Monday, May 4, 2009

பயந்தால்பார்க்காதே.....







கம்பளை ஆதார வைத்தியசாலையில் (23.04.2009) இளைஞர் ஒருவரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியாக வெளியேறிய 4 அடி நீளமுள்ள மரக்கிளையொன்றினை கம்பளை வைத்தியசாலையின் விஷேட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கணிஸ்ட்ட கமல் வைத்திய குழுவினர் சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.
கம்பளை தெல்பிட்டியைச்சேர்ந்த சமிந்த குமாரஎன்ற 25வயது இளைஞர் குறுந்துவத்தை என்ற இடத்தில் பாரிய செம்பக மரம் ஒன்றினை வெட்டிக்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக மரம் சரியவே ஓடும் பொழுது கால் இடறி வீழ்ந்ததால் இளைஞரின் அருகிலே விழுந்த மரத்தில் இருந்த கிளை ஒன்று இளைஞரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியோக வெளியேறியதையடுத்து 1 1/2 மணித்தியாலய போராட்டத்திற்கு பின் கம்பளை வைத்திய சாலைக்குசெல்லப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் மரக்கிளை அகற்றப்பட்டது

No comments: