Wednesday, March 25, 2009

கால்விரலில்எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதிய மாணவி



கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பார்வையற்ற மூன்றுமாணவிகள் உட்பட 10 பேர், உதவியாளர் மூலம் எஸ்.எஸ்.எல்.சி.,
தேர்வு எழுதினர். கைகள் இல்லாத மாணவி ஒருவர், தனது கால்விரல்களால் தேர்வு எழுதினார்.தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,
தேர்வு நேற்று துவங்கியது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பார்வையற்ற மூன்று மாணவிகள் உட்பட 10 பேர்,
உதவியாளர் மூலம் நேற்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர்.கடலூர் முதுநகர் செயின்ட் டேவிட் மேல்நிலைப்பள்ளியில் நான்கு
மாணவர்கள், சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் இரண்டுமாணவர்கள், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் தலா ஒரு மாணவி, கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவன் உட்பட ஒன்பது பேர் உதவியாளர் மூலம் தேர்வெழுதினர்இதே போல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி புனித மிக்கேல்
மேல்நிலைப்பள்ளி பார்வை யற்ற மாணவி பானுபிரியா, அரசு நியமித்துள்ள உதவியாளர் மூலம் எஸ்.எஸ். எல்.சி., தேர்வெழுதினார்.
இதே பள்ளியில் படிக்கும் ஒட்டம்பட்டைச் சேர்ந்த காது கேளாதமாணவன் முருகன் நேற்று தேர்வெழுதினார்.
: விழுப்புரம் அடுத்த ஆற்காடுகிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் வித்யாஸ்ரீ(18). இரு கைகள்
இல்லாத இவர், ஆற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தஎஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், தனது இடது கால் விரல்களைப்
பயன்படுத்தி தேர்வெழுதினார். மற்ற மாணவர்களைப் போலவித்யாஸ்ரீக்கும் தேர்வு எழுதும் நேரம் ஒதுக்கப்பட்டு,குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வெழுதி அசத்தினார்.

No comments: