Tuesday, September 20, 2011

நிர்வாண அழகிகள்







வனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்பிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளõர்.

லேனெட் நியூவெல்க் எனும் பெயருடைய இந்த பெண் படப்பிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள சாகசமான புகைப்படங்களில் நிர்வாணக் கோலத்தில் உடல்முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் இந்த மொடல் அழகிகள் வரிக் குதிரைகளாவும் யானைகளாகவும் வாலில்லாக் குரங்குகளாகவும் சிறுத்தைகளாகவும் காட்சியளிக்கின்றனர்.

சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த லென்னெட் கால்நடை வைத்தியராக இருந்து சிகிச்சையளித்த அந்த விலங்குகளில் ஒன்றாக தான் வரவேண்டுமென பிள்ளைப் பராயத்தில் அவாவுற்றிருந்தாராம். அன்ரி ஹியூமன் என அழைக்கப்படும் இப்புகைப்படத் தொகுப்பை அவர் லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநகரங்களில் எடுத்திருந்தாராம் வரிக்குதிரையொன்றுக்கு அடுத்தாற்போல் கறுப்பு வெள்ளை வர்ணங்களை தனது மேனியை மறைத்துக் கொண்டிருக்கும் மொடல் அழகி ஜஸ்மினாவின் புகைப்படம் காண்போரைக் கவரும் அவரது புகைப்படங்களில் ஒன்றாகக் காட்சியளிக்கிறது.

இன்னுமொரு படத்தில் மற்றொரு மொடல் அழகியான கேலா நரைவெள்ளை மற்றும் பழுப்பு நிற வர்ணத்தை தனது உடலின் மத்திய பாகத்தில் பூசியநிலையில் பென்னெட்டின் அருகில் சுசி எனப்படும் ஆபிரிக்க யானையின் நகல் வடிவத்தில் தோற்றமளிக்கின்றார். அழகி ஜஸ்மினா பன்னிரெண்டு அடி நீளமான டெய்சி என அழைக்கப்படும் மலைப்பாம்பு தன்னுடலைச்சுற்றிய நிலையில் பாம்புத்தோல் வர்ணத்தில் காணப்படும் படமே இத்தொகுப்பின் இறுதிப்படமாகும். அத்துடன் அவர் கறுப்பு புள்ளிகளுடனான பழுப்பு நிறவர்ணத்தில் தன்னுடலை மறைத்தவாறு ராங்கோ எனப்படும் அழகான சிறுத்தைக்குப் பின்னால் அமர்ந்திருப்பது போன்ற இன்னுமொரு படத்திலும் தோற்றமளிக்கின்றார்.

No comments: