Wednesday, March 18, 2009

நான்கு கை, காலுடன் பிறந்த அதிசய குழந்தை



திருவெண்ணெய்நல்லூரில் நான்கு கை, கால்கள்மற்றும் ஒரு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை இறந்தது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த காந்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆராயி(25). இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. முதலில் பெண் குழந்தை பிறந்து இறந்தது.
இதைத் தொடர்ந்து ஆராயி கருவுற்று இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றார். அக்குழந்தைக்கு தற்போது நான்கு வயது ஆகிறது.இந்நிலையில் ஆராயி மீண்டும் கருவுற்று பிரசவத்திற்காகநேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு நான்கு கால், நான்கு கை, ஒரு தலையுடன் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு மணி நேரத்தில் அக்குழந்தை பரிதாபமாக இறந்தது.

1 comment:

நிகழ்காலத்தில்... said...

எந்த அதிசயமும் இல்லை.
முறை தவறிய பாலுறவு, அல்லது
கருப்பை அமைப்பு, சேர்த்துவைத்த
பாவப்பதிவு போன்றவை காரணமாக
இருக்கும்.
முடிந்தால் படத்தை மட்டுமாவது எடுத்து
விடுங்கள்.பார்ப்பவர் மனதில் நல்லுணர்வை ஏற்படுத்தாது.