Showing posts with label வில்லியம். Show all posts
Showing posts with label வில்லியம். Show all posts

Monday, November 21, 2011

அபசகுன அரண்மனை?


பிரித்தானிய அரச குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாக விளங்கும் கென்சிங்டன் அரண்மனை பற்றிய பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் தம்பதியர் தங்கள் இல்லற வாழ்க்கையை இந்த அரண்மனையிலேயே தொடங்கவுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னர் அங்கு குடியிருந்த அரச குடும்பங்களுக்கு நேர்ந்த கதி பற்றிய வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
மரண வேதனையால் துடித்துக் கொண்டிருந்த கரோலின் மகாராணி ஒருசில நாட்களின் பின்னர் இரத்தம் நச்சுத்தன்மை அடைந்த நிலையில் கொடூரமான முறையில் மரணத்தை தழுவிக் கொண்டார். அவர் எட்டாவது தடவையாக கர்ப்பமடைந்ததன் விளைவாக அவர் தொப்பிள்கொடி குடலிறக்க நோயால் அவஸ்தைப்பட்டு வந்தார். அவரைச் சுற்றி மருத்துவர் படையொன்று நின்றிருந்த போதிலும் கூட அரச குடும்ப கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் என்பதனால் அவர்களால் மகாராணியைப் பரிசோதிக்க முடியாமலிருந்தது. இறுதியாக அவர்கள் மகாராணியின் வயிற்றுப் பகுதி ஊடாக குடலின் ஒரு பகுதியை முன்னுக்கு நகர்த்துவதற்கு உறுதிபூண்டனர். ஆயினும், குடற் பகுதியை பின்னுக்குத் தள்ளுவதிலும் பார்க்க அதனைத் துண்டித்து விடுவதென்ற அவரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்மானத்திற்கு வந்தனர். அது நடந்து எட்டு நாட்களின் பின்னர் இரண்டாம் ஜோர்ஜ் மன்னரின் அன்பு மனைவி கரோலின் மகாராணி தனது இறுதி மூச்சை விட்டார். இந்த பயங்கரம் நிறைந்த மரணப்படுக்கை காட்சி கடந்த 1737 ஆம் வருடம் அரங்கேறியது. ஆயினும் முன்பொருகாலத்தில் கென்சிங்டன் அரண்மனையின் அழகுராணியாக விளங்கிய கரோலின் மட்டுமல்ல, அந்த அரண்மனையின் 320 வருடகால வரலாற்றில் அதன் சுவர்கள், முற்றங்கள், அறைகளுக்குச் செல்லும் நடைபாதைகள் ஆகியனவும் இத்தகைய சோகமயத்திற்குள்ளானவையே.
வரலாற்றுப் புகழ்மிக்க அரச குடும்ப அரண்மனைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வை அதிகாரி லூசி வேர்சி இதுபற்றி குறிப்பிடுகையில்,
கென்சிங்டன் மாளிகையில் குடியிருந்துள்ளோரில் ஆகக் குறைந்தது ஏழு இளவரசிகள் சோக வாழ்வு வாழ்ந்ததாகவும் அல்லது வைத்திய நிலைக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேரழிவுகள் மூலம் இந்த அரண்மனை சபிக்கப்பட்டதொன்றாக விளங்குவதுடன், கெடுதி செய்யும் ஆவி ஒன்று கூட இங்கிருக்கலாமெனவும் அஞ்சப்படுகின்றது.
கடந்த 97 இல் இளவரசி டயானா துர்மரணத்தைத் தழுவிய பின்னர், கென்சிங்டன் அரண்மனையின் வாயிற் கதவுகளுக்கு வெளியே எட்டிப் பார்த்தபடி காட்சியளிக்கும் கடலலை போன்ற பூங்கொத்துக்களை இன்றைய நாட்களில் கண்டுவியப்போர் அதன் கம்பீரமான முகப்புத் தோற்றத்தில் மயங்கி விடுகின்றனர்.
ஆயினும், இத்தகைய சிறப்பு அம்சங்களுக்குப் பின்னால், இளவரசர் வில்லியத்தின் தாயாரான மறைந்த இளவரசி டயானாவுக்கோ திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. அத்துடன் அவரும் சீமாட்டி கத்தரினும் குடியேறவென திருத்தம் செய்யப்பட்டு வரும் 21 அறைகள் கொண்ட அந்த மூன்றடுக்கு மாளிகையில் முன்னர் வசித்திருந்த அவரது பேர்த்தியான இளவரசி மார்க்ரட்டும் அனுகூலங்களும், இடைஞ்சல்களும் நிறைந்த தனது வாழ்க்கைப் பாதையை இங்குதான் கழித்திருந்தார். அறுபதுகளில் கவர்ச்சி மங்கையெனப் புகழப்பட்ட இளவரசி மார்கரெட்டும் புகைப்படக் கலைஞரான அவரது கணவர் ஸ்ணேடன் பிரபுவும் பாலே நடனக் கலைஞர் ருடோல்ப் நுரெயெவ் உள்ளிட்ட தங்கள் நண்பர்களையெல்லாம் அழைத்து விருந்து வைத்து மகிழ்ந்ததும் இந்த அரண்மனையில்தான். அவர்களிருவரினதும் விவாகரத்திற்குப் பின்னர், இளவரசி மார்கட் அதே அறைகளில் பிரபல நடிகர் பீட்டர் செல்லேர்ஸ் மற்றும் அவரின் விளையாட்டுப் பையன் றொடி லெவெனின் ஆகியோருடன் அவர் தனித்திருந்ததாக அவருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் புரளி கிளப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இத்தகைய அவமானகரமான சம்பவங்கள் குடியிருந்த அரண்மனையாகவும் இது இருந்துள்ளது.
கடந்த 1690 களில் கென்சிங்டன் அரண்மனை ஒரு கிராமிய ஏகாந்த இடமாக அதன் சுத்தமான காற்றோட்ட வசதி காரணமாக அனைவராலும் கருதப்பட்டிருந்தது. 1690 இல் மூன்றாம் வில்லியமும் மகாராணி மேரியும் பாரம்பரியமாக அரச பரம்பரையினர் வசித்து வந்த வெள்ளை மண்டப அரண்மனையை விட்டு தாங்கள் கென்சிங்டனில் வாங்கியிருந்த வீட்டை சென். போல் தேவாலயத்தின் கட்டிடக் கலைஞரான சேர் கிறிஸ்தோபர் ரென்னின் உதவியுடன் மீள் வடிவமைத்து அங்கேயே குடியிருந்தனர். ஒரு வார காலத்திற்குள்ளேயே மகாராணி மேரி தனது 32 ஆவது வயதில் பெரிய அம்மைநோயால் பீடிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார்.
மூன்றாம் வில்லியமும் அவரது கணவர் ஜின்ஸ் அரண்மனையில் கடந்த 1702 இல் காலமானார். அதனைத் தொடர்ந்து, கென்சிங்டன் அரண்மனையுடன் தொடர்புடைய மறைந்த இளவரசி மார்கிரட்டின் சகோதரியான ஆன் டென்மார்க் இளவரசர் ஜோர்ஜ் உடனான திருமண பந்தத்தின் மூலம் 17 தடவைகள் கர்ப்பம் தரித்து, முடிக்குரிய வாரிசொன்றைப் பெற்றுக் கொடுக்க முனைந்தார். ஆயினும் அவரது பிள்ளைகளில் எவருமே உரிய பராயத்தை அடையவில்லை. அவற்றுள் சில குறைப் பிரசவங்களாகவும், சில இறந்த நிலையில் பிறந்தனவாகவும் ஏனையவை பெரிய அம்மை நோயால் சிறுபராயத்தில் இறந்தும் விட்டிருந்தன.
நீண்டகாலம் வசித்து வரும் இளவரசர் வில்லியமும் தனது 14 ஆவது வயதில் மர்மமான நோயொன்றால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அவரது தாயாரான இளவரசி டயானாவும் 14 ஆண்டுகள் கழிந்த நிலையில் மணமுடைந்து கணவர் இளவரசர் சாள்ஸைப் பிரிந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியுற்று பிரான்சில் கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தமையும் கவனிக்கத்தக்கது.

மெட்ரோநியூஸ்

Monday, April 25, 2011

வில்லியம் கதே திருமணக் கேக்தயாரிக்க இரண்டு மாதங்கள்



எவருமே சாப்பிட முடியாத அந்தக் கேக்கைத் தயாரிப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்ததாம். அப்படியானால், அந்தக் கேக் எதற்காக? என்று நீங்கள் கேட்கிறீர்களா?
ஆமாம்! இங்கிலாந்தின் மகாராணியின் பேரனும், இளவரசருமான வில்லியம் கதேமில்டனின் திருமணம் எதிர்வரும் 29 ஆம் திகதி கோலாகலமாக வெஸ்ட்மினிஸ்டர் அபே யில் நடைபெறுகிறதல் லவா! அதற்காகத் தான் இந்த கேக் தயாரிப்பாம்.
இந்த அதிசயக் கேக்கை தயாரித்து முடித்துள்ள அரச குடும்பத்து விசிறியான ஷெய்லா கார்ட்டர் நாளாந்தம் மூன்று மணி நேரம் செலவிட்டு, இதனை இரண்டு மாதங்களில் ஒருவாறு தயாரித்து முடித்துள்ளார். இதில் 100, 000 தையல் வேலைப்பாடுகள் பொறிக்கப்பட் டுள்ளடன், கையால் தைக்கப்பட்டுள்ள சுமார் 300 பூ வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளைப் பட்டு வடிவிலமைந்த சர்க்கரைப் பூசல்களும் (ஐசிங்) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.
மூன்று அடுக்குகள் கொண்ட அந்த அற்புதமான கேக்கின் உச்சிப்பகுதியில் புதுமணத் தம்பதிகளான இளவரசர் வில்லியம் கதே மிடில்டனின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் ஈர்க்க வல்லதாக உள்ளதாம்.
ஓய்வு பெற்றுள்ள பழம் மற்றும் காய்கறி வகைகள் விற்பவரான திருமதி கார்ட்டர் நாளொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் வரை பொறுமை காத்து இந்தப் போலியான இனிப்புப் பண்டத்தைத் தயாரித்து முடித்துள்ளாராம்.
ஹான்ட்ஸில் சவுத்தம்டனைச் சேர்ந்த 74 வயதான அவர் இந்த அதிசயக் கேக் தயாரிப்பு பற்றி கூறுகையில், 400 மணித்தியாலங்கள் எடுத்த இந்த வேலைப்பாடு உண்மையில் அன்பின் மகத்துவம் பற்றியதாக அமைந்துள்ளதுடன் இதனைச் செய்து முடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், இப்படியே வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் செய்து வந்ததால், சமைத்த உணவெதனையும் தன்னால் சாப்பிட முடியவில்லையென தனது கணவர் புலம்பிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நான் இங்கிலாந்தின் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவதால் குறிப்பாக டயானா உயிரோடு இருந்த கால கட்டத்தில் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதாகவும், வில்லியமும், கதே மிடில்டன் தம்பதியரும் இனிதே தங்கள் இல்லற வாழ்வில் ஈடுபடுபவரென தாம் நம்புவதாகவும் கூறினார்.
எனது பேத்தி விளையாடுவதற்கென நான் இதற்கு முன்னமும் ஏராளமான இத்தகைய கேக்குகளை செய்துள்ளேன் என்றவர், என்றோ ஒருநாள் திருமணக் கேக் ஒன்றைத் தயாரிக்கும் சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாகவும் ஷெய்லா கூறினார்.
நான் இந்தக் கேக்கைத் தயாரிக்கும் போது, அதன் உச்சிப் பகுதியில் எவருடைய உருவத்தை அமைப்பதென்பதை நினைத்திருக்கவேயில்லை. வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் நிறைவேறியபோது தான் அவர்களின் திருமண கேக்கைத் தயாரிக்கும் துணிவு தனக்குப் பிறந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி, தான் தனது ஏழு பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதற்கென அவர்களின் பிறந்த தினங்களில் அவ்வப்போது இத்தகைய அபூர்வமான கேக்குகளைத் தயாரித்து வழங்கியிருந்ததாகவும் திருமதி கார்ட்டர் கூறினார்.



மெட்ரோநியூஸ்22/04/11

Thursday, April 21, 2011

இளவரசர் வில்லியம் கதே திருமண நினைவு முத்திரைகள்


இளவரசர் வில்லியம் கதே அரச திருமணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் றோயல் மெயில் (Royal Mail) புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
அரச தம்பதியினரின் உத்தியோகபூர்வ திருமண நிச்சயதார்த்த வைபவத்தின்போது பிரபல புகைப்படக் கலைஞரான மைரோ டெஸ்டினோ
(Mairo Testino) வினால் எடுக்கப்பட்ட உருவப்படங்களையே இந்த முத்திரைகள் கொண்டு விளங்குகின்றனவாம். அவரின் கைவண்ண தொழில் நுட்பத்தில் உருவான தம்பதிகளின் படமானது முதற் தர 1.10 பவுண் பெறுமதியான முத்திரையாகப் போகிறதாம். இந்த முத்திரைகள் யாவும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியாரின் பிறந்த தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள.
அரச தம்பதியினரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருமண ஞாபகார்த்த முத்திரை வெளியீடானது மகாராணியின் பேரப்பிள்ளைகளின் ஒருவரின் திருமணத்தைக் குறித்த முதலாவது நிகழ்வாகும்.றோயல் மெயில் பணிப்பாளர் ஸ்ரீபன் அகார் இது பற்றி விபரிக்கையில்,இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்திரை வெளியீட்டை நடாத்துவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன் இந்த முத்திரைகள் இங்கிலாந்தில் மட்டுமின்றி உலகம் பூராவும் பிரபல்யம் பெற்று விளங்குமென நம்புகிறோம்'' எனக் கூறியுள்ளார்.அதே சமயம் இளவரசர் வில்லியம்இதற்கு முன்னரும் இரு தடவைகள் கீணிதூச்டூ Mச்டிடூ இன் முத்திரைகளில் தனது முகத்தைக் காட்டியுள்ளார். அதாவது மகாராணியின் தாயாரின் 100 ஆவது பிறந்த தின (ஆகஸ்ட் 4, 2000) முத்திரையிலும் கடந்த 2003 இல் நடந்த தனது 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரையிலும் அவர் தோன்றியுள்ளார். இப்புதிய முத்திரைகள் இரண்டு முதல் வகுப்பு முத்திரைகளாகவும் இரண்டு 1.10 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியõன முத்திரைகளாகவும் உள்ளமை கவனிக்கத்தக்கது. நேற்று 21 ஆம் திகதி முதல் இப்புதிய முத்திரைகள் தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளதுடன், இவற்றுக்கான கட்டணங்கள் கடந்த ஏழாம் திகதி முதல் றோயல் மெயிலின் இணையத்தளம் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.அத்துடன் 1981 இல் நடந்த இளவரசர் வில்லியமின் பெற்றோராகிய இளவரசர் சாள்ஸ் இளவரசி டயானா திருமணத்தின் போதும் இத்தகைய திருமண நினைவு முத்திரைகளை றோயல் மெயில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகம் பூராவும் அஞ்சலாக்கப்படும் 20 கிராம் எடை வரையான அனைத்து கடிதங்கள் அட்டைகளுக்கும் இப்புதிய 1.10 பவுண் பெறுமதியான முத்திரைகள் பாவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோநியூஸ்22/04/11

இளவரசர் வில்லியம் கதேஉருவங்கள் பொறித்த துவாய்கள் விற்பனை


இம்மாதம் 29 ஆம் திகதியன்று திருமணப் பந்தத்தில் இணையவுள்ள இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் மற்றும் மணப்பெண்ணான கதே ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய ஞாபகார்த்த தேநீர் துவாலைகளை (துவாய்களை) விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டுமென அரண்மனைப் பொறுப்பதிகாரியான சாம்பெஸை ஏர்ஸ் பீல் கடந்த வருடம் குறிப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆயினும் நேற்று முன்தினம் பல்மோரலில் உள்ள அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடை யில் அத்தகைய இரண்டு விற்பனைப் பொருட்களைக் கண்டு அனைவரும் திகைப்படைந்தனராம். அரச உரிமைப் பொருட்களான பருத்தித் துணியிலான 6 ஸ்ரேலிங்பவுண் பெறுமதியான அந்தத் துவாய்கள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட போதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று, ஆடம்பரமான முறையில் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கலவையில் இளவரசர் வில்லியமும்கதேயும் புன்னகை பூத்தபடி காணப்படுவதாக அமைந்துள்ளது.
மற்றைய ஒன்றில் மணப் பெண் கதே தொப்பி ஒன்றை அணிந்த வண்ணம் குதிக்கால் உயர்ந்த பாதணிகளுடனும் மற்றும் குட்டைப் பாவாடையுடன் செந்நிற தொலைபேசிக் கூண்டொன்றைப் பின்னணியாகக் கொண்டு காணப்படுகிறாராம்.
இந்த சுவாரஸ்யமான விற்பனையின்போது அரச ஆடைத்தொகுப்பின் ஓர் அங்கமான உத்தியோகபூர்வ தேநீர் துவாயை ஒன்று 7.95 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது. வில்லியம் கதே தோன்றும் அந்த நீல வெள்ளை வர்ணக் கலவையுள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துணியில் வில்லியம்கதே இருவரினதும் முதலெழுத்துக்களான ஙி மற்றும் இ யுடன் சிறியதொரு கிரீடமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று துவாய்களையும் 'க்டூண்tஞுணூ ஙிஞுச்திஞுணூண்' நிறுவனம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் அனுமதியுடன் விநியோகித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்21/04/11

செல்வி கதேயின் இரவு


இளவரசர் வில்லியமை மணமுடிக்கவுள்ள கதே மிடில்டன் ஒரு தனிப்பெண்ணாக தனது கடைசி இரவைக் கழிக்கவுள்ள ஹோட்டல் அறை இது தான்.
மத்திய லண்டனில் உள்ள கோரிங் ஹோட்டலில் உள்ள இந்த மிகவும் ஆடம்பரமான அடுக்குஅறையை தனிப்பெண்ணாகத் தனது கடைசி இரவைக் கழிப்பதற்கு மிடில்டன் தெரிவு செய்துள்ளார்.
இதற்கென இந்த ஹோட்டல் 150000 பவுண் செலவில் மெருகூட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் மேல் மாடியில் இந்த அறை அமைந்துள்ளது.
இளவரசர் வில்லியமுடனான திருமண தினத்துக்கு முந்திய இரவு மிடில்டன் இங்கு தங்கியிருப்பார். இந்த ஹோட்டல் அறையானது பாரம்பரியமும் நவீனமும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு அறையாகும்.
இது ஐந்து அறைகளின் விசாலத்தை ஒன்றிணைத்த ஒரு பகுதியாகும். இங்குள்ள மலசல கூட உபகரணங்கள் 19ஆம் நூற்றாண்டு முதல் இந்தத் துறையில் தலைசிறந்த வடிவமைப்பாளர்களாகத் திகழும் தோமஸ் கிரப்பர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அசல் "வெனரபல்' ரக உற்பத்திகளாகும். உலகில் பல அரச குடும்ப மாளிகைகளில் இந்த வகை மலசல கூட உபகரணங்களே பாவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல், பெறுமதி மிக்க ஓவியங்கள் பலவும் இந்த அறையை அலங்கரிக்கின்றன. விக்டோரியா மகாராணி தனது திருமணத்தின்போது அணிந்திருந்தது போன்ற ஒரு மாதிரி ஆடை இந்த அறையின் ஆடைகள் வைப்பதற்கான அலுமாரியை இன்னமும் அலங்கரிக்கின்றது.
இங்குள்ள குளியல் அறையிலும் நீர்த் தாக்கம் ஏற்படுத்தாத தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. கதே மிடில்டன் தனது தாய், சகோதரி, மற்றும் பிரதான மணப்பெண் தோழி ஆகியோருடன் இங்கு தங்கவுள்ளார்.
ஒரு இரவுக்கான கட்டணம் 5000 பவுண்களாகும். மிடில்டன் குறிப்பிட்ட இந்தத் தினத்தில் தங்குவதற்கு பேர்கிங்ஹோம் அரண்மனைக்கு அருகில் அவருக்கு ஒரு இணைப்பு இல்லம் வழங்கப்பட்டது.
ஆனாலும், அதை ஏற்காமல் திருமணத்துக்கு முன் பொதுவான ஒரு இடத்தில் தங்க வேண்டும் என முடிவு செய்து இந்த ஹோட்டலைத் தெரிவு செய்துள்ளார்.
மெட்ரோநியூஸ்20/04/11