Thursday, August 6, 2009

நிர்வாண சிலை


உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலிக்கு நிர்வாண சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஆளுயர சிலையான இது ஓக்லகாமா நகரில் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் சிலை திறக்கப்படவுள்ளது.
ஜூலி, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போல இந்த சிலையை வடித்துள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த சிற்பி டேணியல் எட்வர்ட்ஸ்.
செப்டம்பர் மாதம் இந்த சிலை திறக்கப்படவுள்ளதாம். லேன்ட்மார்க் ஃபார் பிரஸ்ட்பீடிங் என்று இந்த சிலைக்கு பெயர் வைத்துள்ளனர்.
தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஜூலி பால் கொடுப்பது போன்ற புகைப்படம் கடந்த ஆண்டு வெளியான டபிள்யூ என்ற இதழில் அட்டைப்படமாக வெளியானது.
இதைப் பார்த்துதான் ஜூலிக்கு அதே போஸில் சிலை வடிக்க முடிவு செய்தாராம் எட்வர்ட்ஸ்.
இந்த சிலையை வடிக்கும் வேலையை பேன்டம்-பினான்சியல் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சேன்டி வில்சன் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் இன்று தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
தாய்மார்கள், இந்த சிலையைப் பார்த்தாவது தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வருவார்கள் என நம்புகிறோம். அந்த உயரிய நோக்கத்திற்காகவே இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்

2 comments:

குப்பன்.யாஹூ said...

i came to see the picture of the statue. its not there.

Jawahar said...

ம்ம்க்கும்..முழு போட்டோ போட்டா என்ன, குறைஞ்சா போய்டுவீங்க! சிலை திறந்ததும் அந்த போட்டோவும் போடுவீங்கல்லே?

http://kgjawarlal.wordpress.com