Thursday, April 21, 2011

இளவரசர் வில்லியம் கதேஉருவங்கள் பொறித்த துவாய்கள் விற்பனை


இம்மாதம் 29 ஆம் திகதியன்று திருமணப் பந்தத்தில் இணையவுள்ள இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் மற்றும் மணப்பெண்ணான கதே ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய ஞாபகார்த்த தேநீர் துவாலைகளை (துவாய்களை) விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டுமென அரண்மனைப் பொறுப்பதிகாரியான சாம்பெஸை ஏர்ஸ் பீல் கடந்த வருடம் குறிப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆயினும் நேற்று முன்தினம் பல்மோரலில் உள்ள அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடை யில் அத்தகைய இரண்டு விற்பனைப் பொருட்களைக் கண்டு அனைவரும் திகைப்படைந்தனராம். அரச உரிமைப் பொருட்களான பருத்தித் துணியிலான 6 ஸ்ரேலிங்பவுண் பெறுமதியான அந்தத் துவாய்கள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட போதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று, ஆடம்பரமான முறையில் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கலவையில் இளவரசர் வில்லியமும்கதேயும் புன்னகை பூத்தபடி காணப்படுவதாக அமைந்துள்ளது.
மற்றைய ஒன்றில் மணப் பெண் கதே தொப்பி ஒன்றை அணிந்த வண்ணம் குதிக்கால் உயர்ந்த பாதணிகளுடனும் மற்றும் குட்டைப் பாவாடையுடன் செந்நிற தொலைபேசிக் கூண்டொன்றைப் பின்னணியாகக் கொண்டு காணப்படுகிறாராம்.
இந்த சுவாரஸ்யமான விற்பனையின்போது அரச ஆடைத்தொகுப்பின் ஓர் அங்கமான உத்தியோகபூர்வ தேநீர் துவாயை ஒன்று 7.95 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது. வில்லியம் கதே தோன்றும் அந்த நீல வெள்ளை வர்ணக் கலவையுள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துணியில் வில்லியம்கதே இருவரினதும் முதலெழுத்துக்களான ஙி மற்றும் இ யுடன் சிறியதொரு கிரீடமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று துவாய்களையும் 'க்டூண்tஞுணூ ஙிஞுச்திஞுணூண்' நிறுவனம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் அனுமதியுடன் விநியோகித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்21/04/11

No comments: