Thursday, August 25, 2011

அரை நிர்வாண ஆர்ப்பாட்டப் பேரணி


பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளை வழங்கக்கோரி மத அனுசரணையமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில் அரை நிர்வாண ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர்.

ஏராளமான ஆண்கள் அடங்கலாக நூற்றுக்கணக்கான பெண்கள் கலிபோர்னியாவில் வெனிஸ் கடற்கரையில் திறந்த ""மார்ப்புத் தினமே போய்விடு'', ""Go Topless Days'' எனும் தொனிப் பொருளில் அமைந்த நான்காவது வருடாந்த நிகழ்வில் கலந்து கொள்ளவென திடீரென கூடினர். இன்றும் அனுசரிக்கப்படும் பெண்கள் சமத்துவ தினத்தையொட்டி இந்நிகழ்வு அமெரிக்க நகரங்கள் பலவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அடுத்த வார இறுதியில் கனடாவில் இரண்டு நகரங்களில் நடாத்தப்படவுள்ளதாம். இதில் கலந்து கொண்ட பெண்களில் சிலர் மேலாடைகளின்றி கலந்து கொண்டனர். ஆண்கள் அனைவரும் நீச்சல் உடைகளுடன் மார்புக் கச்சைகளையும் அணிந்து பகிரங்கமான முறையில் திறந்த மார்புகளுடன் திரிய தங்களை அனுமதிக்கும் இந்த கபட நாடகத்திற்கு தமது எதிர்ப்பை காண்பித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முலைக் காம்புகள் இருக்கையில் ஏன் பெண்கள் மட்டும் தங்கள் முலைக்காம்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்? அனைவருக்கும் திறந்த மார்புகளுடன் செல்லும் சம உரிமை வேண்டும். இன்றேல் எவருக்கம் அந்த உரிமை வழங்கக்கூடாது என்ற சுலோகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஏனையோர் விநோத உடைகளை அணிந்திருந்தனர்.

இந்த மத அனுசரணை அமைப்பு மனித இனப் பிரச்சினைகளுக்கு விஞ்ஞானமே மூலக்காரணமென கூறியுள்ளது. அதன் குறிக்கோளின் பிரகாரம் திருமணம் தேவையற்றதொன்றெனவும் அதன் உறுப்பினர்கள்
தங்கள் மேனி அழகை கொண்டாட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான லாரா ரேஸ்ட் ஜாக் கடந்த ஞாயிறன்று நடந்த பேரணியில் கலந்து கொண்டதுடன் அரசியலமைப்பில் பெண்கள் சொல்லளவில் ஆண்களுக்கு சமமானவர்களே எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அனைத்து விடயங்களிலும் பெண்களுக்கு சமவுரிமை வழங்காத அரசியலமைப்பால் என்ன நன்மை என கேள்வி எழுப்பினர்.

இது ஒரு அடிப்படை குடியியல் உரிமை. கறுப்பினத்தவரும் வெள்ளையரும் தண்ணீர் ஊற்றை எவ்வாறு சமமாக உபயோகிக்கிறார்களோ அதைப் போன்றதே ஆண் பெண் சமவுரிமையும் என விபரித்தார்.
மெட்ரோநியூஸ்26/08/11

Wednesday, May 4, 2011

ஷேன் வோனை முத்தமிட்ட காதலி

சில மாதங்களுக்கு முன்னர் அவர்களிருவரும் காதலர்களாக பகிரங்கமாக உலா வந்ததிலிருந்து பிரித்தானிய பிரபல நடிகை தனது கிரிக்கெட் காதலனைப் பார்க்கவென இரண்டாவது தடவையாகவும் இந்தியா வந்துள்ளார்.
ஆயினும் கரங்களைக் கோர்த்தப்படி அன்பை வெளிப்படுத்துவதற்கு அப்பால் இருவருக்குமிடையே உண்மையான அன்பு இன்றுவரை மலர்ந்து வருகின்றது.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை ஷேன் வோன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணி தோற்கடித்த பின்னர் இந்த ஜோடிகள் ஒருவருக்கொருவர் முத்தப் பரிமாற்றம் செய்வதை கமராக்கள் பதிவு செய்தனவாம். ஆமாம்! ராஜஸ்தான் ரோயல்ஸின் அபார வெற்றியின் பின்னர் விளையாட்டரங்கில் நடிகை எலிஸபெத் நேரில் சென்று ஷேன் வோனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து முத்தப் பரிமாற்றம் செய்தபோது ஷேன் வோனின் மகளான புரூக் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆமாம்! ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் ஷேன் வோனின் மகள் புரூக் ஆகியோர் முன்னிலையில் தாங்கள் இருவரும் உதடுகளில் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என எவ்வித சலனமும் அடையாமல் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் சந்தோஷம் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
ஜெய்ப்பூரில் நடந்த அந்த அற்புதமான போட்டியைக் கண்டு ரசிக்கவென 45 வயதான எலிஸபெத், 41 வயதான தனது காதலன் ஷேன் வோனின் விளையாட்டை ரசிக்கவென இங்கிலாந்திலிருந்து இரண்டாவது தடவையாகவும் இந்தியா வந்திருந்தார். ஆயினும் தான் முதன் முதலாக வந்திருந்தபோது தனது அணி தோல்வியை தழுவியபோது தான் மிக்க துக்கமடைந்திருந்ததாக டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் எலிஸபெத் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் போட்டி முடிவுற்றதும் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்தோடினார்.
வெள்ளை ஜீன்ஸும் நீல நிறத்திலான ராஜஸ்தான் ரோயல் அணியின் டீஷேர்ட்டும் அணிந்திருந்தார்.
அவர் இதற்கு முன்னரும் ஏற்கனவே நடைபெற்றிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியின்போதும் இதே கோலத்தில் காட்சியளித்தமை தெரிந்ததே.
இந்தத் தடவையும் தனது மகன் டேமியனுடன் இந்தியாவுக்கு வருகை தந்த எலிஸபெத் ஈஸ்டர் பெருநாளையும் இந்தியாவிலேயே கொண்டாட வேண்டியதாயிற்றாம்.
ஷேன் வோனுடனான தொடர்பை அடுத்து எலிஸபெத் கிரிக்கெட் ரசிகையாக மாறிவிட்டாராம்.
அவுஸ்திரேலியர்கள் என்றால் தனக்கு ரொம்பப் பிடிக்குமெனக் கூறும் பிரித்தானிய நடிகை எலிஸபெத் ஷேன் வோனை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?
மெட்ரோநியூஸ்

Monday, April 25, 2011

வில்லியம் கதே திருமணக் கேக்தயாரிக்க இரண்டு மாதங்கள்



எவருமே சாப்பிட முடியாத அந்தக் கேக்கைத் தயாரிப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்ததாம். அப்படியானால், அந்தக் கேக் எதற்காக? என்று நீங்கள் கேட்கிறீர்களா?
ஆமாம்! இங்கிலாந்தின் மகாராணியின் பேரனும், இளவரசருமான வில்லியம் கதேமில்டனின் திருமணம் எதிர்வரும் 29 ஆம் திகதி கோலாகலமாக வெஸ்ட்மினிஸ்டர் அபே யில் நடைபெறுகிறதல் லவா! அதற்காகத் தான் இந்த கேக் தயாரிப்பாம்.
இந்த அதிசயக் கேக்கை தயாரித்து முடித்துள்ள அரச குடும்பத்து விசிறியான ஷெய்லா கார்ட்டர் நாளாந்தம் மூன்று மணி நேரம் செலவிட்டு, இதனை இரண்டு மாதங்களில் ஒருவாறு தயாரித்து முடித்துள்ளார். இதில் 100, 000 தையல் வேலைப்பாடுகள் பொறிக்கப்பட் டுள்ளடன், கையால் தைக்கப்பட்டுள்ள சுமார் 300 பூ வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளைப் பட்டு வடிவிலமைந்த சர்க்கரைப் பூசல்களும் (ஐசிங்) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.
மூன்று அடுக்குகள் கொண்ட அந்த அற்புதமான கேக்கின் உச்சிப்பகுதியில் புதுமணத் தம்பதிகளான இளவரசர் வில்லியம் கதே மிடில்டனின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் ஈர்க்க வல்லதாக உள்ளதாம்.
ஓய்வு பெற்றுள்ள பழம் மற்றும் காய்கறி வகைகள் விற்பவரான திருமதி கார்ட்டர் நாளொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் வரை பொறுமை காத்து இந்தப் போலியான இனிப்புப் பண்டத்தைத் தயாரித்து முடித்துள்ளாராம்.
ஹான்ட்ஸில் சவுத்தம்டனைச் சேர்ந்த 74 வயதான அவர் இந்த அதிசயக் கேக் தயாரிப்பு பற்றி கூறுகையில், 400 மணித்தியாலங்கள் எடுத்த இந்த வேலைப்பாடு உண்மையில் அன்பின் மகத்துவம் பற்றியதாக அமைந்துள்ளதுடன் இதனைச் செய்து முடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், இப்படியே வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் செய்து வந்ததால், சமைத்த உணவெதனையும் தன்னால் சாப்பிட முடியவில்லையென தனது கணவர் புலம்பிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நான் இங்கிலாந்தின் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவதால் குறிப்பாக டயானா உயிரோடு இருந்த கால கட்டத்தில் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதாகவும், வில்லியமும், கதே மிடில்டன் தம்பதியரும் இனிதே தங்கள் இல்லற வாழ்வில் ஈடுபடுபவரென தாம் நம்புவதாகவும் கூறினார்.
எனது பேத்தி விளையாடுவதற்கென நான் இதற்கு முன்னமும் ஏராளமான இத்தகைய கேக்குகளை செய்துள்ளேன் என்றவர், என்றோ ஒருநாள் திருமணக் கேக் ஒன்றைத் தயாரிக்கும் சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாகவும் ஷெய்லா கூறினார்.
நான் இந்தக் கேக்கைத் தயாரிக்கும் போது, அதன் உச்சிப் பகுதியில் எவருடைய உருவத்தை அமைப்பதென்பதை நினைத்திருக்கவேயில்லை. வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் நிறைவேறியபோது தான் அவர்களின் திருமண கேக்கைத் தயாரிக்கும் துணிவு தனக்குப் பிறந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி, தான் தனது ஏழு பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதற்கென அவர்களின் பிறந்த தினங்களில் அவ்வப்போது இத்தகைய அபூர்வமான கேக்குகளைத் தயாரித்து வழங்கியிருந்ததாகவும் திருமதி கார்ட்டர் கூறினார்.



மெட்ரோநியூஸ்22/04/11

Sunday, April 24, 2011

அழகிய டயானாவைபின்னுக்குத் தள்ளும் கதே


எதிர்வரும் 29ஆம் திகதி இளவரசர் வில்லியமை திருமணம் செய்யும் கதே
மிடில்டன்,
மூன்றாவது அழகிய இளவரசி என்ற சிறப்பு பெறுவார் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பியூட்டிபுல் பீபிள்.கொம் என்னும் இணையத்தளம் 1 இலட்சத்து 27 ஆயிரம் பேரிடம் அழகான ராஜபரம்பரையினர் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கதேக்கு ஆதரவாக 84 சதவீதத்தினரும், டயானாவுக்கு ஆதரவாக 82 சதவீதத்தினரும் வாக்களித்தனர்.
இந்த அழகிய கணக்கெடுப்பில் மொனாகோ இளவரசியும், ஒஸ்கார் விருது பெற்ற நடிகையுமான கிரேஸ் கெல்லி 91 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். 90 சதவீத வாக்குகளுடன் ஜோர்டான் ராணி ராணியா இரண்டாவது இடத்திலும், கதே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று ராஜ குடும்பத்து ஆண்களில் அழகானவர்கள் பற்றி எடுத்த கணக்கெடுப்பில் இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம்
4, 5 ஆகிய இடங்களைப் பிடித்தனர்.
அவர்களின் தந்தை இளவரசர் சார்லஸ் 10ஆவது இடத்தில் உள்ளார்.
கதே மற்றும்
வில்லியம் திருமணம் வரும் 29ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடக்கிறது. இவர்கள் திருமணத்தைப் பற்றித் தான் உலகமே பேசிக் கொண்டிருக்கிறது.

மெட்ரோநியூஸ்

கதே பிடிக்கும் கமிலா பிடிக்காது



விரைவில் இளவரசியாகவிருக்கும் கதே பிடிக்கும், ஆனால் இளவரசர் சார்ள்ஸின் இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது என்று இங்கிலாந்து மக்கள் தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
விரைவில் இளவரசர் வில்லிம்யஸை மணக்கவிருக்கும் கதே, மறைந்த இளவரசி டயானாவைப் போலவே இங்கிலாந்து மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் என்று வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 2 ஆயிரத்து 500 பேரிடம் ராஜ குடும்பத்தினர் பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. இதில் டயானாவும் கதேயயும் சமமான வாக்குகளைப் பெற்றனர். இங்கிலாந்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் 81 சதவீதத்துடனும், அவரது பாட்டி மகாராணி எலிசபெத் 80 சதவீதத்துடனும் மக்களிடையே அதிக பிரபலமாக உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற பாதிப்பேருக்கு இளவரசர் சார்ள்ஸ் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. மேலும், அவரது இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 10இல் 8 பேர் ராஜ திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும், டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை கதேக்கு வில்லியம்ஸ் அணிவித்தது மிகச் சரியே என்றும் தெரிவித்தனர்.திருமணத்திற்கு பிறகு கதே வேலைக்கு போகலாமா என்று கேட்டதற்கு 52 சதவீத இங்கிலாந்து மக்கள் தாரளமாகப் போகலாம் என்றனர். ஆனால், அமெரிக்கர்களோ கதே வேலைக்குப் போகாமல், ராஜ கடமைகளை மட்டும் செய்யட்டும் என்கின்றனர்.

மெட்ரோநியூஸ்

Thursday, April 21, 2011

இளவரசர் வில்லியம் கதே திருமண நினைவு முத்திரைகள்


இளவரசர் வில்லியம் கதே அரச திருமணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் றோயல் மெயில் (Royal Mail) புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
அரச தம்பதியினரின் உத்தியோகபூர்வ திருமண நிச்சயதார்த்த வைபவத்தின்போது பிரபல புகைப்படக் கலைஞரான மைரோ டெஸ்டினோ
(Mairo Testino) வினால் எடுக்கப்பட்ட உருவப்படங்களையே இந்த முத்திரைகள் கொண்டு விளங்குகின்றனவாம். அவரின் கைவண்ண தொழில் நுட்பத்தில் உருவான தம்பதிகளின் படமானது முதற் தர 1.10 பவுண் பெறுமதியான முத்திரையாகப் போகிறதாம். இந்த முத்திரைகள் யாவும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியாரின் பிறந்த தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள.
அரச தம்பதியினரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருமண ஞாபகார்த்த முத்திரை வெளியீடானது மகாராணியின் பேரப்பிள்ளைகளின் ஒருவரின் திருமணத்தைக் குறித்த முதலாவது நிகழ்வாகும்.றோயல் மெயில் பணிப்பாளர் ஸ்ரீபன் அகார் இது பற்றி விபரிக்கையில்,இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்திரை வெளியீட்டை நடாத்துவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன் இந்த முத்திரைகள் இங்கிலாந்தில் மட்டுமின்றி உலகம் பூராவும் பிரபல்யம் பெற்று விளங்குமென நம்புகிறோம்'' எனக் கூறியுள்ளார்.அதே சமயம் இளவரசர் வில்லியம்இதற்கு முன்னரும் இரு தடவைகள் கீணிதூச்டூ Mச்டிடூ இன் முத்திரைகளில் தனது முகத்தைக் காட்டியுள்ளார். அதாவது மகாராணியின் தாயாரின் 100 ஆவது பிறந்த தின (ஆகஸ்ட் 4, 2000) முத்திரையிலும் கடந்த 2003 இல் நடந்த தனது 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரையிலும் அவர் தோன்றியுள்ளார். இப்புதிய முத்திரைகள் இரண்டு முதல் வகுப்பு முத்திரைகளாகவும் இரண்டு 1.10 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியõன முத்திரைகளாகவும் உள்ளமை கவனிக்கத்தக்கது. நேற்று 21 ஆம் திகதி முதல் இப்புதிய முத்திரைகள் தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளதுடன், இவற்றுக்கான கட்டணங்கள் கடந்த ஏழாம் திகதி முதல் றோயல் மெயிலின் இணையத்தளம் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.அத்துடன் 1981 இல் நடந்த இளவரசர் வில்லியமின் பெற்றோராகிய இளவரசர் சாள்ஸ் இளவரசி டயானா திருமணத்தின் போதும் இத்தகைய திருமண நினைவு முத்திரைகளை றோயல் மெயில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகம் பூராவும் அஞ்சலாக்கப்படும் 20 கிராம் எடை வரையான அனைத்து கடிதங்கள் அட்டைகளுக்கும் இப்புதிய 1.10 பவுண் பெறுமதியான முத்திரைகள் பாவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோநியூஸ்22/04/11

இளவரசர் வில்லியம் கதேஉருவங்கள் பொறித்த துவாய்கள் விற்பனை


இம்மாதம் 29 ஆம் திகதியன்று திருமணப் பந்தத்தில் இணையவுள்ள இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் மற்றும் மணப்பெண்ணான கதே ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய ஞாபகார்த்த தேநீர் துவாலைகளை (துவாய்களை) விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டுமென அரண்மனைப் பொறுப்பதிகாரியான சாம்பெஸை ஏர்ஸ் பீல் கடந்த வருடம் குறிப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆயினும் நேற்று முன்தினம் பல்மோரலில் உள்ள அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடை யில் அத்தகைய இரண்டு விற்பனைப் பொருட்களைக் கண்டு அனைவரும் திகைப்படைந்தனராம். அரச உரிமைப் பொருட்களான பருத்தித் துணியிலான 6 ஸ்ரேலிங்பவுண் பெறுமதியான அந்தத் துவாய்கள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட போதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று, ஆடம்பரமான முறையில் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கலவையில் இளவரசர் வில்லியமும்கதேயும் புன்னகை பூத்தபடி காணப்படுவதாக அமைந்துள்ளது.
மற்றைய ஒன்றில் மணப் பெண் கதே தொப்பி ஒன்றை அணிந்த வண்ணம் குதிக்கால் உயர்ந்த பாதணிகளுடனும் மற்றும் குட்டைப் பாவாடையுடன் செந்நிற தொலைபேசிக் கூண்டொன்றைப் பின்னணியாகக் கொண்டு காணப்படுகிறாராம்.
இந்த சுவாரஸ்யமான விற்பனையின்போது அரச ஆடைத்தொகுப்பின் ஓர் அங்கமான உத்தியோகபூர்வ தேநீர் துவாயை ஒன்று 7.95 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது. வில்லியம் கதே தோன்றும் அந்த நீல வெள்ளை வர்ணக் கலவையுள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துணியில் வில்லியம்கதே இருவரினதும் முதலெழுத்துக்களான ஙி மற்றும் இ யுடன் சிறியதொரு கிரீடமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று துவாய்களையும் 'க்டூண்tஞுணூ ஙிஞுச்திஞுணூண்' நிறுவனம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் அனுமதியுடன் விநியோகித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்21/04/11