Thursday, March 5, 2009

காந்திஜிகைப்பட எழுதிய உயில்



தான் பயன்ப டுத்திய பொருள்கள், தனது புத்த கங்கள், தனது படைப்புகள் யாவும் நவஜீவன் அறக்கட்ட ளைக்குத்தான் சொந்தம் என்று மகாத்மா காந்தி உயில் எழுதி வைத்துள்ளார்
இந்த உயிலை மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதியுள்ளார்
இதை கடந்த 1940-ம் ஆண்டு பிப் ரவரி 20-ம் தேதி எழுதப்பட்டுள் ளது
"எனது பொருள்களை சொந் தம் கொண்டாடுவதற்கான சட் டப்பூர்வ உரிமை நவஜீவன் அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு' என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்
"எனக்கு சொத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தா லும், நமது சமூக வழக்கப்ப டியோ அல்லது சட்டத் தேவைக் காகவோ எனக்குச் சொந்தமான அசையும், அசையா பொருள் கள், நான் எழுதிய புத்தகங்கள் அல்லது இனி எழுதவிருக்கும் புத்தகங்கள் - அது அச்சிடப்பட் டிருந்தாலும் அச்சிடப்படாமல் இருந்தாலும் அவை யாவும் நவ ஜீவன் அறக்கட்டளைக்கே சொந்தம்' என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த உயிலில் 1940-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி காந்தி கையெழுத்திட்டுள்ளார். பியார் லால் நாயர், கிஷோர்லால் ஜி மாஷ்ருவாலா ஆகிய இருவரும் சாட்சிகளாக கையெழுத்திட் டுள்ளனர்
நவஜீவன் அறக்கட்டளை 1929-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காந்தியால் நிறுவப்பட் டது
காந்தியின் பொருள்கள் தங்க ளுக்கே சொந்தம் என்று நவஜீ வன் அறக்கட்டளை சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
இந்தப் பொருள்களை சட்டப் படி விலை கொடுத்து வாங்க வழியே இல்லை. சட்டவிரோத மாகவே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் தனது மனு வில் அறக்கட்டளை கூறியுள் ளது குறிப்பிடத்தக்கது

No comments: