Tuesday, April 20, 2010

; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ


திரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் குமரி மாவட்ட இளைஞர்களின் செல்போன்களில் ஒலிக்கும் புதிய ஆடியோ பேச்சால் மாவட்டமே கிறுகிறுத்து கிடக்கிறது.
செல்போனில் செக்ஸ் வீடியோ காட்சிகள் பரவியது போல் இப்போது செக்ஸ் ஆடியோ பேச்சுகளும் பரவி வருகிறது. சமீபத்தில் இங்குள்ள இளைஞர்கள் சிலரது செல்போனில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிய பேச்சு ஒலிபரப்பாகி வருகிறது. இருவருக்கும் இடையேயான சம்பாஷனை அந்த பெண்ணின் முதலிரவு நாட்களில் இருந்து தொடங்குகிறது.
முதலில் அந்த ஆண் நண்பர்தான் பெண்ணை தொடர்பு கொண்டு பேசுகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பல நாள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனால் அந்த பெண், ஆண் நண்பருடன் சகஜமாக பேசுகிறார்.
குசலம் விசாரிப்பு முடிந்ததும் அந்த ஆண் நண்பர் மெல்ல அவரது முதலிரவு நிகழ்ச்சியை பற்றி கேட்கிறார். முதலில் செல்ல சிணுங்கலுடன் சொல்ல மறுக்கும் அப்பெண் நண்பரின் வற்புறுத்தலால் பேச ஆரம்பிக்கிறார்.
கணவர் தன்னை எங்கெங்கு தொட்டார் என்ன செய்தார் என்பதை சொல்கிறார். இரவு விளக்கு அணைந்த பின்பு காமிராவிலும் படம் பிடிக்க முடியாத காட்சிகளையும் அந்த பெண் சங்கோஜமின்றி விளக்குகிறார். இடையிடையே ஆண் நண்பரின் சந்தேகங்களுக்கும் கூச்சமின்றி பதில் கூறுகிறார்.
முதலிரவு முடிந்து அடுத்து வந்த நாட்களில் கணவனும் மனைவியும் அந்தரங்கமாக இருந்த நேரங்களையும் அந்த பெண் நண்பரோடு பகிர்ந்து கொள்வது காது கூசும் அளவுக்கு பதிவாகி உள்ளது.
இந்த குரல் பதிவை அந்த பெண்ணிடம் பேசிய ஆண் நண்பர்தான் செய்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இடையிலான உரையாடலை கேட்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த பெண்ணின் பேச்சு இயல்பாக இருப்பதையும், ஆனால் அவரோடு பேசும் ஆண் உஷாராக இருந்து பெண்ணிடம் விஷயத்தை கறப்பதிலேயே குறியாக இருப்பதும் தெரிகிறது.
சுமார் 25 நிமிடங்கள் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை கேட்கும் மாணவர்கள் நிச்சயமாக செக்ஸ் உணர்வுக்கு ஆட்பட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே இதுபோன்ற உரையாடல்கள் செல்போன்களில் பரவுவதை தடை செய்ய “சைபர் கிரைம்” போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

No comments: