்பட்டு தான் ஸ்பெயின் வென்றது. தவிர, ஸ்பெயின் அணி தனது முதல் போட்டியில் (ஜூன் 13) , 2010 தொடரின் பைனலில் வீழ்த்திய நெதர்லாந்து அணியைத் தான் சந்திக்கிறது. வீரர்கள் காயம்: இதுகுறித்து முன்னணி பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், "பி' பிரிவை "குரூப் ஆப் டெத்' என தெரிவித்துள்ளன. அணியின் முன்னணி வீரர்கள் இனியஸ்டா, அலோன்சோ, ஜாவி ஹெர்னாண்டஸ் காயத்தால் அவதிப்படுவதும் பலவீனம் தான். கோல் கீப்பர் கேப்டன் இகர் கேசிலாஸ், ரியல் மாட்ரிட் அணியில் மாற்று வீரராகத் தான் உள்ளார். சமீபத்திய போட்டிகளில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஸ்பெயின். இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த கான்பெடரேஷன் தொடர் பைனலில், ஸ்பெயின் அணி, பிரேசிலிடம் 0-3 என, வீழ்ந்தது. இதுபோன்ற காரணங்களால் ஸ்பெயின் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லவே கடுமையாக போராடும் நிலை தான் <உள்ளது. இதனால், மீண்டும் உலக கோப்பையை தக்கவைப்பது கடினம் தான். பிரிவு "ஏ' பிரிவு "பி' பிரிவு "சி' பிரிவு "டி' பிரேசில் ஸ்பெயின் கொலம்பியா உருகுவே குரோசியா நெதர்லாந்து கிரீஸ் கோஸ்டாரிகா மெக்சிகோ சிலி ஐவரி கோஸ்ட் இங்கிலாந்து காமரூன் ஆஸ்திரேலியா ஜப்பான் இத்தாலி பிரிவு "இ' பிரிவு "எப்' பிரிவு "ஜி' பிரிவு "எச்' சுவிட்சர்லாந்து அர்ஜென்டினா ஜெர்மனி பெல்ஜியம் ஈகுவடார் போஸ்னியா போர்ச்சுகல் அல்ஜீரியா பிரான்ஸ் ஈரான் கானா ரஷ்யா ஹோண்டுராஸ் நைஜீரியா அமெரிக்கா தென் கொரியா

Wednesday, October 16, 2013

உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, ஸ்பெயின் தகுதி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு போஸ்னியா-ஹெர்சிகொவினா, நடப்புச் சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. 2104-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது. இதில், 32 அணிகள் போட்டியிட உள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் பிரேசில் நேரடியாகத் தகுதி பெற்றது. மற்ற அணிகள், தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் தகுதி பெற்று வருகின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, ஓசியானா கண்டங்களில் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று வருகின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. போஸ்னியா தகுதி: ஐரோப்பிய கண்டத்தில் இடம் பெற்றுள்ள அணிகள் யுஇஎஃப்ஏ குரூப் பிரிவிலான ஆட்டத்தின் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் போஸ்னியாவும், லிதுவேனியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் போஸ்னியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, யுஇஎஃப்ஏ குரூப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த ஆட்டத்தில், போஸ்னியாவின் இபிசெவிச் 68-வது நிமிடத்தில் கோல் அடித்து, அணியை உலகக் கோப்பைக்குத் தகுதி பெற வைத்தார். இந்த வெற்றியினால், உலகக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக, போஸ்னியா அணி தகுதி பெற்றது. 5-வது முறையாக: மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், போலந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், உலகக் கோப்பைக்கு தொடர்ந்து 5-வது முறையாக இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்புச் சாம்பியன் ஸ்பெயின்: நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் அணியும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியா அணியைத் தொற்கடித்தது. இதுதவிர, மற்ற தகுதிச்சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் ரஷியா, சிலி, ஈகுவேடார், ஹோண்டுராஸ் ஆகிய அணிகளும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. இதுவரை, 22 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் மேலும் 11 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வாக உள்ளன.

உலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி

: பிரேசிலில் நடக்கவுள்ள உலககோப்பை கால்பந்து தொடருக்கு "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின், போஸ்னியா உள்ளிட்ட அணிகள் முன்னேறின. பிரேசிலில் அடுத்த ஆண்டு (ஜூன் 12- ஜூலை 13) உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 நாடுகள் இத்தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றன. எஞ்சியுள்ள இடங்களுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (யு.இ.எப்.ஏ.,) நேற்று நடந்த "ஐ' பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி, ஜார்ஜியாவை எதிர்கொண்டது. இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு முதல் பாதியில் நெக்ரிடோ (26வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு ஜார்ஜியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு, மாடா (61) ஒரு கோல் அடித்தார். இதற்கு கடைசிவரை போராடிய ஜார்ஜியா அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், ஸ்பெயின் அணி, ஜார்ஜியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 14வது முறையாக தகுதிபெற்றது. வரலாறு படைத்தது போஸ்னியா: "ஜீ' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் போஸ்னியா அணி, லிதுவானியா அணியை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின் இரண்டாவது பாதியில் எழுச்சிகண்ட போஸ்னியா அணிக்கு விடாட் (68) ஒரு கோல் அடித்தார். இதற்கு லிதுவானியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்கமுடியவில்லை. முடிவில், 1-0 என வெற்றி பெற்ற போஸ்னியா அணி, உலககோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது. * "எப்' பிரிவில் ரஷ்யா, அஜர்பெய்ஜான் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என "டிரா' ஆனது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ரஷ்யா (22 புள்ளி) உலககோப்பை தொடருக்கு முன்னேறியது. * "எச்' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி, போலந்தை 2-0 என வீழத்தி, உலககோப்பை தொடருக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா தோல்வி * தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிச்சுற்று போட்டியின் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா அணி, ஏற்கனவே உலககோப்பை தொடருக்கு முன்னேறிவிட்டது. நேற்று நடந்த லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி, இரண்டு முறை உலக சாம்பியனான (1930, 1950) உருகுவே அணியை சந்தித்தது. இதில் அசத்திய உருகுவே அணி, 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இருப்பினும் ஜார்டன் அணிக்கு எதிரான "பிளே ஆப்' சுற்றில் வென்றால் மட்டுமே உருகுவே அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும். * மற்றொரு போட்டியில் சிலி அணி, ஈகுவேடார் அணியை 2-1 என வென்று உலககோப்பை தொடருக்கான வாய்ப்பை உறுதி செய்தது. ஈகுவேடார், உருகுவே அணிகள் தலா 25 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும் ஈகுவேடார் அணி, உருகுவே அணியை (4 கோல்) கோல்கள் வித்தியாச அடிப்படையில் பின்னுக்கு தள்ளி, உலககோப்பை தொடருக்கு 2006க்கு பின் முன்னேறியது.

Sunday, October 13, 2013

உலக கோப்பை கால்பந்து :பெல்ஜியம், ஜெர்மனி தகுதி

அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன. பிரேசிலில், 20வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, உட்பட 6 பிரிவுகளாக நடக்கின்றன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 53 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளுடன், சிறந்த இரண்டாவது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகளை சேர்த்து 13 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். "ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் ரோமிலு லுகாகு இரண்டு கோல் அடித்தார். இதுவரை விளையாடிய 9 போட்டியில் 8 வெற்றி, ஒரு "டிரா' உட்பட 25 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. கடைசியாக பெல்ஜியம் அணி, 2002ல் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. மற்ற ஐரோப்பிய பிரிவுகளில் நடந்த போட்டிகளின் முடிவில், ஜெர்மனி (சி), நெதர்லாந்து (டி), சுவிட்சர்லாந்து (இ) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. கொலம்பியா தகுதி: தெற்கு அமெரிக்கா பிரிவில், கொலம்பியா, சிலி அணிகள் மோதிய போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. இதன்மூலம் கொலம்பிய அணி, 1998ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணி ஏற்கனவே உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. இதுவரை பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், தென் கொரியா, நெதர்லாந்து, இத்தாலி, காஸ்டா ரிகா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட 14 அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

Friday, October 11, 2013

உலக கோப்பை கால்பந்து: பெல்ஜியம் தகுதி

அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு பெல்ஜியம் அணி தகுதி பெற்றது. பிரேசிலில், 20வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா உட்பட 6 பிரிவுகளாக நடக்கின்றன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 53 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளுடன், சிறந்த இரண்டாவது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகளை சேர்த்து 13 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். "ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் ரோமிலு லுகாகு இரண்டு கோல் அடித்தார். இதுவரை விளையாடிய 9 போட்டியில் 8 வெற்றி, ஒரு "டிரா' உட்பட 25 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை, இத்தாலி (பி பிரிவு), ஜெர்மனி (சி), நெதர்லாந்து (டி), சுவிட்சர்லாந்து (இ) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. "சி' பிரிவில் நடந்த லீக் போட்டியில், ஜெர்மனி, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது. "டி' பிரிவில் நடந்த போட்டியில், நெதர்லாந்து அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. "இ' பிரிவில் நடந்த போட்டியில், சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல்பனியாவை வீழ்த்தியது. போர்ச்சுகல், இஸ்ரேல் அணிகள் மோதிய "எப்' பிரிவு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது. "ஐ' பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணியை தோற்கடித்தது. அர்ஜென்டினா அபாரம்: தெற்கு அமெரிக்கா பிரிவுக்கான போட்டியில், அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா, சிலி அணிகள் மோதிய போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. வடக்கு அமெரிக்கா பிரிவுக்கான போட்டியில், அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை வீழ்த்தியது. மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது.

நம்பரில் தெண்டுல்கரின் சாதனை

50,024 ரன்கள்– அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர். 18426–ஒரு நாள் போட்டியில் எடுத்த ரன்கள். அவருக்கு அடுத்தபடியாக உள்ள வீரர் 14 ஆயிரம் ரன்களை கூட நெருங்கவில்லை. 15837– டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரர். 2–வது இடத்தில் பாண்டிங் (13378 ரன்) உள்ளார். 8705 ரன்–டெஸ்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் எடுத்தவர். 2278 ரன்–உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் 593–டெஸ்டில் அதிக வீரர்களுடன் இணைந்து (சொந்த அணி மற்றும் எதிரணி) விளையாடியவர். 96– ஒரு நாள் போட்டியில் நிறைய மைதானத்தில் விளையாடியவர். 62–ஒரு நாள் போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருதை பெற்றவர். 51–டெஸ்டில் அதிக சதம் கண்டவர் 49–ஒரு நாள் போட்டியில் சதத்தில் முதலிடத்தில் இருப்பவர் 14–டெஸ்ட் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியர் 6– டெஸ்ட் போட்டியில் சிக்சருடன் சதத்தை எட்டிய எண்ணிக்கையில் சாதனை 6– அதிக முறை உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தானின் ஜாவீத் மியாண்ட்டுடன் சமன் 1–கேப்டன் ஆன அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்த (1996–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) ஒரே இந்தியர்.

Wednesday, October 9, 2013

தோனி, சச்சினை முந்தும் கோஹ்லி

விளம்பர வருமானத்தில் தோனி, சச்சினை முந்தினார் இளம் வீரர் விராத் கோஹ்லி. இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது. இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. கடந்த 2008ல் இந்திய அணிக்கு 19 வயது உலக கோப்பை வென்று தந்தார். இவரது சிறப்பான பேட்டிங் தொடர, மிக விரைவில் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அசத்திய கோஹ்லி, ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, இந்திய அணி கோப்பை கைப்பற்ற உதவினார். இயற்கை வரம்: அழகான உடல் அமைப்பு, கவர்ச்சிகரமான பார்வை, சிறப்பான அணுகுமுறையால் மைதானத்துக்கு வெளியிலும், வெற்றிகரமாக ஜொலிக்கிறார். கிரிக்கெட்டில் கிடைக்கும் ஓய்வுகளை வீணடிக்காத இவர், மொபைல் போன், டொயோட்டா, பெப்சி உள்ளிட்ட 13 பொருட்களுக்கு மாடலாக தோன்றுகிறார். மதிப்பு அதிகம்: 2008ல் சச்சினுக்கு மாற்றாக பேசப்பட்ட இவரது விளம்பர மதிப்பு ரூ. 3 கோடியாக இருந்தது. இப்போது பல மடங்கு அதிகரிக்க, கோஹ்லியின் வருமானம் கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஆண்டு விளம்பரங்கள் மூலம் ரூ. 40 கோடி வரை கோஹ்லிக்கு வருமானம் கிடைத்தது. கோர்ட் சாதகம்: கடந்த 2008ல் "நைக்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, இவர் மீது சமீபத்தில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோஹ்லிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. புதிய ஒப்பந்தங்கள்: கோர்ட் தீர்ப்பை அடுத்து, சமீபத்தில் புதியதாக 2 ஒப்பந்தம் செய்துள்ளார். சச்சின், ஸ்டீவ் வாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ள டயர் நிறுவனம், இவரை ஆண்டுக்கு ரூ. 6.5 கோடிக்கு இணைத்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் "அடிடாஸ்' நிறுவனம், ஆண்டுக்கு ரூ. 10 கோடி என்ற அளவில், கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், கோஹ்லியின் ஆண்டு விளம்பர வருமானம் விரைவில் கணிசமாக உயர்ந்து, தோனி, சச்சினை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்துகிறார் கோஹ்லி: இதுகுறித்து ஒரு தனியார் நிறுவன தலைமை அதிகாரி இந்திராணி தாஸ் பிலா கூறுகையில்,"" கடந்த சில ஆண்டுகளாக விளம்பர உலகில் தோனி ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், இப்போது கோஹ்லி அதி வேகமாக வளர்ந்து வருகிறார். நகர்ப்புறங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இவரை இழுக்க போட்டியிடுகின்றன,'' என்றார்.

Saturday, September 21, 2013

சாதிக்குமா சென்னை அணி :சாம்பியன்ஸ் லீக் அதிரடி ஆரம்பம்

உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் தொடர் அதிரடியாக ஆரம்பமாகிறது. இதில் மும்பை, சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கோப்பை வெல்ல களத்தில் குதித்துள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'தொடரை நடத்துகின்றன. இதில் இந்தியாவில் இருந்து பிரிமியர் தொடர் சாம்பியன் மும்பை, இரண்டு மற்றும் 3வது இடம் பெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ என, 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரண்டு அணிகள் செப்., 17 முதல் 20 வரை நடந்த தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு பெற்றன. தோனி நம்பிக்கை: சென்னை அணியை பொறுத்தவரையில், பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும். ஆனால், சாம்பியன்ஸ் லீக் தொடர் என்றதும், அப்படியே தலை கீழ் நிலை தான். இதுவரை நடந்த நான்கு தொடர்களில் 2010ல் மட்டும் கோப்பை வென்றது. மற்றபடி 2009ல் தகுதி பெறவில்லை. 2011, 2012ல் லீக் சுற்றுடன் திரும்பியது. அடுத்த ஆண்டில் புதிய ஏலம் நடக்கிறது. இதனால், சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்த, இது தான் கடைசி வாய்ப்பு. இதற்கேற்ப கேப்டன் தோனி, சொந்தமண்ணில் ஏதாவது மாயம் நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில், சமீபகாலமாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தோனிக்கு, வழக்கம் போல முரளி விஜய் (14 போட்டி, 414 ரன்),ரெய்னா (14 போட்டி, 384 ரன்) கைகொடுக்க வேண்டும். சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 4, 5வது இடத்திலுள்ள இவர்களுடன் பத்ரிநாத்தும் உதவலாம். தவிர, கடந்த பிரிமியர் தொடரில் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற மைக்கேல் ஹசி இருப்பது கூடுதல் பலம். பவுலிங்கில் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் எழுச்சி பெற்றுள்ள ரவிந்திர ஜடேஜா, முக்கிய ஆயுதமாக இருப்பார். ஒருநாள் தரவரிசையில் "நம்பர்-1' பவுலராக உருவெடுத்துள்ள இவருடன், தமிழகத்தின் அஷ்வினும் இணைந்து வெற்றிதேடித் தரவேண்டும். தவிர, டுவைன் பிராவோ, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிசும் உள்ளனர். சச்சினுக்கு கடைசி: கடந்த 2011 தொடரில் சாம்பியன்ஸ் கோப்பை வென்றது மும்பை அணி. கடந்த பிரிமியர் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் கோப்பை வென்றது. தற்போது, "சாம்பியன்' அணியாக களமிறங்குகிறது. அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பங்கேற்கும் கடைசி தொடராக இது பார்க்கப்படுகிறது. அவருக்காக எப்படியும் கோப்பை வெல்ல அணி வீரர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு போலார்டு, தினேஷ் கார்த்திக் உதவலாம். பவுலிங்கில் "யார்க்கர்' மலிங்கா இல்லாதது பெரும் பலவீனம் தான். மற்றபடி, மிட்சல் ஜான்சன், அம்பதி ராயுடு, மேக்ஸ்வெல், டுவைன் ஸ்மித், பிரக்யான் ஓஜா, அபு நேச்சிம், முனாப் படேலும் அணியில் உள்ளனர். இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப போராடி வரும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சோதனையில் டிராவிட்: கடந்த 2008ல் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான் அணி. ஆனால், தொடர் ரத்து செய்யப்பட்டது. இம்முறை டிராவிட் தலைமையில், பிரிமியர் தொடரில் எழுச்சி பெற்றது. இடையில், ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், சித்தார்த் திரிவேதி சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது, அணியின் வெற்றியை பாதித்தது. ஒருவழியாக மூன்றாவது இடம் பெற்று, முதன் முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கிறது. அனுபவ வீரர் வாட்சன், ரகானே, இளம் வீரர் சஞ்சு சாம்சன், அசோக் மனேரியா பேட்டிங்கில் கைகொடுக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் ஷான் டெய்ட், பால்க்னர், கெவான் கூப்பர் உதவலாம். மிரட்டுமா லயன்ஸ்: இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த உள்ளூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹைவெல்டு லயன்ஸ், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கிறது. கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன் சர்வதேச அனுபவம் வாய்ந்தவர். தவிர, குயின்டன் டி காக், பங்கிசோ கைகொடுத்தால் மீண்டும் பைனலுக்கு முன்னேறலாம். தென் ஆப்ரிக்காவின் மற்றொரு அணி டைட்டன்ஸ். டிவிலியர்ஸ், பெகர்டியன், கேப்டன் ஜார்ஸ்வெல்டு, அனுபவ ருடால்ப் போன்றவர்கள் பேட்டிங்கில் உதவினால், இங்கு சாதிக்கலாம். பவுலிங்கை பொறுத்தவரையில் வான்டர் மெர்வி, புனே அணியில் இருந்த அல்போன்சா தாமஸ் மற்றும் மார்னே மார்கல் மிரட்ட காத்திருக்கின்றனர். பெர்த்-பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் வெற்றி பெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி, முதன் முறையாக இத்தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்காக விளையாடிய வாட்சன் (ராஜஸ்தான்), ஸ்டைன், திசாரா பெரேரா (ஐதராபாத்), மிட்சல் ஜான்சன் (மும்பை) போன்ற முன்னணி வீரர்கள், தற்போது பிற அணிகளுக்காக விளையாடுகின்றனர். இதனால், பிரிஸ்பேன் அணி "பல் பிடுங்கப்பட்ட பாம்பாக' உள்ளது. வேறு வழியில்லாததால், "செக்ஸ்' சர்ச்சையில் சிக்கிய பாமர்ஸ்பச், பீட்டர் பாரஸ்ட், கேப்டன் ஜேம்ஸ் ஹோப்சை நம்பி களம் காணுகிறது. இங்கும் இப்படித்தான்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியிலும் இப்படித்தான் சிக்கல் நிலவுகிறது. மைக்கேல் ஹசி, சென்னைக்காக பங்கேற்கிறார். ஷான் மார்ஷ் காயத்தால் விலகிவிட்டார். இருப்பினும், 38 வயது "சீனியர்' சைமன் காடிச், மார்கஸ் நார்த், 42வயதான பிராட் ஹாக் மீது நம்பிக்கை உள்ளது. தவிர, சமீபத்திய ஆஷஸ் தொடரில் அறிமுகம் ஆன இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் ஏகாரும் கைகொடுக்கலாம். டிரினிடாட் வாய்ப்பு: வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ அணிக்கு இம்முறை அதிர்ஷ்டம் தான். கடந்தமுறை தகுதிச்சுற்றில் தோற்று வெளியேறிய இந்த அணி, இத்தொடரில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. உள்ளூர் தொடரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோப்பை வென்றது டிரினிடாட் அணி. தினேஷ் ராம்தினை கேப்டனாக கொண்ட இந்த அணியில், அட்ரியன் பரத், டேரன் பிராவோ, ரவி ராம்பால் என, "சீனியர்கள்' <உள்ளனர். சுழல் "மாயாவி' சுனில் நரைனுக்கு இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை அத்துப்படி என்பதால், மற்ற அணிகளுக்கு சிக்கல் தான். ஜாம்பவான் பிரையன் லாரா, ஆலோசகராக உள்ளது கூடுதல் பலம். மலிங்கா இல்லை மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. பிரிமியர் (103 விக்.,) மற்றும் சாம்பியன்ஸ் லீக் (24) தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அணியின் வெற்றியில் இவருக்கு பெரும் பங்குண்டு. இவரது மனைவிக்கு பிரசவம் நடக்க இருப்பதால், இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், 6வது பிரிமியர் தொடரில் 20 சதவீத சம்பளத்தை இழக்க நேரிட்டுள்ளது. தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக பணமும் கிடைக்காது. இதுவரை சாம்பியன்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இதுவரை சாம்பியன் கோப்பை வென்ற அணிகளின் விவரம். ஆண்டு சாம்பியன் எதிரணி இடம் 2009 நியூ சவுத் வேல்ஸ் (ஆஸி.,) டிரினிடாட் (வெ.இ.,) ஐதராபாத் 2010 சென்னை (இந்தியா) வாரியர்ஸ் (தெ.ஆ.,) ஜோகனஸ்பர்க் 2011 மும்பை (இந்தியா) பெங்களூரு (இந்தியா) சென்னை 2012 சிட்னி சிக்சர்ஸ் (ஆஸி.,) லயன்ஸ் (தெ.ஆ.,) ஜோகனஸ்பர்க் 2013 ? ? புதுடில்லி பரிசு எவ்வளவு இந்த ஆண்டு சாம்-பி-யன்ஸ் லீக் "டு-வென்-டி--20' தொட-ரில் கோப்பை வெல்-லும் அணிக்கு ரூ. 15.81 கோடி பரி-சாக கிடைக்-கும். இரண்-டா-வது இடம் பெறும் அணி ரூ. 8.2 கோடி வழங்கப்படும். அரை-யி-று-தி-யில் தோல்வியடையும் அணிக-ளுக்கு தலா ரூ. 3.1 கோடி தரப்-ப-டும். லீக் சுற்-றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 1.26 கோடி கிடைக்கும். பைனலுக்கு செல்லும் பாதை சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்-கேற்-கும் 10 அணி-கள், இரு பிரி-வுகளாக பிரிக்-கப்-ப-டும். போட்-டி-கள் "ரவுண்டு ராபின்' முறை-யில் நடக்-கும். ஒவ்-வொரு அணி-யும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்-றின் முடி-வில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்-களை பிடிக்கும் அணிகள், வரும் அக்., 4, 5ல் ஜெய்ப்பூர், டில்லியில் நடக்-கும் அரை-யி-றுதிக்கு தகுதி பெறும். இத்தொடரின் பைனல் வரும் அக்., 6ல் டில்லியில் நடக்கிறது. பங்கேற்கும் அணிகள் பிரிவு "ஏ' * மும்பை (இந்தியா) * ராஜஸ்தான் (இந்தியா) * ஹைவெல்டு லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) * பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா) * தகுதிச் சுற்றில் முதலிடம் பிரிவு "பி' * சென்னை (இந்தியா) * டைட்டன்ஸ் (தென் ஆப்ரிக்கா) * பிரிஸ்பேன் ஹீட் (ஆஸ்திரேலியா) * டிரினிடாட் அண்டு டுபாகோ (வெஸ்ட் இண்டீஸ்) * தகுதிச் சுற்றில் இரண்டாவது இடம் நான்கு சதம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இதுவரை நான்கு சதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ல் ஐதராபாத்தில் நடந்த ஒடாகோ (நியூசிலாந்து) அணிக்கு எதிரான போட்டியில் கேப் கோப்ராஸ் (தென் ஆப்ரிக்கா) அணியின் ஆன்ட்ரூ புட்டிக் (104 ரன்) முதல் சதம் அடித்தார். நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் (135, 123 ரன்கள்) அதிகபட்சமாக இரண்டு சதம் அடித்தார். இந்தியா சார்பில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 94 ரன்கள் (எதிர்-பெங்களூரு, 2010) எடுத்தார். மலிங்கா அதிகம் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் மும்பை அணியின் லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். இவர் 14 போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த நான்கு இடங்களில் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்காக பங்கேற்ற ஹென்ரிக்ஸ் (22 விக்கெட்), சென்னை அணியின் போலிஞ்சர் (22), டுவைன் பிராவோ (21), அஷ்வின் (21) ஆகியோர் உள்ளனர். கோஹ்லி "-டாப்' அ-திக "கேட்ச்' பிடித்த பீல்-டர்-கள் வரி-சை-யில் பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி முன்-னிலை வகிக்-கி-றார். இவர், 15 போட்-டி-யில் 10 "கேட்ச்' பிடித்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் சாமர்-சட் அணி-யின் சுப்-பையா (9 கேட்ச்), சென்னை அணியின் ரெய்னா (9), டிரி-னி-டாட் அணியின் சிம்-மன்ஸ் (9) ஆகியோர் உள்ளனர். * ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் கேப் கோப்ராஸ் வீரர் ஓவைஸ் ஷா (4 கேட்ச், எதிர்- மும்பை, 2011) உள்ளார். 215 அ-தி-க-பட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி-கள் வரி-சை-யில் இந்தியாவின் பெங்-க-ளூரு அணி முதலிடத்தில் உள்ளது. பெங்-க-ளூருவில் 2011ல் நடந்த தெற்கு ஆஸ்-தி-ரே-லி-யா-வுக்கு எதி-ரான போட்டியில், 20 ஓவ-ரில் 8 விக்-கெட்-டுக்கு 215 ரன்-கள் எடுத்தது. இப்போட்டியில் முத-லில் பேட் செய்த தெற்கு ஆஸ்-தி-ரே-லியா அணி 20 ஓவ-ரில் 214 ரன்-கள் எடுத்-து, இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. 70 குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்த அணிகள் வரி-சை-யில் நியூ-சி-லாந்-தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ஸ் முன்னிலை வகிக்கிறது. போர்ட்எலிசபெத் நகரில் 2010ல் நடந்த போட்டியில் இலங்கையின் வயம்பா அணிக்கு எதிராக 70 ரன்களுக்கு சுருண்டது. சிக்சர் மன்னன் இத்தொடரில் அ-திக சிக்-சர் விளாசிய வீரர்-கள் -பட்டியலில் மும்பை, டிரினிடாட் அணிகளுக்காக பங்கேற்ற போலார்டு முதலிடத்தில் உள்ளார். இவர், 20 போட்-டிகளில் 38 சிக்-சர் அடித்-துள்ளார். * அடுத்த மூன்று இடங்களில் டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணி-யின் டேவிட் வார்-னர் (27 சிக்-சர்), பெங்-க-ளூரு அணியின் கிறிஸ் கெய்ல் (24), சென்னை அணியின் ரெய்னா (17) ஆகியோர் உள்ளனர். தோனி தான் "டாப்' அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் வரிசையில் சென்னை அணி கேப்டன் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 14 போட்டி-யில் 10 "கேட்ச்', 8 "ஸ்டம்பிங்' என மொத்தம் 18 விக்-கெட் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளார். இவரை அடுத்து கோல்கட்டா, சிட்னி சிக்சர்ஸ் அணி-யின் பிராட் ஹாடின் (12 விக்-கெட்) உள்ளார். வார்னர் முன்னிலை சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் முன்னிலை வகிக்கிறார். டில்லி, நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 13 போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 556 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து போலார்டு (479 ரன்கள், மும்பை, டிரினிடாட்), விராத் கோஹ்லி (424, பெங்களூரு), முரளி விஜய் (414, சென்னை), சுரேஷ் ரெய்னா (387, சென்னை), காலிஸ் (380, கோல்கட்டா, பெங்களூரு) உள்ளனர். சூப்பர் ஜோடி சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் வாரியர்ஸ் அணியின்(தென் ஆப்ரிக்கா) ஜேக்கப்ஸ், பிரின்ஸ் ஜோடி உள்ளது. 2010ல் போர்ட் எலிசபெத் நகரில் நடந்த சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. 20 அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் போலிஞ்சர் (சென்னை, நியூ சவுத் வேல்ஸ்), டிர்க் நானஸ் (டில்லி, பெங்களூரு, விக்டோரியா), போலார்டு (மும்பை, டிரினிடாட்) உள்ளனர். இவர்கள் மூவரும் தலா 20 போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்களை அடுத்து ஹென்ரிக்ஸ் (நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ்), ஸ்மித் (நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ்) ஆகியோர் தலா 17 போட்டியில் விளையாடி உள்ளனர். 13 அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள் வரிசையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் உள்ளார். இவர், இதுவரை 13 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

Wednesday, September 11, 2013

2014 உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா தகுதி

2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆர்ஜெண்டினா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிரேசிலில் 2014-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி முத் ஜூலை 13-ம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பிரேசில் நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பிரேசிலில் 2-வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் அந்த 32 அணிகள் தேர்வு செய்யப்படும். போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில், பலம் வாய்ந்த பிரேசில் அணி ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது. மற்ற அணிகள் தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. கண்டங்களில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்து தொடரில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு அணிகள் தகுதிபெறும். தகுதிச்சுற்றுகள்: உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பராகுவேயின் தலைநகர் அசன்சியனில் பராகுவேயும், ஆர்ஜெண்டினாவும் மோதின. இந்த ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி 5-2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பைக்கு போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆர்ஜெண்டினாவுக்கு கிடைத்த இரு பெனால்டி வாய்ப்புகளை மெஸ்ஸி கோலாக மாற்றினார். அதேசமயம், தென் அமெரிக்க பிரிவில் கொலம்பியா, உருகுவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கொலம்பியா அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அந்த அணிக்கு மேலும் ஒரு புள்ளிகள் வேண்டும். 1998-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற கொலம்பியா அணி போராடி வருகிறது. அமெரிக்கா, கோஸ்டா ரிகா: மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள நாடுகளுக்கு இடையேயான தகுதிச்சுற்றுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமெரிக்க 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஜமைக்கா அணியுடனான ஆட்டத்தில் 1-1 என்று டிரா செய்ததன் மூலம் கோஸ்டா ரிகா அணியும் உலகக் கோப்பைக்கு முன்னேறியது. முதல் ஐரோப்பிய நாடுகள்: உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் ஐரோப்பிய நாடுகள் என்ற பெருமையை இத்தாலியும், நெதர்லாந்தும் பெற்றுள்ளன. நெதர்லாந்து அணி, கடந்த உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் துரின் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. 1958-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியைத் தவிர, மற்ற உலகக் கோப்பை போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது அந்த அணிக்கு உள்ள சிறப்பாகும். அதேசமயம், கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்படும் ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் விளிம்பில் உள்ளது.
மாறாக ரஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெறுவது, வரும் காலங்களில் தகுதிச்சுற்றில் அந்த அணிகள் விளையாடும் ஆட்டங்களைப் பொறுத்தே உள்ளது. 2014 உலகக் கோப்பைக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள் அணி தகுதிபெற்ற நாள் உலகக் கோப்பையில் சிறந்த பட்சம் பிரேசில் அக்டோபர்-2007 20-வது முறை வெற்றி (1958, 1962, 1970, 1994, 2002) ஜப்பான் ஜூன்-2013 5-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (2002, 2010) ஆஸ்திரேலியா ஜுன்-2013 4-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (2006) ஈரான் ஜுன்-2013 4-வது முறை அணிப் பிரிவுகளில் (1978, 1998, 2006) தென் கொரியா ஜூன்-2013 9-வது முறை 4-ம் இடம் (2002) நெதர்லாந்து செப்டம்பர்-2013 10-வது முறை 2-ம் இடம் (1974, 1978, 2010) இத்தாலி செப்டம்பர்-2013 18-வது முறை வெற்றி (1934, 1938, 1982, 2006) அமெரிக்கா செப்டம்பர்-2013 10-வது முறை 3-ம் இடம் (1930) கோஸ்டா ரிகா செப்டம்பர்-2013 4-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (1990) ஆர்ஜெண்டினா செப்டம்பர்-2013 16-வது முறை வெற்றி (1978, 1986)

ரஃபேல் நடால் சாம்பியன்

ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே, "ஹார்ட் கோர்ட்' மைதானத்தில் ஜொலித்து வரும் நடால், 2013-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். நியூயார்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 6-2, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். நடாலுக்கு இது இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டமாகும். இதற்கு முன், அவர் 2010-ம் ஆண்டு ஜோகோவிச்சை வீழ்த்தி இப்பட்டத்தை கைப்பற்றியிருந்தார். இப்பட்டத்தை வென்று, தனது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கையை 13ஆக உயர்த்தினார் நடால். இன்னும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றால், முதலிடத்தில் உள்ள ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்ய முடியும். 27 வயது நிரம்பிய நடால், அந்த சாதனையை விரைவில் புரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த சகுனம்: திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்று, தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள வீரர்களுக்கு இடையேயான ஆட்டம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மைதானத்தில் குவித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் நடால், 42 நிமிடங்களுக்குள் கைப்பற்றினார். இதுவரை, தான் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் 154 ஆட்டங்களில் 151 ஆட்டங்களில் முதல் செட்டை நடால் கைப்பற்றியுள்ளார். இதனால், அமெரிக்க ஓபனில் முதல் செட்டைக் கைப்பற்றியது சிறந்த சகுனமாகக் கருதப்பட்டது. ஆனால், அடுத்த செட்டில் ஜோகோவிச் கடும் சவால் அளித்தார். இறுதியில் அவரின் நெருக்கடிக்கு நடால் பணிந்தார். இதனால் 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். முதலில் பின்னடைவைச் சந்தித்து, பின்னர் சரிவிலிருந்து மீண்டு வெற்றி பெறுபவர் என்ற பெயரைப் பெற்றுள்ள நடால், 3-வது செட்டில் சுதாரித்துக் கொண்டார். இந்த செட்டில் ஜோகோவிச், தேவையற்ற தவறுகளை புரிந்தார். அதனால், இந்த செட்டை அவர் 4-6 என்ற கணக்கில் நடாலிடம் இழந்தார். ஜோகோவிச்சின் தேவையற்ற தவறு 4-வது செட்டிலும் தொடர்ந்ததால், அந்த செட்டை நடால் 6-1 என்று கைப்பற்றி அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். பரிசுத் தொகை: அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம், நடாலுக்கு 23 கோடி ரூபாய் ரொக்கம் (போனஸ் தொகையுடன்) பரிசளிக்கப்பட்டது. வெற்றி குறித்து நடால் கூறுகையில், "இந்த வெற்றி என்னை உணர்ச்சி வசப்படுத்தியது. எனது அணியினருக்கு இது குறித்து நன்கு தெரியும். ஜோகோவிச், சிறந்த வீரர். என்னுடைய சிறந்த ஆட்டத்தை அவர் எப்போதும் வெளிக்கொண்டு வருபவர்' என்று தெரிவித்தார். ஏமாற்றம்: அமெரிக்க ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தொடர்ச்சியாக 4 முறை முன்னேறிய ஜோகோவிச், 2011-ம் ஆண்டு மட்டும் நடாலை வீழ்த்தி வெற்றி பெற்றார். மற்ற மூன்று முறையும் அவர் தோல்வியையே தழுவியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனை வென்று இந்த சீசனை சிறப்பாக தொடங்கினார் ஜோகோவிச். ஆனால், பிரெஞ்சு ஓபனில் அரையிறுதியிலும், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளில் இறுதிச்சுற்றிலும் தோற்றிருப்பது ஜோகோவிச்சுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்குப் பின் ஜோகோவிச் கூறுகையில், "வெற்றி பெற வேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். ஆனால், விளையாட்டில் தோல்வியும் ஓர் அங்கமே. இந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் நடால் சிறப்பாக விளையாடினார். இந்த வெற்றிக்கு நடால் தகுதியானவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய வயது 26. இன்னும் சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தவில்லை. வரும் காலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்' என்று தெரிவித்தார். 2013-இல் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் பட்டம் - வீரர் - வீராங்கனை ஆஸ்திரேலிய ஓபன் நோவக் ஜோகோவிச் விக்டோரியா அசரென்கா பிரெஞ்சு ஓபன் ரஃபேல் நடால் செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் ஆன்டி முர்ரே மரியோன் பர்டோலி அமெரிக்க ஓபன் ரஃபேல் நடால் செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதுடன் நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு 18 முறை முன்னேறியுள்ள நடால், 13இல் வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஓபன்: 2009 பிரெஞ்சு ஓபன்: 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013 விம்பிள்டன்: 2008, 2010 அமெரிக்க ஓபன்: 2010, 2013 மொத்த ஒற்றையர் பட்டங்கள்: 60 இந்த ஆண்டில் நடால் வென்ற பட்டங்கள் 2013-ம் ஆண்டு நடாலுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபனை வென்ற பின், காயத்தால் அவதிப்பட்டு வந்த நடால், 7 மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயத்துக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் களத்துக்குத் திரும்பிய நடால், இந்த சீசனில் இதுவரை 10 பட்டங்களை வென்றுள்ளார். மாதம் - வென்ற பட்டம் பிப்ரவரி-17 பிரேசில் ஓபன் மார்ச்-2 மெக்ஸிகனோ டெலிசெல் மார்ச்-17 பிஎன்பி பரிபாஸ் ஓபன் ஏப்ரல்-28 பார்சிலோனா ஓபன் மே-12 மேட்ரிட் ஓபன் மே-19 பிஎன்எல் டென்னிஸ் ஜூன்-9 பிரெஞ்சு ஓபன் ஆகஸ்ட்-11 ரோஜர்ஸ் கோப்பை ஆகஸ்ட்-18 சின்சினாட்டி ஓபன் செப்டம்பர்-9 அமெரிக்க ஓபன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்கள் ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) - 17 பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) - 14 ரஃபேல் நடால் (ஸ்பெயின்) - 13 ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா) - 12 ஜான் போர்க் (ஸ்விட்சர்லாந்து) - 11 ராட் லேவர் (ஆஸ்திரேலியா) - 11 பில் டில்டென் (அமெரிக்கா) - 10 கடைசி 10 ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியன்கள் 2013: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 2012: ஆன்டி முர்ரே (பிரிட்டன்) 2011: நோவக் ஜோகோவிச் (செர்பியா) 2010: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 2009: ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ (ஆர்ஜெண்டினா) 2008: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2007: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2006: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2005: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2004: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) ஓர் ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியாது: நடால் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் எனப்படும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இந்த நான்கு பட்டங்களையும் ஒரே ஆண்டில் வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வீரரும் லட்சியம் கொண்டிருப்பர். இந்த சாதனையை அமெரிக்காவின் டான் பட்ஜ் (1938), ஆஸ்திரேலியாவின் ராட் லேவர் (1962, 1969) ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். அதன்பிறகு, மற்ற வீரர்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. இது குறித்து நடால் கூறுகையில், "ஓர் ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தற்போது வெல்வது என்பது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து. தற்போது சிறந்த வீரர்கள் களத்தில் உள்ளனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டுமென்றால், ஃபெடரர், ஃபெரர், முர்ரே மற்றும் ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்களை வெல்ல வேண்டும். இந்த வீரர்கள் லீக் சுற்றுகளில் தோல்வியைச் சந்திக்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிராக வெற்றி பெற்று 4 பட்டங்களையும் வெல்வது கடினம்' என்று தெரிவித்தார். கடைசியாக நடைபெற்ற 35 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில், 34 முறை ஜோகோவிச், நடால், ஃபெடரர் மற்றும் முர்ரே ஆகிய நான்கு பேரில் ஒருவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, September 9, 2013

நடால் சாம்பியன் : யு.எஸ்., ஓபனில் அசத்தல்: ஜோகோவிச் ஏமாற்றம்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்பெயினின் நடாலை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். மீண்டும் எழுச்சி கண்ட நடால் அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-1 என தன்வசப்படுத்தினார். சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த ஆட்டத்தின் முடிவில், நடால் 6-2, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச் சென்றார். இரண்டாவது முறை: இதன் மூலம், நடால் யு.எஸ்., ஓபன் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன் 2010ம் ஆண்டு இத்தொடரை கைப்பற்றியிருந்தார். தவிர, ஒட்டுமொத்தமாக நடால் பெறும் 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு இத்தொடரில் முழங்கால் காயம் காரணமாக விலகிய இவர், பிப்ரவரி மாதம் மீண்டும் போட்டிக்கு திரும்பினார். இந்நிலையில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, யு.எஸ்., ஓபன் பட்டத்தை வென்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. செரினா அசத்தல்: இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்திலுள்ள பெலாரசின் அசரன்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை 58 நிமிட போராட்டத்துக்குப் பின் 7-5 என, செரினா கைப்பற்றினார். அடுத்த செட்டில் 4-1 என முன்னிலை பெற்றார். இருப்பினும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய அசரன்கா 6-6 என சமன் செய்தார். பின் "டை பிரேக்கர்' மூலம் இதை 7-6 என வென்று பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது செட்டில் சொதப்பினார் அசரன்கா. இதை பயன்படுத்திக் கொண்ட செரினா 6-1 என வென்றார். 2 மணி நேரம், 45 நிமிடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில், செரினா வில்லியம்ஸ் 7-5, 6-7, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். இத்துடன் பரிசுப்பணமாக போனஸ் (ரூ. 6.5 கோடி) உட்பட மொத்தம் ரூ. 23.24 கோடி தட்டிச் சென்றார். இதற்கு முன் 1999, 2002, 2008, 2012ல் இத்தொடரில் சாதித்த செரினா, ஐந்தாவது முறையாக யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். தவிர, ஆஸ்திரேலிய ஓபனில் 5 (2003, 2005, 2007, 2009, 2010), பிரெஞ்ச் ஓபனில் 2 (2002, 2013), விம்பிள்டனில் 5 (2002, 2003, 2009, 2010, 2012) என மொத்தம், 17 கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றுள்ளார். முதல் வீராங்கனை யு.எஸ்.ஓபன் வரலாற்றில் அதிக வயதில் (31) பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார் செரினா வில்லியம்ஸ். இதற்கு முன் 293 நாட்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் 1973ல் வென்று இருந்தார். * தவிர, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில் அதிக வயதில் பட்டம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை செரினா தான். * தரவரிசையில் "நம்பர்-1' இடத்தில் இருந்து, கடந்த 2007ல் ஜஸ்டின் ஹெனின், தற்போதுசெரினா கோப்பை வென்றுள்ளனர். * அதேபோல, 2009-2010க்குப் (கிளைஸ்டர்ஸ்) பின், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கோப்பை வென்றது செரினா மட்டும் தான். மூன்றாவது இடம் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப், அதிகபட்சமாக 22 முறை கோப்பை வென்றார். அடுத்த இடத்தில் அமெரிக்காவின் கிறிஸ் எவர்ட், ö குடியரசின் மார்டினா நவரத்திலோவா ஆகியோர் 18 பட்டம் வென்றுள்ளனர். மூன்றாவது (17) இடத்தில் செரினா வில்லியம் உள்ளார்.

ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம்: ஓட்டெடுப்பில் அமோக வெற்றி

வரும் 2020ல் நடக்கும் ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம் இடம் பெறுகிறது. நேற்று நடந்த ஓட்டெடுப்பில் மகத்தான வெற்றி பெற்றது. இதனால் இந்திய நட்சத்திரங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். உலகின் மிகப் பழமையான விளையாட்டு மல்யுத்தம். நவீன ஒலிம்பிக் துவக்கப்பட்டது (1896) முதல் இடம் பெற்று வருகிறது. இதில், இந்தியாவின் ஜாதவ்(1952, ஹெல்சின்கி), சுஷில் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் பதக்கம் வென்று அசத்தினர். இதற்கிடையே, போதிய வரவேற்பில்லை என்ற காரணத்துக்காக 2020ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்தம் நீக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) அறிவித்தது. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மல்யுத்தத்தை மீண்டும் சேர்க்க ஏற்பாடுகள் நடந்தன. மல்யுத்தம், ஸ்குவாஷ், பேஸ்பால்/சாப்ட்பால் ஆகிய மூன்று போட்டிகளில் ஏதாவது ஒன்று தேர்வு செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஸ்குவாஷ் நிராகரிப்பு: இது தொடர்பாக அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கும் ஐ.ஓ.சி., பொதுக்குழு கூட்டத்தில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் உள்ள 95 ஓட்டுகளில், மல்யுத்தம் 49 ஓட்டுகளுடன் முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றது. இதையடுத்து 2020, 2024ல் நடக்கும் ஒலிம்பிக்கில் தொடர்ந்து இடம் பெறும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்குவாஷ்(22 ஓட்டு), பேஸ்பால்/சாப்ட்பால் (24 ஓட்டு) போட்டிகள் வாய்ப்பை இழந்தன. சுஷில் மகிழ்ச்சி: இது குறித்து ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கூறுகையில்,""மீண்டும் மல்யுத்தம் சேர்க்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. எதிர்காலத்தில் நம்மவர்கள் மல்யுத்தத்தில் கண்டிப்பாக நிறைய பதக்கம் வெல்வார்கள்,''என்றார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ராஜ் சிங் கூறுகையில்,""வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமை ஜப்பானுக்கு கிடைத்த போதே மல்யுத்தம் இடம் பெறும் என நம்பினேன். ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் மல்யுத்தத்திற்கு ஆதரவாக ஓட்டு அளித்ததற்கு நன்றி,''என்றார். லண்டன் ஒலம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் கூறுகையில்,"" மல்யுத்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. தற்போது இந்த அச்சம் நீங்கியுள்ளது. இன்னொரு பதக்கம் வென்றது போல உணருகிறேன்,''என்றார். பயிற்சியாளர் சத்பால் சிங் கூறுகையில்,""ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் மல்யுத்தம் மூலம் தான் கிடைத்தன. தற்போதைய செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,''என்றார். சவுரவ் ஏமாற்றம்: இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோசல் கூறுகையில்,""ஸ்குவாஷ் போட்டி அரிய வாய்ப்பை இழந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஒலிம்பிக்கில் இடம் பெற தொடர்ந்து முயற்சிப்போம்,''என்றார்.

Sunday, September 8, 2013

டோக்கியோவில்2020 ஒலிம்பிக்!

2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஜப்பானின் டோக்கியோ நகரம் வென்றுள்ளது. நேற்று, ஆர்ஜெண்டீனாவில் உள்ள பியூனொஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இஸ்தான்புல், மெட்ரிட் ஆகிய நகரங்களை தோற்கடித்து ஜப்பான் இவ்வாய்ப்பை வென்றுள்ளது. இறுதியாக 1964ம் ஆண்டு ஜப்பான் இப்போட்டிகளை நடத்தியிருந்தது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது. அதுவே முதன் முறையாக ஆசிய நாடொன்று போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்ற தருணம் ஆகும். அதன் பின்னர் 42 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மீண்டும் 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. ஜப்பான் தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக மீண்டும் போட்டியிட்ட போது புகுஷிமா அணு இல்லையா மீண்டும் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அது போன்று எந்தவொரு சம்பவமும் இனி நடைபெறாது. டோக்கியோ அணு உலையிலிருந்து 150 மைல் தொலைவில் உள்ளது. எனவே எந்தப் பாதிப்பும் ஏற்படாது என ஜப்பானிய பிரதமர் உறுதி அளித்தார். 2011 இல் பூகம்பம், சுனாமி ஜப்பான் வட-கிழக்கு பகுதிகளை தாக்கிய போது புகுஷிமா அணு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவிடம் இந்த வாய்ப்பை இழந்த பின்னர் டோக்கியோ இந்த முறை நேரிடையாக இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளை இரண்டாவது தடவையாக நடத்தும் ஒரே நாடு எனும் பெருமையையும் டோக்கியோ வென்றுள்ளது.

Saturday, September 7, 2013

நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த பயஸ் ஜோடி

அமெரிக்க ஓபனில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி மற்றும் இரட்டையர் அரையிறுதி ஆட்டங்களில் நடப்புச் சாம்பியன்கள் வெளியேற்றப்பட்டனர். இரட்டையர் பிரிவில் இந்த ஆண்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்று 1951-ம் ஆண்டு நிகழ்ந்த சாதனையை சமன் செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களின் கனவை தகர்த்தது பயஸ் ஜோடி. நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ரடேக் ஸ்டீபானெக் ஜோடி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரையன் சகோதரர்களை தோற்கடித்தது. இந்த ஆண்டில் விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை பிரையன் சகோதரர்கள் வென்றனர். ஆனால், தனது சொந்த நாட்டில் நடைபெற்ற இவ்வாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பிரையன் சகோதரர்களால் வெல்ல முடியவில்லை. பயஸ் ஜோடி, தங்களது இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் பியா-பிரேசிலின் புருனே சோரெஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. பியா-சோரெஸ் ஜோடி, தங்களது அரையிறுதியில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் இவான் டோடிஜ்-பிரேசிலின் மார்சிலோ மிலோ ஜோடியை வீழ்த்தியது. 3-வது அமெரிக்க ஓபன் பட்டம்: லியாண்டர் பயஸ், இதற்கு முன் இரட்டையர் பிரிவில் 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். பிரையன் சகோதரர்களை வீழ்த்திய நம்பிக்கையில், தற்போது அவர் இறுதிச்சுற்றை எதிர்கொள்கிறார். இந்தப் பட்டத்தை வென்றால், இரட்டையர் பிரிவில் பயஸ் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 8ஆக உயரும். முர்ரேவுக்கு அதிர்ச்சி: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, நேர் செட்களில் தோல்வியடைந்தார். வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடம் 6-4, 6-3, 6-2 என்ற செட்களில் முர்ரே தோற்றார். இந்த வெற்றி குறித்து வாவ்ரிங்கா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது எனக்கு முதலாவது அரையிறுதி. முர்ரேவை நேர் செட்களில் தோற்கச் செய்ததால், நான் நன்றாகவே விளையாடியுள்ளேன் என்று தெரிவித்தார். இந்த ஆண்டில், ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்ற முர்ரேவுக்கு, கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைகொடுக்கவில்லை. 146 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியுள்ள முர்ரே, தற்போதுதான் நேர் செட்களில் தோல்வி அடைந்துள்ளார். வாவ்ரிங்கா-ஜோகோவிச்: ஆடவர் பிரிவின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மிகைல் யோஷ்னியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜோகோவிச், அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு 14 முறை தொடர்ந்து முன்னேறியவர் என்ற பெருமையைப் பெற்றார் இவர், தனது அரையிறுதிச் சுற்றில் வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இவர்களிருவரும் இதுவரை 14 முறை மோதியுள்ளனர். அதில், ஜோகோவிச் 12 முறையும், வாவ்ரிங்கா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஜோகோவிச்சுடனான ஆட்டம் குறித்து வாவ்ரிங்கா கூறுகையில், "எங்கள் இருவரிடையேயான ஆட்டத்தில் ஜோகோவிச்சே ஆதிக்கம் செலுத்தியுள்ளார். ஆனால், ஹார்ட் கோட் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வருவதாக நான் உணர்கிறேன்' என்று தெரிவித்தார். சானியா ஜோடி தோல்வி: இப்போட்டியின் மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- சீனாவின் ùஸங் ஜீ ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி-டெல்லச்சுவா ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது. அமெரிக்க ஓபனில் பங்கேற்ற இந்திய வீரர்களில், பயஸ் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனாக இருந்த இத்தாலியின் சாரா எர்ரானி- ராபர்டா வின்சி ஜோடி 3-6, 1-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளிடம் தோல்வியடைந்தது. ஆடவர் பிரிவில் அமெரிக்காவின் சகோதரர்கள் ஜோடி தோல்வியைத் தழுவினாலும், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் சகோதரிகள் ஜோடி வெற்றி பெற்றுள்ளது, அமெரிக்க ரசிகர்களுக்கு ஆறுதலை அதிர்ச்சி யளித்துள்ளது. ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டிகள் ரிச்சர்டு கேஸ்கியூ (பிரான்ஸ், 8) - ரஃபேல் நடால் (ஸ்பெயின், 2) நோவக் ஜோகோவிச் (செர்பியா,1) - ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா (ஸ்விட்சர்லாந்து, 9) அடைப்புக் குறிக்குள் (நாடு, போட்டித் தரவரிசை

Wednesday, August 28, 2013

என் பலம் எனக்குத் தெரியும்!”

உலக பேட்மிட்டன் அரங்கில், 'இந்தியாவின் இன்னோர் இளம் புயல்’ பி.வி.சிந்து! சீனா, தாய்லாந்து, மலேசிய வீரர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த பேட்மிட்டன் கோட்டையில், ஊடுருவியவர் சாய்னா. அந்த சாய்னாவே எட்டிப்பிடிக்காத சாதனையாக உலக பேட் மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் சிந்து. முன்னாள் கூடைப் பந்தாட்ட வீரர்களான ரமணா - விஜயா ஆகியோரின் இரண்டாவது மகள், சிந்து. விஜயா, தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ரயில்வே வேலைக்காக ஹைதராபாத்துக்கு இடம் மாறியவர். ''ஐந்து வயதில் அப்பாவுடன் வாலிபால் மைதானத்துக்குச் செல்லும்போது அருகில் இருந்த பேட்மிட்டன் அரங்கில் விளையாட ஆர்வம் காட்டிய சிந்துவை, பேட்மிட்டன் பயிற்சியில் சேர்த்தார் ரமணா. அதன் பிறகு, இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் பயிற்சியாளரான கோபிசந்தின் அகாடமியில் ஆறு வருடங்களாகப் பயிற்சி பெற்றுவருகிறார்!'' என்று கூறும் விஜயாவின் குரலில் அத்தனை பூரிப்பு. ''நான், சர்வதேச அளவில் விளையாடுவேன் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. என் கனவை நிறைவேற்றிய என் பயிற்சியாளர் கோபிசந்த் சாருக்குத்தான் இந்த வெற்றிக்கான பெருமை எல்லாம் சேரும்!'' என்கிறார் சிந்து அடக்கமாக. நான் தினமும் நான்கு செஷன்களாக பயிற்சி எடுப்பேன். காலை 4.30 முதல் 6 மணி வரை, பிறகு 7 மணி முதல் 8.30 மணி வரை, மீண்டும் 11.30 மணி முதல் 12.30 வரை. பிறகு, கொஞ்சம் ஓய்வு. மீண்டும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை. ஒருநாள்கூட பயிற்சி தவறாது. பந்தயங்களின்போது கடைசிப் புள்ளி வரை சோர்வடையாமல் விளையாடுவதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படும். அதனால் ஸ்டாமினாவை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் 5 அடி 10 அங்குல உயரம் இருப்பது, கடவுள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வரம். பேட்மிட்டன் வீரர்கள், பொதுவாக இந்த அளவு உயரமாக இருக்க மாட்டார்கள். இந்த உயரத்தால் ஸ்மாஷ் ஷாட்டுகளை என்னால் மிகவும் எளிதாக அடிக்க முடிகிறது!'' என்று சொல்லும் சிந்து, ஹைதராபாத் செயின்ட் ஆன்ஸ் கல்லூரியின் (பி.காம்.,) முதலாம் ஆண்டு மாணவி. 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் பேட்மிட்டன் தரவரிசைப் பட்டியலில் 204-வது இடத்தில் இருந்தவர், இரண்டே ஆண்டுகளில் 12-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற மலேசிய ஓப்பன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான சீனாவின் லீ ஸ¨ராயைத் தோற்கடித்து சர்வதேச கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர், தற்போதைய உலக பேட்மிட்டன் தொடரில் முன்னாள் சாம்பி யன்களான சீனாவின் யிஹான் வாங் மற்றும் ஷிஸியான் வாங்கைத் தோற்கடித்து அசத்தியிருக்கிறார். ''உலகின் டாப் வீராங்கனைகளைத் தோற்கடித்து இருக்கிறீர்கள். இனி, உங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ஏகப பட்ட எதிர்பார்ப்பைச் சுமக்க வேண்டிஇருக்குமே?'' ''இதை 'பிரஷர்’ என எடுத்துக்கொள்ள மாட்டேன். இதற்கு முன் பார்க்காத பலர், என் ஆட் டத்தைப் பார்க்கிறார்கள்; உற்சாகப்படுத்துகிறார்கள் என்று பாசிட்டிவாக எடுத்துக்கொள்வேன். சர்வதேச வீரர் - வீராங்கனைகளுக்கான முதல் தகுதியே பிரஷரை சமாளிப்பதுதான். அந்தப் பக்குவம் எனக்கு இருக்கிறது என நம்புகிறேன். ஏனென்றால், கோபிசந்த் சார் பயிற்சியின் தொடக்கப் பாடமே, 'உனது ஆட்டத்தில் கவனம் செலுத்து’ என்பதுதான்! எதிராளியின் பலம் என்ன, பலவீனம் என்ன என் பதை யோசித்துக் குழப்பிக்கொள் ளாமல், என் பலத்தை வைத்து எப்படி ஸ்கோர் செய்வது என்று தான் யோசிப்பேன்!'' ''உங்களின் ரோல் மாடல்?'' ''உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இப்போது சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லின் டான்தான். உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளாமல் விவேகமாக விளையாடுவார்!'' 2016-ம் ஆண்டின் பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளின்போது தங்க வேட்டையில் சாய்னா வுக்கு தோள்கொடுக்கவிருக்கிறார் சிந்து. கலக்குங்க சிஸ்டர்ஸ்!

இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா!

அங்கிதா ரெய்னா...’ இந்தியாவின் இளம் டென்னிஸ் புயல்! 20-வது வயதிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை அங்கீகாரம் பெற்றிருக்கும் அங்கிதா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.காம்., மாணவியான அங்கிதா, இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறார். ''இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா தயாராகிறாரா?'' ''அப்படிச் சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன். அஞ்சு வருடங்கள் முன் சானியா மிர்ஸா, ஷிகா, சுனிதா ராவ் என இந்தியாவிலிருந்து மூன்று வீராங்கனைகள் சர்வதேச அளவில் விளையாடிவந்தார்கள். அதன் பிறகு சர்வதேச அளவில் இந்திய வீராங்கனைகள் முத்திரைப் பதிக்கவில்லை. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அடுத்த ஆண்டு 'கிராண்ட்ஸ்லாம்’ பந்தயங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன். புல் மற்றும் களிமண் என இரண்டு வகையான மைதானங்களிலும் சிறப்பாக விளையாடிவருவது எனக்கு அதிக நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது!'' டென்னிஸ் ஆர்வம் எப்படி வந்தது?'' ''என் அம்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை. எங்கள் வீட்டுக்குப் பின்னாலேயே டென்னிஸ் மைதானம் இருந்தது. அதனால் நான்கு வயது முதல் என் அம்மா அந்த விளையாட்டு மைதானத்துக்கு என்னை அழைத்துச் செல்வார். எனக்கு டென்னிஸ் பிடித்துப்போக, முழுவதுமாக டென்னிஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக புனே-வில் தங்கி பயிற்சி எடுத்துவருகிறேன்!'' ''உங்களை மிகவும் உற்சாகப்படுத்திய பாராட்டு எது?'' ''ஸ்பெயினில் ஸ்பானிஷ் வீரருடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது உலகின் மூன்றாம் நிலை வீரரான டேவிட் ஃபெர்ரரும் அவருடைய பயிற்சியாளரும் அந்தப் பக்கமாகச் சென்றார்கள். அடுத்த கோர்ட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் என் ஆட்டத்தைப் பார்த்து அங்கேயே நின்றுவிட்டனர். டேவிட் ஃபெர்ரரின் பயிற்சியாளர் என்னிடம், 'உனக்கு பேக்ஹேண்ட் நன்றாக வருகிறது. விரைவில் உன்னை சர்வதேச அரங்கில் பார்க்கலாம்’ என்று பாராட்டினார். அந்தப் பாராட்டை என்னால் மறக்கவே முடியாது!'' ''உங்களுடைய ரோல் மாடல்?'' ''ரஃபேல் நடால். அவருடைய எனர்ஜியும் டெக்னிக்கும்... அதிசயம்!'' ''சர்வதேச அளவில் விளையாடச் செல்லும் இந்திய வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள் என்ன?'' ''வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பெரும்பாலும் தனியாகத்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடுதலான பணம் செலவாகும் என்பதால், வீட்டிலிருந்து துணைக்கு யாரையும் அழைத்துச்செல்ல முடிவதில்லை. ஒருமுறை நானும் இன்னொரு டென்னிஸ் வீராங்கனையும் மொராக்கோவுக்கு விளையாடச் சென்றோம். அங்கே நாங்கள் விளையாட வேண்டிய இடத்துக்கு செல்ல ரயில் ஏறினோம். அங்கே மக்கள் அனைவரும் பிரெஞ்சு மொழியில்தான் பேசினார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் பெயரை எப்படிச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. கடைசியில், நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பிய சில விநாடிகளில் ஒருவர், 'இதுதான் நீங்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன்’ என்றார். போட்டிக்குத் தாமதமாகிறது என்பதால், ரயிலை நிறுத்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தேன். செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்து 6,000 திராம் அபராதம் விதித்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துதான் எங்களை விடுவித்தார்கள். அன்று எங்களால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இப்படியான சூழல்தான் மிகப் பெரிய சவால். பெரியவர்களுடன் செல்லும்போது இதுபோன்ற சூழலில் இருந்து தப்பிக்கலாம். போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தலாம்!'' ''உங்கள் லட்சியம்?'' ''இந்திய வீராங்கனைகள் யாரும் இதுவரை ஒற்றையர் பிரிவில் 'கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்றது இல்லை. அதேபோல் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றது இல்லை. இந்த இரண்டு சாதனைகளையும் படைக்கவேண்டும் என்பதே என் லட்சியம்!''

Friday, August 23, 2013

ஸ்குவாஷ் தீபிகா... காதல் பத்திக்கிச்சு!

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல்... விளையாட்டு உலகின் புதிய காதல் ஜோடி! சர்வதேச ரேங்கிங்கில் உச்ச இடம் பிடித்திருக்கும் ஸ்குவாஷ் வீராங்கனை சென்னையைச் சேர்ந்த தீபிகாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக்குக்கும் இடையே காதல்! இருவர் வீட்டிலுமே காதலுக்கு சம்மதம் கிடைக்க, ஜாலியாக 'லவ் கேம்’ ஆடுகிறார்கள். ஆனால், தத்தமது கேரியரில் அடுத்தகட்ட முத்திரைக்கான முயற்சியில் இருப்பதால், வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை. சினிமாவில் நடிக்க உச்ச நட்சத்திரங்கள் அழைப்புவிடுத்தும் கண்டுகொள்ளாத, சென்னையின் மல்ட்டிமில்லியனர் குடும்பங்கள் தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ள முயன்றும் அசைந்துகொடுக்காத தீபிகா, தினேஷ§டன் காதல்கொண்டது ஒருவகையில் விசேஷம். காரணம், தினேஷ் கார்த்திக் முன்னரே திருமணமாகி விவாகரத்தானவர்! இந்தக் காதல் தொடர்பாக தினேஷ் கார்த்திக்கின் நண்பரிடம் பேசினேன்.
''தினேஷைவிட ஆறு வயது இளையவர் தீபிகா. தினேஷின் குடும்பம், குவைத்தில் செட்டிலான குடும்பம். கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக தினேஷ் மட்டும் சென்னையில் தனியாக இருந்தார். அதனால் அவருக்கு 21 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். அவரது முன்னாள் மனைவி நிகிதா, மும்பையைச் சேர்ந்தவர். நிகிதாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தினேஷின் நண்பருமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவர, உடைந்துபோனார் தினேஷ். கிட்டத்தட்ட ஆறு மாதம் அவர் யாருடனும் சரியாகப் பேசவே இல்லை. அதன்பிறகு நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு ஜிம்மில்தான் தீபிகாவை முதன்முதலில் சந்தித்தார் தினேஷ். அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரிடையே உருவான நட்பு, வெகுவிரைவிலேயே காதலாக மலர்ந்தது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீபிகாவுக்கு, சர்ப்ரைஸ் சந்திப்பு மூலம் அதிர்ச்சியளித்தார் தினேஷ். பிறகு இந்திய அணி, இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடியபோது தினேஷ§ம் தீபிகாவும் ஒன்றாகவே லண்டன் வீதிகளில் ஜாலி வலம் வந்திருக்கிறார்கள். அந்த உற்சாகம்தானோ என்னவோ, சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டிகளில் சதம் அடித்தார் தினேஷ். அதேபோல் இந்த ஆண்டு மும்பை அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடினார். தினேஷ் மீண்டும் ஃபார்முக்கு வர தீபிகாவின் காதலே காரணம்!'' என்று முடித்தார் அவர். இப்போது தினேஷ் தென் ஆப்பிரிக்காவிலும், தீபிகா லண்டனிலும் பயிற்சியில் இருக்கிறார்கள். காதல்குறித்து விளக்கமளிக்க, இருவருக்குமே விருப்பம் இல்லை. தீபிகாவின் அம்மா சூசனிடம் பேசினேன். ''இருவரும் காதலிப்பது உண்மைதான். ஆனால், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் பந்தம். அதனால் எப்போது திருமணம் என்று இப்போது நான் பதில் சொல்ல முடியாது!'' என்றார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்கிறார்கள் இருதரப்புக்கும் நெருக்கமான நண்பர்கள். புது காதல் ஜோடிக்கு வாழ்த்துகள்!

Monday, March 18, 2013

ஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமணம்

பிறவியிலேயே பெண்ணாக பிறந்த ஒருவர், அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி, தனது தாயாரின் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் விசித்திர சம்பவம் ஒன்று இங்கிலாந்து நட்டில் நடந்துள்ளது. காதலுக்கு கண் மட்டும் இல்லை விவஸ்தையும் இல்லை என்கிற கூற்று இவர்கள் வாழ்க்கையில் உண்மையாக மாறியுள்ளது. பெண் குழந்தையாக பிறந்த பாபி பிரான்சிஸ் (வயது 19) என்பவர் ஆண் மகனாக விரும்பினார். இதற்காக கடந்த 2 ஆண்டாக சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் வாலிப மிடுக்குடன் உடை அணிந்து வலம் வருகிறார். விரைவிலேயே அவர் அறுவைசிகிச்சை நடத்தி முழு ஆண் தகுதி பெற இருக்கிறார். பாபி சமீபத்தில் தனது தாயாருடைய தோழி டோனாவை (31) ஒரு சிற்றுண்டி சாலையில் சந்திக்க இருவருக்கும் இடையே திடீர் காதல் அரும்பியது. பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்க காதல் முற்றிப்போய் இணைபிரியா ஜோடியாகி விட்டார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பாபி 5 வயது குழந்தையாக இருந்த போது டோனாவின் மடியில் தவழ்ந்தவர். மேலும் அவர் 3 குழந்தைக்கு தாய் வேறு. காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானோ தெரியவில்லை. தற்போது இந்த ஜோடி தங்களது கைகளில் காதலர் பெயரை பச்சைக்குத்தி இருக்கிறார்கள். திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கனடிய செக்ஸ் பிரியர்களுக்க்கு விருந்தாகும் குழந்தைகள்.

கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கு சுற்றுலா நிமித்தம் வரும் கனடியர்கள் குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் கியூபா நாட்டின் சிறுவயது குழந்தைகளை தங்களது கம்பெனியாக அனுப்பும்படி நிர்ப்பந்திருக்கின்றார்களாம். பண விஷயத்தில் தாராளம் காட்டுவதால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை இவர்களுடன் அனுப்பி வைக்கின்றனர். சுற்றுலாவில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கும் கனடியர்கள் அந்த சிறுமிகளை பயன்படுத்திவிட்டு, போகுபோது ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வதால், கனடியர்கள் சுற்றுலாப்பயணியாக வந்தால் உடனே போட்டி போட்டுக்கொண்டு அவர்களுக்கு கம்பெனியனாக செல்ல சிறுமிகள் விருப்பம் தெரிவிப்பதாக கியூபா போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சிறு வயது பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற கவலையில் இருக்கும் கியூபா, இதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது.

Sunday, March 17, 2013

ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல் உறவு வைத்து சாதனை

பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர், செயற்கை ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் பெற்று, இதுவரை நூறு பெண்களிடம் உடலுறவு கொண்டு சாதனை புரிந்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அதிசய மனிதர். இங்கிலாந்தில் Greater Manchester என்ற இடத்தில் பிறந்த Andrew Wardle என்பவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் பிறவியிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்தவர். 15 வயது வரை சிறுநீர் கழிப்பதற்கு கூட டியூப் உபயோகித்து அவஸ்தைப்பட்ட இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ஆணுறுப்பு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் இவருடைய வலது கையில் தோளில் இருந்து சதையை எடுத்து, செயற்கை குழாய்களில் நவீன மருத்துவ முறையின்படி இணைத்து ஒரு செயற்கை ஆணுறுப்பை உருவாக்கி அவருடைய உடலில் வெற்றிகரமாக பொருத்தினர். இதன்பின் இவரால் டியூப் உதவியின்றி சிறுநீர் கழிக்க முடிந்தது. சிறிது நாட்கள் கழித்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இவர் பெண்களிடம் செக்ஸ் உறவு கொள்வதற்கு அனுமதி பெற்று பாலியல் உறவில் ஈடுபட்டார். இவரால் மற்ற ஆண்களைப் போலவே செயல்பட முடிந்தது. இதனால் இவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். இதன்பின், இவர் இதுவரை சுமார் நூறு பெண்களிடம் செக்ஸ் உறவு கொண்டாராம். அவர்களில் சிலர் ஓரிரு நாட்கள் மட்டும் வந்து போவார்கள் சிலர் மாதக்கணக்கில் இருப்பவர்கள். இவர்தான் உலகிலேயே முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி செக்ஸில் ஈடுபட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திய இரட்டை சகோதரிகள் ஓய்வு.

நெதர்லாந்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, "செக்ஸ்' தொழிலில், ஈடுபட்டு வந்த, இரட்டை சகோதரிகள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.நெதர்லாந்தின் தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும், லூயிஸ் மற்றும் மார்ட்டின் போக்கன்ஸ்; இரட்டை சகோதரிகள். இவர்கள், விபசார தொழிலில், மூன்று லட்சம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். 70 வயதான இவர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். தங்கள் அனுபவங்கள் குறித்து, அவர்கள் கூறியதாவது:இளம் வயதில், எங்கள் மீது நடத்தப்பட்ட, பாலியல் வன்முறைகளை தவிர்க்க, வேறு வழியின்றி, விபசார தொழிலில் ஈடுபடத் துவங்கினோம்.நாங்கள் இருவரும், எப்போதும் ஒரே மாதிரியான உடையை, குறிப்பாக, சிவப்பு நிற ஆடை அணிவோம்.கடந்த, 2000ம் ஆண்டு, நெதர்லாந்தில், விபசார தொழிலுக்கு, அரசு அங்கீகாரம் கிடைத்தது. இதற்கு முன், மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில், இத்தொழில் இருந்தது.அங்கீகாரம் கிடைத்தாலும், செக்ஸ் தொழிலாளிகள், அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பல பெண்கள், வீட்டிலிருந்தே, "இன்டர்நெட்' மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.முதுமையால் ஏற்பட்டுள்ள மூட்டு வலி காரணமாக, நாங்கள் தற்போது, ஓய்வு பெற்று விட்டோம்.இவ்வாறு, இரட்டை சகோதரிகள் கூறினர்.

அலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரி

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டார். இந்த வீடியோவை James P என்ற யூசர்நேம் உள்ள டுவிட்டர் ரசிகர் ஒருவர் தன்னுடைய பகுதியில் பதிவு செய்துள்ளார். ஏராளமான இண்டர்நெட் ரசிகர்கள் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அலுவலக நேரத்தின்போது ஆபாச படம் பார்க்கும் நிலை அதிகரித்து வருவதாகவும், இதுமட்டுமின்றி அலுவலக கேண்டீன், டாய்லட் முதலிய இடங்களிலும் பலர் தங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி ஆபாச் படம் பார்த்து வருவதாகவும் டுவிட்டரில் பலர் கமெண்ட் எழுதியுள்ளனர்.

தலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.

கம்ப்யூட்டர்,டிவி, செய்தித்தாள் முதலியவற்றை தலைகீழாகவே பார்க்கும் நிலையில் செர்பிய பெண் Bojana Danilovic என்பவர் பரிதாபமாக இருக்கின்றார். மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறினால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது. ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் (28) என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், செய்தித் தாள், டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவற்றை அவர் தலைகீழாக வைத்தே பார்க்க வேண்டியுள்ளது. பிறவியில் இருந்தே தனக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும் தனக்கென்று தலைகீழாக பொருத்தப்பட்ட தனி டி.வி.யும் இருப்பதாக கூறுகிறார், போஜானா டேனிலோவிக்

நோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.

இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டன் அருகேயுள்ள நகரம் Swindon. இந்த நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிப்பது போன்ற கேமரா பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது ஆபாச படம் எடுத்ததாக எழுந்த குற்றாச்சாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தென்மேற்கு லண்டனில் உள்ள Dr Davinderjit Bains என்ற 45 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை ஆடையை நீக்கி ஒருசில பரிசோதனைகள் செய்யும் போது, தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கேமரா பொருத்தப்பட்ட வ்fட்ச் மூலம் வீடியோ படம் எடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் ஆபரேஷன் செய்யும் பெண்களையும் இதுபோன்று வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து சந்தேகம் கொண்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது மருத்துவமனையை சோதனை செய்தபோது அவரது கம்ப்யூட்டரில் பல பெண் நோயாளிகளின் ஆபாச் படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் எதிரிகளை துப்பறிய செல்லும்போது கேமரா பொருத்திய வாட்ச் கட்டிக்கொண்டு செல்வது போன்றே இவரும் செயல்பட்டுள்ளார்.

Wednesday, March 13, 2013

ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாண்டவராக தேர்வு

புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு, புதிய போப்தேர்வு செய்யப்பட்டு விடுவார், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான மக்கள், சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே கூடி, புகைபோக்கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது. கார்டினல்கள் இன்று, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடி, மீண்டும் ஓட்டு போட்டனர். இரண்டாவது முறையும், தேவாலய புகைபோக்கியில் கரும்புகை வெளியேறியது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதற்கு அடையாளமாக வெண்புகை வெளியே வரும், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான கிறிஸ்துவர்கள், சிஸ்டைன் தேவாலயத்திற்கு அருகே காத்திருக்கின்றனர். இத்தாலி நாட்டு கார்டினல் ஏஞ்சலோ ஸ்கோலா, பிரேசில் நாட்டின ஓடிலோ ஸ்கெரர், கனடா நாட்டின் மார்க் அவுலெட் ஆகியோர் புதிய போப்புக்கான பரிந்துரையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றிரவு புகைக்கூண்டிலிருந்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக வெண்புகை வெளியேறியது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. இதன்படி, அர்‌ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகர ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வயது 76. லத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக போப் ஆண்டவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய போப் இனி, போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். புதிய போப் தேர்வு செய்யப்படுவது எப்படி "கான்கிளேவ்' எனப்படும் கார்டினல்களின் கூட்டத்தின் மூலம், புதிய போப் தேர்வு செய்யப்படுகிறார். ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக, புனிதமாக போப் மதிக்கப்படுகிறார். அவரை தேர்வு செய்யும் முறை பழைமையானது. இந்த முறையை, 1274ம் ஆண்டு போப் பத்தாம் கிரிகோரி என்பவர் தோற்றுவித்தார். போப்பாக இருப்பவர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அந்த இடம் காலியாகிவிடும். அடுத்தவரை தேர்வு செய்யும் வரை, அந்த இடம் "வெற்று அரியணை' என அழைக்கப்படும். இக்காலகட்டத்தில் புதிய போப்பை தேர்வு செய்ய, "கான்கிளேவ்' கூட்டப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கார்டினல்களுக்கு, அழைப்பு அனுப்பப்படும். ஓட்டளிக்க ஒன்றுகூடும் கார்டினல்களின் வயது 80க்குள் இருக்க வேண்டும். போப் தேர்தலில், வேட்பாளர் பெயர் முன்னரே அறிவிக்கப்பட மாட்டாது. வாடிகனில் ரகசியமாக சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடும் "கான்கிளேவ்' கூட்டத்தில், பிடித்தவருக்கு கார்டினல்கள் ஓட்டளிப்பர். மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறுபவர் புதிய போப் ஆகலாம். ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவரிடம் கருத்து கேட்கப்படும். அவர் ஒத்துக்கொண்டால் போப்பாக தேர்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைபோக்கி வழியே வெண்புகை வெளியிடப்படும். ஒருவருக்கு பெரும் பான்மை கிடைக்காவிட்டாலோ, தேர்வு செய்யப்பட்டவர் பதவியை மறுத்தாலோ கரும்புகை வெளியிடப்படும். "கான்கிளேவ்' கூட்டம் நடக்கும் போது, சிஸ்டைன் சிற்றாலயத்தில் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும்வரை இக்கட்டுப்பாடு இருக்கும். மூன்று நாட்களுக்குள் முடிவு எட்டப்படாவிட்டால், ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் ஓட்டெடுப்பு நடக்கும். ஒருவர் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று போப் ஆண்டவராக சம்மதம் தெரிவித்தால், தனது பெயரை தானே தேர்வு செய்வார். போப் ஆன பின், பெயரை மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. பின் போப்புக்கான பாரம்பரிய ஆடைகளுடன், வாடிகன் தேவாலயத்தில் தோன்றி முதல் செய்தியை மக்களுக்கு வழங்குவார். போப் ஆண்டவர்: ஏசு கிறிஸ்து விண்ணுலகம் செல்லும் முன், கிறிஸ்தவர்களை வழிநடத்தும் பொறுப்பை முதன்மை சீடர் புனித பீட்டரிடம் ஒப்படைத்தார். புனித பீட்டரின் கல்லறையின் மீதுதான், வாடிகன் தேவாலயம் அமைந்துள்ளது. புனித பீட்டரிடம் ஏசு கிறஸ்து ஒப்படைத்த பணியை, அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோம் நகர ஆயர்கள் செய்து வந்தனர். இவர்களில் முதன்மையானவரே போப் என அழைக்கப்படுகிறார்.