Sunday, October 30, 2011

கழுதையாக மாறிய விலை மாது.

கழுதையொன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றமொன்றில் நிறுத்தப்பட்ட ஒருவர், விபசாரியொருவரே இரவோடிரவாக கழுதையாக மாறியுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் சிம்பாம்வேயில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

மயோ (28 வயது) என்ற நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழுதையொன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை பார்த்த பொலிஸார் அவரை பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து தப்பிச் சென்ற மயோ மறுநாள் திங்கட்கிழமை ஸவிஷவேன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மயோ தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் தான் விலைமாது ஒருவருடனேயே பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அந்த விலைமாதே பொலிஸார் தன்னை கைது செய்யும் போது கழுதையாக மாறி விட்டதாகவும் மயோ கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நான் டவுண்ரவுண் இரவு விடுதியில் 20 அமெரிக்க டொலர் கட்டணத்தை செலுத்தி விலை மாது ஒருவரை ஏற்பாடு செய்தேன். அந்த விலை மாதுடனேயே பாலியல் உறவில் ஈடுபட்டேன். ஆனால் அவள் எவ்வாறு கழுதையாக மாறினாள் என்று எனக்குத் தெரியவில்லை என மயோ தெரிவித்தார்.

ஆனால் தான் இப்போது அந்தக் கழுதையை மிகவும் நேசிப்பதாக தெரிவித்த மயோ நானும் ஒரு கழுதை என்றே நான் நினைக்கின்றேன். நான் மதுபான விடுதியை விட்டுச் சென்ற போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் நான் அந்தக் கழுதையை தீவிரமாக காதலிக்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் மயோவை தடுப்புக் காவலில் வைக்க இரு அரசாங்க உளவியல் மருத்துவர்களால் பரிசோதனைக்குட்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.