Monday, November 21, 2011

அபசகுன அரண்மனை?


பிரித்தானிய அரச குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாக விளங்கும் கென்சிங்டன் அரண்மனை பற்றிய பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் தம்பதியர் தங்கள் இல்லற வாழ்க்கையை இந்த அரண்மனையிலேயே தொடங்கவுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னர் அங்கு குடியிருந்த அரச குடும்பங்களுக்கு நேர்ந்த கதி பற்றிய வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
மரண வேதனையால் துடித்துக் கொண்டிருந்த கரோலின் மகாராணி ஒருசில நாட்களின் பின்னர் இரத்தம் நச்சுத்தன்மை அடைந்த நிலையில் கொடூரமான முறையில் மரணத்தை தழுவிக் கொண்டார். அவர் எட்டாவது தடவையாக கர்ப்பமடைந்ததன் விளைவாக அவர் தொப்பிள்கொடி குடலிறக்க நோயால் அவஸ்தைப்பட்டு வந்தார். அவரைச் சுற்றி மருத்துவர் படையொன்று நின்றிருந்த போதிலும் கூட அரச குடும்ப கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் என்பதனால் அவர்களால் மகாராணியைப் பரிசோதிக்க முடியாமலிருந்தது. இறுதியாக அவர்கள் மகாராணியின் வயிற்றுப் பகுதி ஊடாக குடலின் ஒரு பகுதியை முன்னுக்கு நகர்த்துவதற்கு உறுதிபூண்டனர். ஆயினும், குடற் பகுதியை பின்னுக்குத் தள்ளுவதிலும் பார்க்க அதனைத் துண்டித்து விடுவதென்ற அவரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தீர்மானத்திற்கு வந்தனர். அது நடந்து எட்டு நாட்களின் பின்னர் இரண்டாம் ஜோர்ஜ் மன்னரின் அன்பு மனைவி கரோலின் மகாராணி தனது இறுதி மூச்சை விட்டார். இந்த பயங்கரம் நிறைந்த மரணப்படுக்கை காட்சி கடந்த 1737 ஆம் வருடம் அரங்கேறியது. ஆயினும் முன்பொருகாலத்தில் கென்சிங்டன் அரண்மனையின் அழகுராணியாக விளங்கிய கரோலின் மட்டுமல்ல, அந்த அரண்மனையின் 320 வருடகால வரலாற்றில் அதன் சுவர்கள், முற்றங்கள், அறைகளுக்குச் செல்லும் நடைபாதைகள் ஆகியனவும் இத்தகைய சோகமயத்திற்குள்ளானவையே.
வரலாற்றுப் புகழ்மிக்க அரச குடும்ப அரண்மனைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வை அதிகாரி லூசி வேர்சி இதுபற்றி குறிப்பிடுகையில்,
கென்சிங்டன் மாளிகையில் குடியிருந்துள்ளோரில் ஆகக் குறைந்தது ஏழு இளவரசிகள் சோக வாழ்வு வாழ்ந்ததாகவும் அல்லது வைத்திய நிலைக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேரழிவுகள் மூலம் இந்த அரண்மனை சபிக்கப்பட்டதொன்றாக விளங்குவதுடன், கெடுதி செய்யும் ஆவி ஒன்று கூட இங்கிருக்கலாமெனவும் அஞ்சப்படுகின்றது.
கடந்த 97 இல் இளவரசி டயானா துர்மரணத்தைத் தழுவிய பின்னர், கென்சிங்டன் அரண்மனையின் வாயிற் கதவுகளுக்கு வெளியே எட்டிப் பார்த்தபடி காட்சியளிக்கும் கடலலை போன்ற பூங்கொத்துக்களை இன்றைய நாட்களில் கண்டுவியப்போர் அதன் கம்பீரமான முகப்புத் தோற்றத்தில் மயங்கி விடுகின்றனர்.
ஆயினும், இத்தகைய சிறப்பு அம்சங்களுக்குப் பின்னால், இளவரசர் வில்லியத்தின் தாயாரான மறைந்த இளவரசி டயானாவுக்கோ திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. அத்துடன் அவரும் சீமாட்டி கத்தரினும் குடியேறவென திருத்தம் செய்யப்பட்டு வரும் 21 அறைகள் கொண்ட அந்த மூன்றடுக்கு மாளிகையில் முன்னர் வசித்திருந்த அவரது பேர்த்தியான இளவரசி மார்க்ரட்டும் அனுகூலங்களும், இடைஞ்சல்களும் நிறைந்த தனது வாழ்க்கைப் பாதையை இங்குதான் கழித்திருந்தார். அறுபதுகளில் கவர்ச்சி மங்கையெனப் புகழப்பட்ட இளவரசி மார்கரெட்டும் புகைப்படக் கலைஞரான அவரது கணவர் ஸ்ணேடன் பிரபுவும் பாலே நடனக் கலைஞர் ருடோல்ப் நுரெயெவ் உள்ளிட்ட தங்கள் நண்பர்களையெல்லாம் அழைத்து விருந்து வைத்து மகிழ்ந்ததும் இந்த அரண்மனையில்தான். அவர்களிருவரினதும் விவாகரத்திற்குப் பின்னர், இளவரசி மார்கட் அதே அறைகளில் பிரபல நடிகர் பீட்டர் செல்லேர்ஸ் மற்றும் அவரின் விளையாட்டுப் பையன் றொடி லெவெனின் ஆகியோருடன் அவர் தனித்திருந்ததாக அவருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் புரளி கிளப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இத்தகைய அவமானகரமான சம்பவங்கள் குடியிருந்த அரண்மனையாகவும் இது இருந்துள்ளது.
கடந்த 1690 களில் கென்சிங்டன் அரண்மனை ஒரு கிராமிய ஏகாந்த இடமாக அதன் சுத்தமான காற்றோட்ட வசதி காரணமாக அனைவராலும் கருதப்பட்டிருந்தது. 1690 இல் மூன்றாம் வில்லியமும் மகாராணி மேரியும் பாரம்பரியமாக அரச பரம்பரையினர் வசித்து வந்த வெள்ளை மண்டப அரண்மனையை விட்டு தாங்கள் கென்சிங்டனில் வாங்கியிருந்த வீட்டை சென். போல் தேவாலயத்தின் கட்டிடக் கலைஞரான சேர் கிறிஸ்தோபர் ரென்னின் உதவியுடன் மீள் வடிவமைத்து அங்கேயே குடியிருந்தனர். ஒரு வார காலத்திற்குள்ளேயே மகாராணி மேரி தனது 32 ஆவது வயதில் பெரிய அம்மைநோயால் பீடிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார்.
மூன்றாம் வில்லியமும் அவரது கணவர் ஜின்ஸ் அரண்மனையில் கடந்த 1702 இல் காலமானார். அதனைத் தொடர்ந்து, கென்சிங்டன் அரண்மனையுடன் தொடர்புடைய மறைந்த இளவரசி மார்கிரட்டின் சகோதரியான ஆன் டென்மார்க் இளவரசர் ஜோர்ஜ் உடனான திருமண பந்தத்தின் மூலம் 17 தடவைகள் கர்ப்பம் தரித்து, முடிக்குரிய வாரிசொன்றைப் பெற்றுக் கொடுக்க முனைந்தார். ஆயினும் அவரது பிள்ளைகளில் எவருமே உரிய பராயத்தை அடையவில்லை. அவற்றுள் சில குறைப் பிரசவங்களாகவும், சில இறந்த நிலையில் பிறந்தனவாகவும் ஏனையவை பெரிய அம்மை நோயால் சிறுபராயத்தில் இறந்தும் விட்டிருந்தன.
நீண்டகாலம் வசித்து வரும் இளவரசர் வில்லியமும் தனது 14 ஆவது வயதில் மர்மமான நோயொன்றால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அவரது தாயாரான இளவரசி டயானாவும் 14 ஆண்டுகள் கழிந்த நிலையில் மணமுடைந்து கணவர் இளவரசர் சாள்ஸைப் பிரிந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியுற்று பிரான்சில் கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தமையும் கவனிக்கத்தக்கது.

மெட்ரோநியூஸ்

Friday, November 4, 2011

சர்வாதிகாரிகளின் இறுதி நிமிடங்கள்


சதாம் ஹுசைன், டிசம்பர் 30, 2006
தூக்கிலிடுபவரின் சுருக்கி கயிற்றைக் கையாள்வதில் அமெரிக்காவுக்கும் ஈராக்கிற்கும் பொதுவானதொரு ஒற்றுமை காணப்படுகிறது.
ஈராக்கின் சர்வாதிகாரியான சதாம் ஹுசைன் சாமானியமான தூக்கு மேடையில் நின்ற அந்தக் கடைசி சொற்ப நிமிடங்கள் என்றுமே மறக்க முடியாதவை. இவரும் லிபியாபின் கேர்ணல் கடாபியைப் போன்றே அழுக்கு நிறைந்த வடிகான் துளையொன்றில் பயத்தினால் நடு நடுங்கிய நிலையில் கடந்த 2003 டிசம்பரில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர் குறிப்பிட்டதைப் போன்று அவர் ஒரு எலியைப் போன்றே பிடிக்கப்பட்டிருந்தார். நீண்ட தாடியுடன் மிகவும் மெலிந்த நிலையில் அநாதரவான சதாம் 250 நாட்களாக தலைமறைவாகவே அங்குமிங்குமாக அலைந்து தப்பியோடிய வண்ணமிருந்தார். கடந்த 2006 நவம்பர்5ஆம் திகதி ஈராக்கிய விசேட நியாய விசாரணைச் சபை அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பிரகாரம், கடந்த 2006 டிசம்பர் 30 ஆம் திகதி முகமூடி அணிந்திருந்த மனிதர்களால் அவர் கொங்கிறீற்றிலான மண்டபத்திலிருந்த அந்த தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சதாம் ஹுசைன் வெள்ளை நிற சேர்ட்டும் கறுத்த மேலாடையும் அணிந்த நிலையில் தனது தலையையும் கழுத்தையும் மறைக்கும் தொப்பியை அணிய மறுத்ததுடன், ""இறைவனே பெரியவன்'' என சத்தமிட்டார். அங்கு நின்றிருந்த போர் வீரர்களோ அமைதி காக்குமாறு நீதிபதி ஒருவர் கோரும்வரை அவரை இகழ்ந்த வண்ணமே இருந்தனர். சதாம் ஹுசைன் தனது கையில் குர்ஆன் நூலின் பிரதியொன்றை பற்றிப் பிடித்தபடி நின்றபோது அவரது கழுத்தைச் சுற்றியிருந்த சுருக்குக் கயிறு தன் கடமையைச் சரிவரச் செய்தது. ஆமாம் அவரது கழுத்தை அது இறுக்கிக் கொண்டதும் அவரின் தொண்டை முடிச்சு அறுந்தே போனது. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட அந்தக் கணப் பொழுதில் சத்தமொன்று கேட்டது. ஆமாம்! சதாமின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தக் கணப் பொழுதில் இதயத் துடிப்பு இருக்கின்றதா என சோதித்துப் பார்த்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக இறுதியில் அறிவித்தார்.

அடொல்ப் ஹிட்லர் ஏப்ரல் 30, 1945
தரையில் விரிக்கப்பட்டிருந்த அந்தக் கம்பளத்தின் மீது இரத்தம் சொட்டச் சொட்டாக வடிந்து கொண்டிருந்ததுடன் சுட்டெரிக்கப்பட்டிருந்த வாதுமைக் கொட்டைகளின் மணம் காற்றில் கலந்த வண்ணமிருந்தது.
ஏனைய உலக நாடுகளையும் தன் காலடிக்கு கொண்டு வர அராஜக ஆட்சி புரிந்த ஜேர்மன் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரின் அறைக்குள் அந்த ஒற்றைத் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதன் பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த முதலாவது நபர் யாரென்று தெரியுமா? அவர் வேறு யாருமல்ல ஹிட்லருக்கு ஆடை அணிகலன்களை அணிவித்து வந்தவரே தான். ஆமாம் தலைநகர் பேர்லினில் உள்ள பதுங்குக் குழியொன்றில் கடந்த 1945 ஏப்ரல் 30 ஆம் திகதி அவர் ஒளிந்திருந்தார். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதிகளில் ஒருவரான ஃபீல்ட் மார்ஷல் கெய்ட்டல் நகரைப் பாதுகாத்து வரும் தங்கள் போர் வீரர்கள் அன்றிரவு யுத்த தளபாடங்களை போட்டு விட்டு தப்பியோடவுள்ளதாக ஹிட்லரிடம் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னரேதான் ஈவா பிரவுணை திருமணம் செய்திருந்தார் ஹிட்லர். எதிரிப் படைகளான ரஷ்யப் படைகள் தங்களை நெருங்கும் ஆபத்தை உணர்ந்த அவர்களிருவரும் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதென திட்டமிட்டிருந்தனர். தற்கொலை செய்வதற்கென தம் வசமிருந்த சயனைட் வில்லைகளை நாயொன்றுக்கும் அதன் குட்டிகளுக்கும் உண்ணக் கொடுத்து அந்த வில்லைகள் வேலை செய்கின்றனவா என்று கூட சோதித்துப் பார்த்துள்ளனர். தனது மரணத்தை நிச்சயப்படுத்தியவராக ஹிட்லர் தனது உள்ளக வட்டத்தில் இருந்த அனைவருக்கும் பிரியாவிடை கூறியதன் பின்னர் அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தன்னைச் சுட்டுக் கொல்ல முயன்றவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த அந்த சர்வாதிகாரியான ஹிட்லர் தன்னிடமிருந்த அந்த பி.பி.எஸ். கைத்துப்பாக்கியால் தனது தலையில் சுட்டார். மெத்தை ஒன்றில் அமர்ந்து பின்னர் அதில் வீழ்ந்து கிடந்த அவரின் கன்னப் பொறியிலிருந்து இரத்தம் கசிந்தபடியே இருந்தது. வேறு தகவல்களின்படி அவரது தலை மேசை மீது ஒன்றில் பலமாக அடிபட்டு வீழந்ததாகவும் கூறப்பட்டது. அவரது காதல் மனைவி ஈவா பிரவுணும் தன் கணவருடன் உடன் கட்டை ஏறுவதென்று தீர்மானித்தார் போலும். ஆமாம்! வாதுவைக் கொட்டை வாசனை கொண்ட சயனைட் வில்லைகளை உட்கொண்ட அவரின் உயிரற்ற உடல் அதே அறையிலிருந்து மீட்கப்பட்டது.

ஹிட்லரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் அவர்களது சடலங்களை வெளியே எடுத்துச் சென்ற எஸ்.எஸ்.ஓ. அதிகாரிகள் அவற்றின் மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்டினர். இரண்டு மணி நேரமாக அவர்கள் இருவரினதும் சடலங்கள் தீக்கிரையாகிய வண்ணமிருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியிருந்தார்.
நிக்கொலே சியோசெஸ்கியூ டிசம்பர் 25, 1989
ரூமேனியாவில் இன அழிப்பை மேற்ககொண்டு அடக்கு முறை ஆட்சி நடாத்திய சர்வாதிகாரியான நிக்கொலே சியோசெஸ்கியூ மற்றும் அவனது மனைவி எலீனா ஆகிய இருவரையும் சுட்டுக் கொல்வதற்கு ஏராளமான போர் வீரர்கள் நான் முந்தி நீ முந்தி என போட்டா போட்டியில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆயினும் அந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றுவதற்கு திருவுளச் சீட்டுக் குலுக்கல் மூலமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கடந்த 1989 டிசம்பர் 25 ஆம் திகதி தலைநகர் புக்காரெஸ்டில் குறுகிய கால ஒத்திகையின் பின்னர் துணை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சன்ன ரவைகள் அந்தக் கொடிய சர்வாதிகாரியினதும் அவனது மனைவியினதும் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தன. அந்தக் கொடூர ஆட்சியை நடாத்திய நிக்கொலேயை சுற்றிவளைத்த தங்களை மேதாவிகளென சுய பிரகடனஞ் செய்து கொண்ட அந்தக் கிளர்ச்சியாளர்கள் அவனைக் கொல்ல முயற்சித்த போது அவனும் மனைவியும் நாட்டை விட்டு தப்பியோட முனைந்தனர். ஆயினும் களர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட அவர்களிருவரும் திறந்த ஓர் அறையில் அடைக்கப்பட்டதுடன் சட்டவிரோத செல்வம் சேர்த்தமை மற்றும் இன அழிப்புக்காக நியாய விசாரணை நடைபெற்று தொண்ணூறு நிமிடங்களுக்குள் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
முதலில் அவர்களிவரும் தனித் தனியே சுட்டுக் கொல்லப்படுவரென அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது. ஆயினும் தாங்களிருவரும் ஒன்றாகவே சாக விரும்பியதால் இறுதியில் அவர்களின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டது. நியாய விசாரணையின் பின்னர் அவர்களிவரும் பின்னால் கயிற்றால் கட்டப்பட்ட போது, எலீனா தனது புஜங்களில் வலி ஏற்பட்டதாக முறையிட்டாராம். ஆயினும் அவர்களிடம் இரக்கம் எதுவும் காட்டாத போர் வீரர்கள் ""இப்போது உங்களுக்கு எவருமே உதவப் போவதில்லை' எனக் கூறியதுடன் அவர்களை வெளியே செல்ல விட்ட பின்னர் ""வெட்கம், வெட்கம்'' என உரத்துக் கத்தினர். அவர்களைச் சுட்டுக் கொல்லக் காத்திருந்த அந்த இராணுவ வீரர்களுக்கு தங்கள் துப்பாக்கிகளை தானாகவே சுடுமளவுக்கு தயாராக்கி வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்களின் முதலாவது துப்பாக்கி ரவைகள் சர்வதிகாரி நிக்கொலேயின் முழங்கால்களையும் அதன் பின்னர் அவனது நெஞ்சையும் பதம் பார்த்ததுடன் எலீனாவும் அடுத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இரையானார். இருவரும் தரையில் வீழந்து சடலங்களாகக் கிடந்தனர். எலீனாவின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. என்ன பரிதாபம்!
பெனிட்டோ முசோலினி, ஏப்ரல் 28, 1945
இத்தாலியில் அடக்கு முறை ஆட்சி புரிந்த பெனிட்டோ முசோலினி, தனது மனைவி கிளாரா பெட்ராக்கி மற்றும் 15 பேரடங்கிய தனது பாசிஸவாதிக் கும்பல் ஒன்றுடன் சுவிட்சர்லாந்திற்குத் தப்பியோட முனைந்தான். ஜேர்மனிய இராணவச் சீருடையொன்றில் மாறுவேடம் பூண்டிருந்த அவனை கம்யூனிஸ அதிகாரிகளும் போர் வீரர்களும் சூழ்ந்து தடுத்து நிறுத்தினர். அடுத்த நாள் ஜியூலினோ டிமொஸக்ரா எனும் கிராமத்தில் அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டான். இறுதிக் கட்டத்திலும் எதற்கும் அடங்காத அந்தக் கொடூர சர்வாதிகாரி, தன்னைச் சுட்டுக் கொல்லவென பணிக்கப்பட்ட அந்தச் சிப்பாயிடம் ""எனது நெஞ்சில் சுடு'' என அலறியவாறு கூறினானாம். அந்தச் சிப்பாயும் நேரத்தை வீணாக்காமல் தனது துப்பாக்கியை இயக்கினான். நிலத்தில் வீழ்ந்து கிடந்த முசோலினியின் உடம்பில் உயிர் இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்ததை அவதானித்த அந்தச் சிப்பாய் தனது கால்களை நீட்டி வைத்து நடந்து சென்று முசோலினியின் நெஞ்சில் மீண்டும் துப்பாக்கியால் சுட்டான்.
அவனது உயிரற்ற உடல் அவனது மனைவி மற்றும் ஏனையோரது உடல்களுடன் மிலான் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த நடு இராத்திரியில் பெற்றோல் நிரப்பு நிலையமொன்றுக்கு வெளியே இறுதிச் சடங்குகளெதுவுமின்றி அடக்கம் செய்யப்பட்டது. அவனது வெற்றுடல் தரையில் கிடந்தபோது இத்தாலிய மக்கள் தம்மை வாட்டி வதைத்த அந்த சர்வாதிகாரி மீது மணித்தியாலக் கணக்கில் கல்லெறிந்தும் பழி தீர்த்தனராம். ஆமாம் மரணத்தின் பின்னும் அவர்கள் அவனுக்கு மரியாதை காட்டவில்லை'' அவர்கள் தங்கள் கால்களால் முசோலினியின் இறந்த உடல் மீது நடாத்திய தாக்குதலால் அவனது தலைப் பகுதி அடையாளங் காண முடியாதவாறு சிதைவடைந்திருந்தது. அதன் பின்னர் அவர்கள் அனைவரதும் சடலங்களும் இறைச்சி தொங்க விடப் பயன்படும் கொளுக்கிளில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டன. அந்தக் காட்சி கொடூர ஆட்சியிலிருந்து மீளப் பெற்ற இத்தாலி மக்கள் தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடும் நிகழ்வாகவே பார்க்கப்பட்டது'' ஆமாம்! ஆடம்பர வாழ்வு வாழ்ந்து, சர்வாதிகார ஆட்சியைத் தமதாக்கிக் கொண்ட அந்தக் கொடிய சர்வதிகாரி முசோலினியும் அவனது பாசிஸ கும்பலும் மண்ணோடு மண்ணாக மாண்டமை குறித்து யார்தான் கவலைப்படப் போகின்றார்கள்?

இயன் அந்தனிஸ் கியூ ஜுன் 1, 1946
சர்வாதிகாரிகள் அடிக்கடி தவறான நம்பிக்கை கொண்டு இலகுவில் ஏமாறுபவர்களாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது. இதற்கு ரூமேனியாவை சர்வாதிகார முறையில் கொடிய ஆட்சி நடாத்திய இயன் அந்தனிஸ் கியூ விதிவிலக்கானவன் அல்ல. ஆமாம்! அவனை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய‌ வேளையிலும் கூட அவன் தான் அணிந்திருந்த தொப்பியை மேல்நோக்கி உயரப் பிடித்துக் கொண்டிருந்தானாம்.

ரூமேனியாவின் போர்க் காலத் தலைவனாக விளங்கிய அவனது ஆட்சியின்போது 400,000 மக்களின் மரணங்களுக்குப் பொறுப்பாளியாக இருந்த அவனுக்கெதிராக கடந்த 1946 இல் போர்க் குற்றங்கள் புரிந்தமை சமாதானத்திற்கு எதிராகச் செயற்பட்டமை; மற்றும் சதிப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நீதி விசாரணை நடத்தப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது தான் தாமதம், அவனது கொடூர ஆட்சிக்குத் துணை போயிருந்த மேலும் மூவருடன், அவன் வயலொன்றுக்குள் தூக்கி வீசப்பட்டான். அந்த நால்வருக்கும் எதிரே குறி வைத்த நிலையிலிருந்த துப்பாக்கிதாரர் துப்பாக்கியின் விசையை அழுத்தியதும் ஒரு வினாடிக்குள் ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மண்ணில் சாய்ந்தனர். அவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்த அந்தச் சடலங்களின் அருகில் சென்ற அதிகாரி ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் பட படவென்று பல தடவைகள் சடலங்களின் மீது சரமாரியாக சட்டு சன்ன மழை பொழிந்தாராம்.

ரபேல் ட்ருஜில்லோ, மே 30, 1961

சிக்காகோவில் ஆயதமேந்திக் கொடும் தொழில் புரியும் கூட்டத்தினர் பற்றிய திரைப் படத்தில் வரும் ஒரு காட்சியைப் போன்று அந்த இருண்ட வீதியில் தனது காரோட்டியால் செலுத்தப்பட்ட அந்தக் காரில் அமர்ந்திருந்த டொமினிக்கன் குடியரசின் சர்வாதிகாரியான ரபேல் ட்ருஜில்லோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. தன் மீதான முதல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகாத அவன் அந்த துப்பாக்கி ஏந்திய ஏழு பேர் மீதும் எதிர்த்து துப்பாக்கியால் சுட்டான். ஆயினும் நாட்டின் கோடீஸ்வரரின் உத்தரவின் பேரில் அவனை காருக்கு வெளியே இழுத்தெடுத்த அவர்கள் விரைவாக அவனைக் கொன்றொழித்தனர்.
தமிழில் ""எஜமானன்'' என்று பொருள்படும் எல் எஜபே' (El Jefe) என அழைக்கப்பட்ட ட்ருஜில்லோ கடந்த 1930 1961 வரையான முப்பதாண்டு கால கொடூர ஆட்சியை டொமினிக்கன் குடியரசில் நடத்தி வந்ததுடன் சித்திரவதைகளும் கொலைகளுமே அவனது அரசியல் ஆயுதங்களாக இருந்தனவாம். கடந்த 1937இல் பல்லாயிரக்கணக்கான ஹெய்ட்டி இன மக்கள் அவனது உத்தரவின் பேரில் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயினும், ""ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்'' என்பது போல, சொல்லொணாத் துன்ப, துயரங்கள் பட்ட மக்களும் என்றோ ஒரு நாள் வெகுண்டெழுந்து இத்தகைய சர்வாதிகாரிகளைச் சங்காரஞ் செய்வது வரலாற்று உண்மையே.

சர்வதிகாரி இந்த வழியால் தான் காரில் பயணிக்கின்றான் என்ற தகவல் கிடைத்ததும் அந்தத் துப்பாக்கி நபர்கள் ஏழு பேரும் அவனை வழிமறித்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். ஆயுதம் தரித்திருந்த அவனது காரோட்டி மீது சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதில் அவன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டான். ஆயினும் காயப்பட்ட ருஜில்லோ அவர்கள் மீது எதிர்த் தாக்குதல் நடாத்தத் தொடங்கியதும், அறுபது துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அந்தக் காருக்கு வெளியே இழுத்தெடுக்கப்பட்ட அந்தச் சர்வதிகாரி வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

ஜோசப் ஸ்டாலின்
கடந்த 1953 மார்ச் 5 ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் நான்கு நாட்களாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த சர்வதிகாரி ஜோசப் ஸ்டாலின் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
ஆமாம்! ரஷ்யாவில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை பட்டினி, வாந்தி பேதி போன்றவற்றால் மரணிக்க வைத்த சர்வதிகாரி என மதிப்பிடப்படுகின்ற அதேவேளையில் வரலாற்றாசிரியர்கள் சிலரின் கூற்றுப்படி இவன் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் மரணத்திற்குக் காரண கர்த்தாவாக இருந்துள்ளான் எனவும் அறிய வருகின்றது.
அவர்களில் 14.5 மில்லியன் மக்கள் பட்டினிச் சாவையும் அவனது அரசியலை வெறுத்த 9.5 மல்லியன் மக்கள் தூக்குத் தண்டனையையும் எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஈவிரக்கமற்றவனாக விளங்கிய இந்தச் சர்வாதிகாரி தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்று குவிப்பதில் இன்பம் அனுபவித்தான். 1930 களில் மக்களின் எதிரிகள்'' என்று முத்திரை குத்தப்பட்டோர் ஆயிரக்கணக்கில் சிரச் சேதம் செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் வாந்தி பேதி நோயால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 1934 இல் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்ட அவனது அடக்கு முறைக்கு இறுதியாக இரையாகியவர் ஸ்டாலினின் பரம வைரியான சேர்ஜி கிரோவ் (Sergey Kirou) ஆவார். வயோதிபத்தின் பிடியில் சிக்கிய சர்வாதிகாரி ஸ்டாலின் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்ந்த நிலையில் நான்கு நாட்களாக தன்னால் புரியப்பட்ட மகா பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறுதியில் மௌனமாக மரணத்தைத் தழுவிக் கொண்டான்.
மெட்ரோநியூஸ் 04/11/11

Thursday, November 3, 2011

700 ஆவது கோடி குழந்தைபிலிப்பைன்ஸில் பிறந்தது

.
உலகின் மொத்த ஜனத் தொகை நேற்றுடன் எழுநூறு கோடியாகியது.நேற்று பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவமனையொன்றில் பிறந்த டானிகா மே காமாச்சோ எனும் பெயருடைய பெண் குழந்தை பிறந்ததன் மூலம் உலகின் ஜனத்தொகை 700 கோடியானது.
தனது தலையின் மூலம் வெப்பம் வெளியேறாவண்ணம் தொப்பியொன்றை அணிந்து காணப்படும் டானிக்காவை அவளது பெருமைக்குரிய பெற்றோர் பார்த்து ஆனந்தப்படுகையில் அவளோ தனது சின்னஞ்சிறு கைகளால் தாயõரின் உடலை அணைத்த படி படுக்கையில் கிடக்கின்றாள்.
தாயாரான காமலேக்கும் தந்தையாரான புளோரன்ரேக்கும் அவளது இந்தப் பிறப்பு முக்கியமானது மட்டுமின்றி உலகில் பிறந்துள்ள எழுநூறாவது கோடியை அடையாளப்படுத்தும் வகையில் பிறந்துள்ள குழந்தைகளில் டானிகாவும் ஒருவராகி உள்ளமை அவர்களைக் குதூகலிக்க வைத்துள்ளது.
இந்த உலகில் அதிகூடிய சனத்தொகை கொண்ட நாடுகளில் பன்னிரண்டாவது நாடாக விளங்கிவரும் பிலிப்பைன்ஸ் உலகின் ஏனைய நாடுகளுடன் இøணந்து கொண்டாடும் முகமாக குறித்த மருத்துவமனையில் எழுநூறாவது கோடியை அடையாளப்டுத்தும் வகையில் பிறந்துள்ள டானிகாவை வரவேற்றிட எளிய முறையில் வைபவமொன்றையே நடாத்தியுள்மை குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு தொடங்குவற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் இந்த உலகிற்கு எழுநூறாவது கோடியைக் குறிக்கும் அடையாளச் சின்னமாக புதிய வரவாக வந்துதித்த டானிக்காவுக்கு தலைநகர் மணிலாவில் உள்ள ஜோஸ் பெல்லா ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுஅவளின் பிரசவம் கூட வழமைக்கு மாறான விதத்தில் நிகழ்ந்திருப்பதும் சுவாரஸ்யம்தான். ஆமாம் பிரசவ அறைக்கும் வெகுஜன ஊடகங்களின் கமெராக்களின் ஒளி தெறிக்கும் மின் குமிழ்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும்போதே ஐந்து இறாத்தல் ஐந்து அவுன்ஸ் எடையுள்ளவளாக டானிக்கா பிறந்ததாள். இந்த வரலாற்றுப் பிரசவம் பற்றி அவளது தாயாரான காமிலோ தாலுரா கூறுகையில்,
""அவள் அழகாகக் காணப்படுகின்றாள். இந்த உலகின் எழுநூறாவது கோடி குழந்தையாக அவள் பிறந்துள்ளாள் என்பதனை என்னால் நம்ப முடியாதுள்ளது'' என்றார்.
டானிக்கா புளோறன்ரே காமிலே தம்பதியரின் இரண்டாவது குழந்தையாவார். தொலைக்காட்சி குழுவினர் மற்றும் படப்பிடிப்பிப்பாளர்கள் புடை சூழ அந்தப் பிரசவ அறையின் மூலை ஒன்றில் வெள்ளை நிற மருத்துவமனை ஊழியர்கள் அணியும்மேலங்கியுடன் புளோறன்ரே காணப்பட்டார்.
அத்துடன் பிலிப்பைன்ஸில் கடமையாற்றிவரும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் இந்த வரலாறு படைத்த அன்புப் பெற்றோருக்கும் குழந்தை டானிக்காவுக்கும்சிறிய கேக்(Cake) ஒன்றை அன்பளிப்புச் செய்தனர். இது மட்டுமா? பிலிப்பைன்ஸில் உள்ள நன்மை பயப்பவர்களால் டானிக்காவின் எதிர்காலக் கல்விக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் அவளது பெற்றோர் பொதுக் களஞ்சியசாலையொன்றை ஆரம்பிக்கவென வாழ்வாதாரப் பணப்பொதி ஒன்று உள்ளிட்ட பல அன்பளிப்புகளும் வழங்கப்பட்டுள்ளனவாம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் கடந்த 1999 இல் அறுநூறாவது கோடி குழந்தையாகப் பிறந்து தற்போது தனது 12 ஆவது வயதில் ஆறாம் தரக் கல்வி பயின்றுவரும் கொரிசே மீ கியவராவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இது குறித்து கியூவரா கருத்து வெளியிடுகையில்,""இந்த அழகு குட்டித் தேவதையைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவளும் என்னைப் போலவே வளர்ந்து இந்த உலகில் உள்ள அனைவராலும் அன்பு பாராட்டப்படுவாள் என நம்புகின்றேன்'' என்றார்.
இந்த உலகைச் சுற்றியுள்ள நாடுகளில் எழுநூறாவது கோடியை அடையாளப்படுத்தும் வகையில் பிறந்துள்ள குழந்தைகளில் டானிக்காவும் ஒருவராவார்.
அக்டோபர் 31 ஆகிய நேற்றுடன் உலக சனத்தொகை ஏழு பில்லியனை அடைந்துள்ளமையைக் குறிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 31 ஏழு பில்லியன் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்த்ககது.
பிலிப்பைன்ஸின் சுகாதாரச் செயலாளர் என்ரிகியூ ஓனா இது பற்றி தெரிவிக்கையில்,
டானிக்கா சரியாக நள்ளிரவில் தான் பிறப்பாரென நம்பப்படட போதிலும் அவள் நள்ளிரவுக்கு இரண்டு நிமிடங்கள் முந்தியேபிறந்துவிட்டார். குடிசனத் தொகை விவகாரங்களில் பிலிப்பைன்ஸை மற்றைய நாடுகள் மதிப்பிடும் வகையில் டானிக்கா அரிய சந்தர்ப்பமொன்றை எமக்கு வழங்கியுள்ளõரெனவும் கூறினார்.கடந்த நூற்றாண்டில் உலக சனத் தொகை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
மெட்ரோநியூஸ் 01 /11 /11

Sunday, October 30, 2011

கழுதையாக மாறிய விலை மாது.

கழுதையொன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றமொன்றில் நிறுத்தப்பட்ட ஒருவர், விபசாரியொருவரே இரவோடிரவாக கழுதையாக மாறியுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் சிம்பாம்வேயில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

மயோ (28 வயது) என்ற நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழுதையொன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை பார்த்த பொலிஸார் அவரை பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து தப்பிச் சென்ற மயோ மறுநாள் திங்கட்கிழமை ஸவிஷவேன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மயோ தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் தான் விலைமாது ஒருவருடனேயே பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அந்த விலைமாதே பொலிஸார் தன்னை கைது செய்யும் போது கழுதையாக மாறி விட்டதாகவும் மயோ கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நான் டவுண்ரவுண் இரவு விடுதியில் 20 அமெரிக்க டொலர் கட்டணத்தை செலுத்தி விலை மாது ஒருவரை ஏற்பாடு செய்தேன். அந்த விலை மாதுடனேயே பாலியல் உறவில் ஈடுபட்டேன். ஆனால் அவள் எவ்வாறு கழுதையாக மாறினாள் என்று எனக்குத் தெரியவில்லை என மயோ தெரிவித்தார்.

ஆனால் தான் இப்போது அந்தக் கழுதையை மிகவும் நேசிப்பதாக தெரிவித்த மயோ நானும் ஒரு கழுதை என்றே நான் நினைக்கின்றேன். நான் மதுபான விடுதியை விட்டுச் சென்ற போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் நான் அந்தக் கழுதையை தீவிரமாக காதலிக்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் மயோவை தடுப்புக் காவலில் வைக்க இரு அரசாங்க உளவியல் மருத்துவர்களால் பரிசோதனைக்குட்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tuesday, September 20, 2011

நிர்வாண அழகிகள்







வனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்பிடிப்பாளர் ஒருவர் உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளõர்.

லேனெட் நியூவெல்க் எனும் பெயருடைய இந்த பெண் படப்பிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள சாகசமான புகைப்படங்களில் நிர்வாணக் கோலத்தில் உடல்முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் இந்த மொடல் அழகிகள் வரிக் குதிரைகளாவும் யானைகளாகவும் வாலில்லாக் குரங்குகளாகவும் சிறுத்தைகளாகவும் காட்சியளிக்கின்றனர்.

சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த லென்னெட் கால்நடை வைத்தியராக இருந்து சிகிச்சையளித்த அந்த விலங்குகளில் ஒன்றாக தான் வரவேண்டுமென பிள்ளைப் பராயத்தில் அவாவுற்றிருந்தாராம். அன்ரி ஹியூமன் என அழைக்கப்படும் இப்புகைப்படத் தொகுப்பை அவர் லொஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநகரங்களில் எடுத்திருந்தாராம் வரிக்குதிரையொன்றுக்கு அடுத்தாற்போல் கறுப்பு வெள்ளை வர்ணங்களை தனது மேனியை மறைத்துக் கொண்டிருக்கும் மொடல் அழகி ஜஸ்மினாவின் புகைப்படம் காண்போரைக் கவரும் அவரது புகைப்படங்களில் ஒன்றாகக் காட்சியளிக்கிறது.

இன்னுமொரு படத்தில் மற்றொரு மொடல் அழகியான கேலா நரைவெள்ளை மற்றும் பழுப்பு நிற வர்ணத்தை தனது உடலின் மத்திய பாகத்தில் பூசியநிலையில் பென்னெட்டின் அருகில் சுசி எனப்படும் ஆபிரிக்க யானையின் நகல் வடிவத்தில் தோற்றமளிக்கின்றார். அழகி ஜஸ்மினா பன்னிரெண்டு அடி நீளமான டெய்சி என அழைக்கப்படும் மலைப்பாம்பு தன்னுடலைச்சுற்றிய நிலையில் பாம்புத்தோல் வர்ணத்தில் காணப்படும் படமே இத்தொகுப்பின் இறுதிப்படமாகும். அத்துடன் அவர் கறுப்பு புள்ளிகளுடனான பழுப்பு நிறவர்ணத்தில் தன்னுடலை மறைத்தவாறு ராங்கோ எனப்படும் அழகான சிறுத்தைக்குப் பின்னால் அமர்ந்திருப்பது போன்ற இன்னுமொரு படத்திலும் தோற்றமளிக்கின்றார்.

Sunday, September 18, 2011

டயானாவை மிஞ்சிய கதே

என்ன ஒரு வேறுபாட்டை தலைமுறை ஒன்று செய்து விடுகின்றது. ஆமாம்! கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சாதனை படைக்கத்தக்க வகையில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விஜயம் செய்திருந்த பெரும் எண்ணிக்கையானோரை கேம்பிரிட்ஜ் சீமாட்டியான கேட் மிடில்டனின் திருமண ஆடை கவர்ந்திழுத்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை கால முடிவின்÷ பாது சாரா பேர்ட்டன்/ அலெக்சாண்டர் மக்குயீனின் வடிவமைப்பில் உருவான சீமாட்டி கேட் மிடில்டனின் இந்தத் திருமண ஆடையானது எட்டு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் அரண்மனை புதுப்பித்தல் வேலைகளுக்கும் சீமாட்டி கேட்மிடில்டனின் ஆதரவற்றோருக்கான தரும ஸ்தாபன நிதியத்திற்கும் நிச்சயமாக வழங்கி அள்ளிக் கொடுத்து இருந்திருக்கும்.
இந்த வெற்றிகரமான கதையை காலஞ்சென்ற இளவரசி டயானாவின் திருமண ஆடையுடன் ஒப்பிடுதல் என்பது புரிந்து கொள்ளலாம். ஆமாம்! கடந்த 1981 ஜூலையில் சென். போல் தேவாலயத்தில் நடைபெற்றிருந்த இளவரசர் சாள்ஸ் இளரவசி டயானா திருமணத்தின் போது டேவிட் மற்றும் எலிஸபெத் இம்மானுவல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டிருந்த டயானாவின் மணப் பெண் ஆடையிலேயே அங்கு குழுமியிருந்த மில்லியன் கணக்கானோரின் கண்கள் மொய்த்திருந்தன. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவரின் திருமண ஆடைக்கு இப்போது நிகழ்ந்துள்ள கதி பற்றி என்னவென்று சொல்வது? முன்னொரு காலத்தில் பளிங்குச் சிலையென அனைவராலும் போற்றப்பட்ட இளவரசி டயானா இளவரசியான நிலையில் அணிந்திருந்த அந்த திருமண ஆடை தற்போது கண்ட கண்ட இடமெல்லாம் உலகம் முழுவதும் பணம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மலினப்படுத்தப்பட்டு மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றதாம். வரலாறு படைத்த டயானாவின் திருமண உடை மலிவான ஒரு பொருளாக கடந்த ஏழு வருடங்களாக உலக வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த வருடத்தில் மட்டும் கன்சாஸ் நகரின் புகையிரத நிலையத்திலும் மிக்சிக்கனின் கிராண்ட் ரபிட்ஸில் உள்ள அரும்பொருட் காட்சியகத்திலும் ஏற்கனவே அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இன்று தொடக்கம் அவரது திருமண ஆடை கெனக்ரிகட்டின் மாஷான்ரக்கெட்டில் உள்ள கசினோ கட்டிடத் தொகுதியில் அவரது வாழ்க்கையுடன் தொடர்புபட்ட 150 அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்படவுள்ளதாம். இருபத்தைந்து அடி நீளமான செரினி பட்டாலான அந்த மணப் பெண் ஆடை இங்கிலாந்தின் மரியாதைக்குரிய ஒன்றாக ஒரு காலத்தில் மதிக்கப்பட்டிருந்தது. இதனை தற்போது வைத்திருக்கும் டயானாவின் சகோதரர் சாகில்ஸ் ஸ்பென்சர் இதனைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் போல காணப்படுகிறார்.
மெட்ரோநியூஸ்

கல்லூரிகளில் செக்ஸ், காதல் கட்டாயபாடம்


சீனாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இந்த மாதம் முதல்செக்ஸ் மற்றும் காதல் பாடங்களை உள்ளடக்கிய உளவியல் படிப்பு கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.
சீனாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இந்த மாதம் முதல் செக்ஸ் மற்றும் காதல் பாடங்களைக் கொண்ட உளவியல் படிப்பு கட்டாயப் பாடமாகிறது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் மனநலம் குறித்த பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே உளவியல் ரீதியான அறிவுரைகளைப் பெறும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் தான் உளவியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்தில் 7 பிரிவுகள் உள்ளன. மன அழுத்தம், வாழ்கையில் ஏற்படும் விரக்தியை எவ்வாறு எதிர்கொண்டு மீள்வது என்பது பற்றியும், செக்ஸ், காதல் பற்றியும் இந்த பாடத்தில் உள்ளது என்றார்.
இந்த பாடத்தை கட்டாயமாக்கியதற்கு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உளவியல் பாடம் சுத்த போர் என்று பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் வாங் கேபெய் தெரிவித்துள்ளார். ஹீ பாங் என்ற மாணவரும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் அறிவாற்றல் கல்லூரியின் துணை டீன் சாங் பியாஓ கூறுகையில், இந்த உளவியல் பாடம் நடுநிலை மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். நடுநிலைப் பள்ளியில் இருந்து செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். அது தான் செக்ஸ் கல்வி படிக்க உகந்த பருவம் என்றார்.

Wednesday, September 14, 2011

9/11 தாக்குதலின்போதுமக்களைக் காப்பாற்றிய நாய்கள்




2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தகமையம் மற்றும் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மீதான விமானத் தாக்குதலின் போது, சுமார் 3000 பேர் கொல்லப்பட்டிருந்த அ@த வேளையில், அந்த இடிபாடுகளுக்குள் அகப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தோரை மூலை மூடுக்கெல்லாம் தேடிக் கண்டு பிடிப்பதில் சுமார் 100 உயிர் காக்கும் மோப்ப நாய்களும், அவற்றின் உரிமையாளர்களும் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
பத்து வருடங்கள் கழிந்த நிலையில், அவற்றில் பன்னிரண்டு நாய்கள் உயிர்பிழைத்திருப்பதாக அறியப்படுகின்றது. அவற்றின் புகழ்பாடும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பிலான நூலொன்றில் அவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர். அந்தக் கொடூர நிகழ்வு வேளையில் அவசர கால சேவையில் ஈடுபட்ட பணியாளர்களுடனும், பொது மக்களுடனும் இணைந்து இந்த மோப்ப நாய்களும் இடிபாடுகளுக்கும் சிக்கித் தவித்தோரை மீட்பதில் அரும்பாடுபட்டனவாம்.
டெக்ஸாஸ் தொடக்கம் @மரிலாந்து வரையிலான ஒன்பது மாநிலங்களில் பிரயாணம் செய்து முப்பத்தி நான்கு வயதான சார்லொட் டுமாஸ் எனும் பெண்மணி எஞ்சியுள்ள இந்த மோப்ப நாய்களைக் கடந்த பத்து வருடங்களாக அவை வசித்து வரும் வீடுகளில் வைத்து கைப்பற்றினாராம்.
விலங்கினங்களை, குறிப்பாக நாய்களை ஓவியங்களாக தீட்டும் வலல்லமை பெற்றுவரென அனைவராலும் அறியப்படும் சார்லெட், செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு மட்டுமின்றி, அனர்த்தத்தின் போது அகப்பட்டோரைக் காப்பாற்றவென அவசர உதவிபுரிந்த அந்த மனிதர்களையும், அவர்களின் நாய்களையும் கௌரவிப்பதற்குமாகவே இந்த நூலை வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது. பிறர் நிலைக்குள்ளாகும் உணர்வை இந்த நாய்கள் எமக்குள் ஏற்படுத்துவதால் அவை வித்தியாசமான பிராணிகளாக எம்முடன் பேசுவதுடன், முக்கிய நண்பர்களாகவும் விளங்குகின்றன என்று சார்லெட் கூறுகின்றார். அமெரிக்கா மீதான இந்தாக்குதலில் பத்தாவது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், நாளை நியூயோர்க் நகரில் ஜூலி சோல் கலரி ஓவியக் கண்காட்சியில் சார்லெட்டின் கைவண்ணங்களும் அலங்கரிக்கவுள்ளன வாம் இந்த ஓவியங்கள் காலம் எப்படி நகர்கின்றது. அனர்த்த வேளைகளில் நாய்கள் எவ்வாறு எமக்கு உதவுகின்றன என்பதைச் சித்தரிப்பதாகக் கூறிய சார்லெட் உயிர் பிழைத்த இறுதி 15 நாய்களில் மூன்று இறந்து விட்டதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
மெட்ரோநியூஸ்

Tuesday, September 13, 2011

மூன்று அழகிகள் வெளி@யற்றம்


காண்போரைக் கவர்ந்திழுக்கத் தூண்டும் வகையில் புகைப்படங்களுக்குப் "போஸ்" கொடுத்திருந்த மூன்று இத்தாலிய மொடல் அழகிகள், இந்த வருடத்திற்கான இத்தாலிய அழகுராணிப் போட்டியிலிருநது நீக்கப்பட்டுள்ளனர்.

இளஞ்சிவப்பு நிறத்திலான இரவில் அணியும் ஆடையொன்றுடன் கவர்ந்திழுக்கத் தூண்டும் வகையில் புகைப்படங்களில் தோன்றிய அலிஸ் பெலோட்டோ எனும் 22 வயதான மொடல் அழகியே நடுவர்களால் முதன்முதலில் வெளியேற்றப்பட்டவராவார். இவர் இத்தாலியில் உள்ள வெனெட்டோ பிரதேசப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அடுத்து தலைநகர் ரோமிலிருந்து கலந்துகொள்ள வந்திருந்த 23 வயதான கேவி இத்தாலி அழகுராணியான ரயேல்லா மொடுங்கோ, தோலிலான மெத்தை ஒன்றில் சாய்ந்தபடி குறிப்பை உணர்த்தும் வகையில் பட்டாலான உள்ளாடையுடன் தோன்றும் புகைப்படத்தைச் சல்லடைபோட்டு ஆராய்ந்து நடுவர்களின் கண்களில் பட்டதனால், அவரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.
சிவப்பு அட்டை காட்டப்பட்ட மூன்றாவது மொடல் அழகியாக, ஜெ@னாவைச் ‹ழவுள்ள லிகுரியா அழகுராணியான 26 வயதான ரியானா பியேர்ஜியானியானார். அவர் தனது திறந்த மார்பகங்களுடன் புகைப்படங்களிலும் காணொளிகளிலும் தோன்றியிருந்ததைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் இணையத்தில் கண்டுபிடித்தமையால் அடுத்தவாரம் ரஸ்கனியில் உள்ள மொன்டிகடினி ரேமில் நடைபெறவுள்ள இத்தாலியஅழகுராணிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியின் பேச்சாளரொருவர் இது பற்றி கூறுகையில்,
போட்டியாளரும் ஆபாசமான முறையில் முன்னர் "போஸ்" கொடுத்திருந்தார், அவர் போட்டியிலிருந்து நீக்கப்படவேண்டுமென எட்டாம் இலக்க போட்டி விதி கூறுவதாகத் தெரிவித்தார். இதற்கு முன்னரும் இத்தகையோர் நீக்கப்பட்டிருந்தனர், ஒரே போட்டியில் மூவர் நீக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை என பின் அரங்கு வட்டாரமொன்று கூறியுள்ளது.
நீண்டகாலமாக நடைபெற்றுவரும் போட்டிகளில் ஒன்றெனக் கூறப்படும் இந்த இத்தாலிய அழகுராணிப் போட்டியில் பிரபல இத்தாலிய திரைப்பட நடிகைகளான சோபியா லோறன் மற்றும் கினா லொல்லோபிறிகிடா உள்ளிட்ட பல அழகிகள் கலந்து கொண்டதுடன், இப்போட்டி 1939இல் ஆரம்பமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


மெட்ரோநியூஸ்

MISS UNIVERSE போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற இலங்கை அழகுராணி





வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வரும் அழகு ராணிப் போட்டியில் அந்தந்த நாட்டு அழகுராணிகள் தங்கள் நாடுகளின் நல்லெண்ண தூதுவர்களாக செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வரிசையில் எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி பிரேசிலில் நடைபெறவுள்ள உலக அழகுராணிப் போட்டியில் பங்கேற்பதற்கென அழகிகள் படையொன்று பிரேசில் போய்ச் சேர்ந்துள்ளது. எமது நாட்டைப் பிரதிநிதித்துப்படுத்தும் அழகுராணி கடந்த ஜூலை 11ஆம் திகதி தெரிவாகியிருந்தமை தெரிந்ததேஉலக அழகுராணி என்ற கிரீடத்தை அணிந்திட இதுவரை இலங்கை அழகுராணிகள் எவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆயினும் இலங்கையின் முன்னாள் அழகுராணி ஒருவர் உலக அழகுராணிப் போட்டியொன்றில்
மூன்றாமிடத்தைப் பெற்றார்
ஆமாம் அந்த அழகு தேவதை வேறு யாருமல்ல. 1955ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையின் முன்னாள் அழகுராணியான மொரின் நெலியா ஹிங்கேட் தான். 1937 ஜனவரி 9ஆம் திகதி டச்”க்கார தந்தையான லயனல் ஹிங்கேட்டுக்கும் சேனநாயக மாபெல் டீ
ரன்ணுக்கும் மகளாகப் பிறந்த மொரீன் நெலீயா மொடல் அழகியாகவும் நடன மங்கையாகவும் நடிகையாகவும் விளங்கியதுடன் 1954 இல் இலங்கையின்
அழகு ராணியாக முடி சூடப்பட்டு 1955இல்உலக அழகுராணிப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அந்தப் பரபரப்பான போட்டியில் மொரீன் நெலியா ஹிங்கேட் மூன்றாம் இடத்தைப் பெற்றார் அதே வேளை ஹொன்டுராஸ் அழகுராணியான பஸ்டோரா பாகன் வாலன்சுயெலா இரண்டாம் இடத்தைப்
பிடித்தார்.உலக அழகுராணிப் போட்டியில் மொரீன் நெலீயா கலந்து கொண்டு மூன்றாமிடத்தை தனதாக்கிக்கொண்டதை அடுத்து யூனிவேர்ஸில் இன்டர் நாஷனல் ஸ்ரூடியோவில் 20 சென்சூரி பொக்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் அவருடன் நடிப்பு ஒப்பந்தங்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்

Monday, September 12, 2011

தற்கொலை விமானத்தைத்தேடிய விமானி


உலக வர்த்தக மையம் ஒரு விமானத்தால் தாக்கப்பட்டதாக ஒரு விமான மோட்டிகள் வாசிங்டனில் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டபோது ஒரு பயிற்சியில்லாத விமான மோட்டியில் செயல் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் 9/11 தாக்குதலின் உண்மை நிலை தெரியவந்தபோது இனி தாங்கள்தான் நடவடிக்கையில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என உணர்ந்து கொண்டார்கள்.
அதில் ஒருவர் 20 வயது மதிக்கத்தக்க அழகிய தலைமயிரையுடைய பெண். அவரின் தகப்பனாரும் வியற்ணாம் யுத்தத்தில் பெருமை பெற்ற ஒரு விமானமோட்டி.
உலகின் பிரபல்யம் பெற்ற ஒரு விமான நிறுவனம்தான்'' "LOCKHEEDMARTIV" F35 ரக விமான திட்டத்தில் இந் நிறுவனத்தின் பணிப்பாளராக தற்போது தொழில்புரியும் இவர் பககு நேர விமானமோட்டியாகவும் வேலை செய்வதால் தனது விமான மோட்டும் தொழிலை மறக்கவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு விமானத் தாக்குதல் துறையில் பெண்களும் பங்குபற்றலாமென அறிவிக்கப்பட்ட போது யுத்த விமானியாகமுதலாவதாக பதவி செய்யப்பட்டவர் இவர்தான். செப்டம்பர் 11 ஆம்திகதியும் இவரே ஒரு வாசிங்கடனை நோக்கி கடத்தப்பட்ட விமானம் சம்பந்தமாக முதலாவதாக சம்பந்தப்பட்டிருந்தார்.
இவருக்கு வழங்கப்பட்ட கட்டளை: FILIFHT 93 கண்டு பிடித்து எப்படியாவது அவ்விமானத்தை அழிக்கவேண்டுமென்பது தான். அதனால் விமானத்திலோ ஏவுகøணகளில்லை. பயிற்சி பணிகளில் ஈடுபட்ட இவ் விமானத்தில் பயிற்சிக்காக பாவிக்கப்படும் போதியான ஆயுதங்களே காணப்பட்டன. தனது கட்டளையை நிறைவேற்றுவதற்கு ஒரே வழிதான் தென்பட்டது.
அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ""விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு வழியில்லை. தான் வெடிபொருள் அணிந்த விமான மோட்டியாக மாறி அவ்விமானத்துடன் மோதுவதே ஒரே வழி என்று தெரிவித்திருந்தாராம். இந்த நிலையில் அன்×ஸ் விமான படைத் தளத்தில் குண்டுகளுடனோ ஏவுகணைகளுடனோ F16 விமானமொன்றும் இருக்கவில்லை. ஆயுதமேந்திய விமானத்தை பெறுவதற்கு குறைந்தது 1 மணி நேரமாவது செல்லும். நேரமோ கானாது.

குண்டு வீச்சு விமானங்கள் வாசிங்டனை பாதுகாப்பதற்கு தேவை. உடனடியாக அவை புறப்பட வேண்டும். நீர் என்னுடன் வருகிறீர்கள் என கேர்ணல் மார்ச் சசீவில்லி சத்தமிட்டார்.
அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகனில் தற்போது சசீவில்லி தொழிற்புரிகிறார். அவர் சொல்கிறார். ""பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நாங்கள் பயிற்சியளிப்பதில்லை. இயந்திரத்தை சிறிது தள்ளிவிட்டால் பின்பு நாங்களாகவே இலக்கை நோக்கி செல்லலாம்.
விமானமோட்டியின் ஆசனம் [COCKPIT) அல்லது விமானத்தின் இறக்கையை நான் எண்ணினேன். பயணிகள் விமானத்தை தகர்ப்பதற்கு முன்னால் நான் குதித்து தப்பலாமென நினைத்து முடிவெடுத்தேன்.
ஆனால் செல்வி மெனி விமானியின் ஆசனத்திலிருந்து தப்பி குதிப்பதன் மூலம் இலக்கை தவற விட நேரிடும் எமது குறிக்கோளும் தோல்வியில் முடியும். தான் உயிர் தப்பினாலும் என்ன பயன் என நினைத்தாராம்.
செல்வி பென தன்னை சாஸ் என கூறிக் கொள்பவராம். தான் விமானிகளின் ஆசனப் பகுதியை எடுப்பதாகவும் பெனி விமானத்தின் வால் பகுதியை எடுக்கவும் யோசித்தனர்.
இருவரும் 400 மைல் வேகத்தில் விமானங்களில் புறப்பட்டு சேதமடைந்த பென்டகனை மேல் தாழ்வாக பறந்து வானத்தை தேடிப் பார்த்தனர். பல மணி நேரத்தின் பின் தான் "UNITED 93" விமானம் பென்சில் வேனியா நகருக்கு வெளியே வீழ்ந்ததாக கேள்விப்பட்டனர். அத்துடன் அவர்களின் பணி முடிந்துவிடவில்லை. அன்று முழுவதும் ஆபத்தில் தனது பொழுதை கழித்த பெனி ஜனாதிபதி தனது விமானமான "AIR FOCEONE" பயணம் செய்தபோது வானத்தை பாதுகாத்து அவனுக்கு பாதுகாப்ப வழங்கினார்.
இந்த நடவடிக்கையின் பின் செல்வி பெனி "MAJOR" தரத்துக்கு பதவி உயர்வு பெற்று இருமுறை ஈராக்கிலும் சேவை புரிந்துள்ளார். 2 பிள்ளைகளின் தாயான இவர் 9/11 தக்குதலுக்கு இறுதியான தியாகத்தை செய்திருக்கவில்லை. துணிச்சல் மிக்க பயணிகளும் குழுவே செயலில் ஈடுபட்டது.
FLIGHT 93 ல் பயணித்த பயணிகளே உண்மையாக தியாகம் செய்வதற்கு தீர்மானித்தவர்களாவர்.சரித்திரத்தை எழுதுவதற்கு தற்செயலாக அகப்பட்ட ஒரு சாட்சிதான் நான் என்ற சொல்கிறார் பெனி.
மெட்ரோநியூஸ்

Wednesday, September 7, 2011

மார்லினாகவிரும்பும் நடிகை



சூசான் பேர்னுடிசின் புதிய புத்தகமான மார்லின்Intimate Exposures எழுதிய முன்னுரையில் 25 வயதுடைய இவர் கவர்ச்சியானவரின் அதிர்ச்சிகளை பற்றி விவாதித்து தான் புகழ் பெற்றவராக வர விருப்ப வில்லையென தெரிவித்தார். அந்த இறுக்கமான றோஸ் நிற சட்டை அணிந்ததின் மூலம் அவர் அழகானவராக காணப்பட்டார் அவரின் கதாபாத்திரம் மிகவும் திறமையாகவும் கட்டுக்கடங்கியதாகவும் காணப்பட்டது. ஒரு பெண்ணுக்குரிய குணதிசயமாகவே அப்போது 12 வயதாக இருந்த எனக்கு விளங்கியது . மார்லின் ஆக வருவதற்கு எடுக்கப்பட்ட பிரமாதாமான மனித முயற்சி இது என ஹொலிவூட் படப்பிடிப்பாளர் பேர்னாட் அறிக்கை விட்டிருந்தõர்.

ஆனால் லோகன் தன்னை மன்றோருவரோடு ஒப்பிட்டு அத்துடன் நிறுத்தவில்லை. பெண்கள் மத்தியில் மத்திம தரத்தை கொண்டுள்ள .இவர் என்னை யார் என்பது பற்றி மக்கள் தமது மனங்களின் தீர்மானித்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

நானும் மாரிலின் மன்றோவும் ஒரு புகழ் பெற்றவர்களாக வர விரும்பவில்லை. ஒருவரின் மனதில் நெடுங் காலமாக நிலைத்து இருக்க வேண்டுமென்பதற்காகவே சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட திரைப்படங்கள் இப்போ இல்லை. மன்றோ அப்படி மற்றவர்களில் ஞாபகத்தில் இருக்க விரும்பினாலும் , நான் அப்படி இருக்க விரும்பவில்லை என லோகன் மேலும் கூறுகிறார்.
எனது திறமைக்காக மற்றவர் தன்னை ஞாபகத்தில் வைத்திருப்தையே நான் விரும்புகிறேன்.எனது சர்ச்சைக்குரிய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ஞாபகத்தை அல்ல என்றும் லின்ட்டுசே லோகன் மேலும் கூறுகிறார்.
தான் ஆரம்ப அறிவை கொண்டிறுக்கவில்லையென மார்லின் கூறினார். ஆனால் தான் அதை நோக்கி செல்வதாக அவர் கூறினார். நானும் அதையே செய்ய விரும்புகிறேன். நான் ஒரு சிறந்த நடிகை எனக்கு என்னிடத்தில் நம்பிக்கையுண்டு .மன்றோவின் நெடுங்காலமாகவே லின்டசே போற்றி வந்துள்ளார். அத்துடன் 2008 ல் மன்றோவின் Âß The Last Sitting திரைப்படம் நியூயார்க் சஞ்சிகையில் சித்தரிக்கப்பட்டது.

போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதின் காரணமாக மன்றோ1962 ம் இறந்து கிடக்க காணப்பட்டார்.
மெட்ரோநியூஸ்

Tuesday, September 6, 2011

புதியகணவருடன் கிம் கப்தாஷியன்


காதல் உணர்வில் கட்டுப்பட்ட நிலையில் அரியதொரு இராபோசன விருந்தின் பின்னர் இருபத்தாறு வயதுடைய தனது புதிய கணவருடன் பிரபல பாடகியான கிம் கர்தாஷியின் உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார்.

கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிடோவில் கடந்த சனியன்று முப்பது வயதான பாடகி கிம் இருபத்தாறு வயதான முன்னாள் நியூ ஜேர்சி கூடைப்பந்தாட்ட வீரரான கிறிஸ் ஹம்பிறீ திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்ற பின்னர் தங்கள் தேனிலவை இயற்கை அழகை அள்ளிக் கொட்டும் இத்தாலியில் கழித்தனர்.

அப்போது தனது அன்புக் கணவர் மீது கிடந்தவாறு முத்தமழை பொழிந்திருந்த காட்சிகள் கமராவுக்குள் பதிவாகியிருந்தன. அதன் பின்னர் அமால்பி கோஸ்டில் அமைந்துள்ள அந்த ஆடம்பர சுற்றுலா விடுதியில் தங்களை மறந்த நிலையில் தனிமையில் பொழுது போக்கினராம். அங்கிருந்து அமெரிக்கா திரும்பிய இந்த புதுமணத் தம்பதியினர் நியூயோர்க்கில் நடைபெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டனர். கடந்த ஞாயிறன்று லொஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற எம்.ரிவி வீடியோ இசை விருது வழங்கல் நிகழ்வில் விருந்தொன்றையும் பாடகி கிம் பெற்றுக்கொண்டார்.

எதிர்வரும் அக்டோபரில் E நெட்வேர்க் விசேட தொலைக்காட்சியில் ஒளிபரப்பவென அவர்களின் திருமணக் காட்சிகள் கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்டோபர் கெஸ்டஸ் (October Guests) எனும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை லின்ட்சே லோஹான் முன்னாள் குணீடிஞிஞு எடிணூடூண் நடிகை மெல் பி லொவட்டோ மற்றும் கீNஆ பாடகி சியாரா ஆகியோரின் விருப்பங்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. இத்திருமணக்காட்சியை பார்த்து ரசித்த விருந்தினர்களில் ஒருவர் அது பற்றி தெரிவிக்கையில் இதனைப் பார்த்த அனைவரும் தங்களை மெய் மறந்து ரசித்ததாகவும் இத்திருமணக் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கலை நிகழ்ச்சி போன்று இருந்ததாக குறிப்பிட்டார்
மெட்ரோநியூஸ்

Thursday, August 25, 2011

அரை நிர்வாண ஆர்ப்பாட்டப் பேரணி


பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகளை வழங்கக்கோரி மத அனுசரணையமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலிபோர்னியாவின் வெனிஸ் கடற்கரையில் அரை நிர்வாண ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர்.

ஏராளமான ஆண்கள் அடங்கலாக நூற்றுக்கணக்கான பெண்கள் கலிபோர்னியாவில் வெனிஸ் கடற்கரையில் திறந்த ""மார்ப்புத் தினமே போய்விடு'', ""Go Topless Days'' எனும் தொனிப் பொருளில் அமைந்த நான்காவது வருடாந்த நிகழ்வில் கலந்து கொள்ளவென திடீரென கூடினர். இன்றும் அனுசரிக்கப்படும் பெண்கள் சமத்துவ தினத்தையொட்டி இந்நிகழ்வு அமெரிக்க நகரங்கள் பலவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அடுத்த வார இறுதியில் கனடாவில் இரண்டு நகரங்களில் நடாத்தப்படவுள்ளதாம். இதில் கலந்து கொண்ட பெண்களில் சிலர் மேலாடைகளின்றி கலந்து கொண்டனர். ஆண்கள் அனைவரும் நீச்சல் உடைகளுடன் மார்புக் கச்சைகளையும் அணிந்து பகிரங்கமான முறையில் திறந்த மார்புகளுடன் திரிய தங்களை அனுமதிக்கும் இந்த கபட நாடகத்திற்கு தமது எதிர்ப்பை காண்பித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முலைக் காம்புகள் இருக்கையில் ஏன் பெண்கள் மட்டும் தங்கள் முலைக்காம்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்? அனைவருக்கும் திறந்த மார்புகளுடன் செல்லும் சம உரிமை வேண்டும். இன்றேல் எவருக்கம் அந்த உரிமை வழங்கக்கூடாது என்ற சுலோகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஏனையோர் விநோத உடைகளை அணிந்திருந்தனர்.

இந்த மத அனுசரணை அமைப்பு மனித இனப் பிரச்சினைகளுக்கு விஞ்ஞானமே மூலக்காரணமென கூறியுள்ளது. அதன் குறிக்கோளின் பிரகாரம் திருமணம் தேவையற்றதொன்றெனவும் அதன் உறுப்பினர்கள்
தங்கள் மேனி அழகை கொண்டாட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான லாரா ரேஸ்ட் ஜாக் கடந்த ஞாயிறன்று நடந்த பேரணியில் கலந்து கொண்டதுடன் அரசியலமைப்பில் பெண்கள் சொல்லளவில் ஆண்களுக்கு சமமானவர்களே எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அனைத்து விடயங்களிலும் பெண்களுக்கு சமவுரிமை வழங்காத அரசியலமைப்பால் என்ன நன்மை என கேள்வி எழுப்பினர்.

இது ஒரு அடிப்படை குடியியல் உரிமை. கறுப்பினத்தவரும் வெள்ளையரும் தண்ணீர் ஊற்றை எவ்வாறு சமமாக உபயோகிக்கிறார்களோ அதைப் போன்றதே ஆண் பெண் சமவுரிமையும் என விபரித்தார்.
மெட்ரோநியூஸ்26/08/11

Wednesday, May 4, 2011

ஷேன் வோனை முத்தமிட்ட காதலி

சில மாதங்களுக்கு முன்னர் அவர்களிருவரும் காதலர்களாக பகிரங்கமாக உலா வந்ததிலிருந்து பிரித்தானிய பிரபல நடிகை தனது கிரிக்கெட் காதலனைப் பார்க்கவென இரண்டாவது தடவையாகவும் இந்தியா வந்துள்ளார்.
ஆயினும் கரங்களைக் கோர்த்தப்படி அன்பை வெளிப்படுத்துவதற்கு அப்பால் இருவருக்குமிடையே உண்மையான அன்பு இன்றுவரை மலர்ந்து வருகின்றது.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை ஷேன் வோன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணி தோற்கடித்த பின்னர் இந்த ஜோடிகள் ஒருவருக்கொருவர் முத்தப் பரிமாற்றம் செய்வதை கமராக்கள் பதிவு செய்தனவாம். ஆமாம்! ராஜஸ்தான் ரோயல்ஸின் அபார வெற்றியின் பின்னர் விளையாட்டரங்கில் நடிகை எலிஸபெத் நேரில் சென்று ஷேன் வோனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து முத்தப் பரிமாற்றம் செய்தபோது ஷேன் வோனின் மகளான புரூக் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆமாம்! ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் ஷேன் வோனின் மகள் புரூக் ஆகியோர் முன்னிலையில் தாங்கள் இருவரும் உதடுகளில் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என எவ்வித சலனமும் அடையாமல் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் சந்தோஷம் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
ஜெய்ப்பூரில் நடந்த அந்த அற்புதமான போட்டியைக் கண்டு ரசிக்கவென 45 வயதான எலிஸபெத், 41 வயதான தனது காதலன் ஷேன் வோனின் விளையாட்டை ரசிக்கவென இங்கிலாந்திலிருந்து இரண்டாவது தடவையாகவும் இந்தியா வந்திருந்தார். ஆயினும் தான் முதன் முதலாக வந்திருந்தபோது தனது அணி தோல்வியை தழுவியபோது தான் மிக்க துக்கமடைந்திருந்ததாக டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் எலிஸபெத் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் போட்டி முடிவுற்றதும் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்தோடினார்.
வெள்ளை ஜீன்ஸும் நீல நிறத்திலான ராஜஸ்தான் ரோயல் அணியின் டீஷேர்ட்டும் அணிந்திருந்தார்.
அவர் இதற்கு முன்னரும் ஏற்கனவே நடைபெற்றிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியின்போதும் இதே கோலத்தில் காட்சியளித்தமை தெரிந்ததே.
இந்தத் தடவையும் தனது மகன் டேமியனுடன் இந்தியாவுக்கு வருகை தந்த எலிஸபெத் ஈஸ்டர் பெருநாளையும் இந்தியாவிலேயே கொண்டாட வேண்டியதாயிற்றாம்.
ஷேன் வோனுடனான தொடர்பை அடுத்து எலிஸபெத் கிரிக்கெட் ரசிகையாக மாறிவிட்டாராம்.
அவுஸ்திரேலியர்கள் என்றால் தனக்கு ரொம்பப் பிடிக்குமெனக் கூறும் பிரித்தானிய நடிகை எலிஸபெத் ஷேன் வோனை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?
மெட்ரோநியூஸ்

Monday, April 25, 2011

வில்லியம் கதே திருமணக் கேக்தயாரிக்க இரண்டு மாதங்கள்



எவருமே சாப்பிட முடியாத அந்தக் கேக்கைத் தயாரிப்பதற்கு இரண்டு மாதங்கள் எடுத்ததாம். அப்படியானால், அந்தக் கேக் எதற்காக? என்று நீங்கள் கேட்கிறீர்களா?
ஆமாம்! இங்கிலாந்தின் மகாராணியின் பேரனும், இளவரசருமான வில்லியம் கதேமில்டனின் திருமணம் எதிர்வரும் 29 ஆம் திகதி கோலாகலமாக வெஸ்ட்மினிஸ்டர் அபே யில் நடைபெறுகிறதல் லவா! அதற்காகத் தான் இந்த கேக் தயாரிப்பாம்.
இந்த அதிசயக் கேக்கை தயாரித்து முடித்துள்ள அரச குடும்பத்து விசிறியான ஷெய்லா கார்ட்டர் நாளாந்தம் மூன்று மணி நேரம் செலவிட்டு, இதனை இரண்டு மாதங்களில் ஒருவாறு தயாரித்து முடித்துள்ளார். இதில் 100, 000 தையல் வேலைப்பாடுகள் பொறிக்கப்பட் டுள்ளடன், கையால் தைக்கப்பட்டுள்ள சுமார் 300 பூ வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளைப் பட்டு வடிவிலமைந்த சர்க்கரைப் பூசல்களும் (ஐசிங்) காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.
மூன்று அடுக்குகள் கொண்ட அந்த அற்புதமான கேக்கின் உச்சிப்பகுதியில் புதுமணத் தம்பதிகளான இளவரசர் வில்லியம் கதே மிடில்டனின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரையும் ஈர்க்க வல்லதாக உள்ளதாம்.
ஓய்வு பெற்றுள்ள பழம் மற்றும் காய்கறி வகைகள் விற்பவரான திருமதி கார்ட்டர் நாளொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் வரை பொறுமை காத்து இந்தப் போலியான இனிப்புப் பண்டத்தைத் தயாரித்து முடித்துள்ளாராம்.
ஹான்ட்ஸில் சவுத்தம்டனைச் சேர்ந்த 74 வயதான அவர் இந்த அதிசயக் கேக் தயாரிப்பு பற்றி கூறுகையில், 400 மணித்தியாலங்கள் எடுத்த இந்த வேலைப்பாடு உண்மையில் அன்பின் மகத்துவம் பற்றியதாக அமைந்துள்ளதுடன் இதனைச் செய்து முடிக்க தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், இப்படியே வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் செய்து வந்ததால், சமைத்த உணவெதனையும் தன்னால் சாப்பிட முடியவில்லையென தனது கணவர் புலம்பிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நான் இங்கிலாந்தின் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவதால் குறிப்பாக டயானா உயிரோடு இருந்த கால கட்டத்தில் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதாகவும், வில்லியமும், கதே மிடில்டன் தம்பதியரும் இனிதே தங்கள் இல்லற வாழ்வில் ஈடுபடுபவரென தாம் நம்புவதாகவும் கூறினார்.
எனது பேத்தி விளையாடுவதற்கென நான் இதற்கு முன்னமும் ஏராளமான இத்தகைய கேக்குகளை செய்துள்ளேன் என்றவர், என்றோ ஒருநாள் திருமணக் கேக் ஒன்றைத் தயாரிக்கும் சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் காத்திருந்தாகவும் ஷெய்லா கூறினார்.
நான் இந்தக் கேக்கைத் தயாரிக்கும் போது, அதன் உச்சிப் பகுதியில் எவருடைய உருவத்தை அமைப்பதென்பதை நினைத்திருக்கவேயில்லை. வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் நிறைவேறியபோது தான் அவர்களின் திருமண கேக்கைத் தயாரிக்கும் துணிவு தனக்குப் பிறந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி, தான் தனது ஏழு பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதற்கென அவர்களின் பிறந்த தினங்களில் அவ்வப்போது இத்தகைய அபூர்வமான கேக்குகளைத் தயாரித்து வழங்கியிருந்ததாகவும் திருமதி கார்ட்டர் கூறினார்.



மெட்ரோநியூஸ்22/04/11

Sunday, April 24, 2011

அழகிய டயானாவைபின்னுக்குத் தள்ளும் கதே


எதிர்வரும் 29ஆம் திகதி இளவரசர் வில்லியமை திருமணம் செய்யும் கதே
மிடில்டன்,
மூன்றாவது அழகிய இளவரசி என்ற சிறப்பு பெறுவார் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பியூட்டிபுல் பீபிள்.கொம் என்னும் இணையத்தளம் 1 இலட்சத்து 27 ஆயிரம் பேரிடம் அழகான ராஜபரம்பரையினர் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. இதில் கதேக்கு ஆதரவாக 84 சதவீதத்தினரும், டயானாவுக்கு ஆதரவாக 82 சதவீதத்தினரும் வாக்களித்தனர்.
இந்த அழகிய கணக்கெடுப்பில் மொனாகோ இளவரசியும், ஒஸ்கார் விருது பெற்ற நடிகையுமான கிரேஸ் கெல்லி 91 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். 90 சதவீத வாக்குகளுடன் ஜோர்டான் ராணி ராணியா இரண்டாவது இடத்திலும், கதே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று ராஜ குடும்பத்து ஆண்களில் அழகானவர்கள் பற்றி எடுத்த கணக்கெடுப்பில் இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம்
4, 5 ஆகிய இடங்களைப் பிடித்தனர்.
அவர்களின் தந்தை இளவரசர் சார்லஸ் 10ஆவது இடத்தில் உள்ளார்.
கதே மற்றும்
வில்லியம் திருமணம் வரும் 29ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடக்கிறது. இவர்கள் திருமணத்தைப் பற்றித் தான் உலகமே பேசிக் கொண்டிருக்கிறது.

மெட்ரோநியூஸ்

கதே பிடிக்கும் கமிலா பிடிக்காது



விரைவில் இளவரசியாகவிருக்கும் கதே பிடிக்கும், ஆனால் இளவரசர் சார்ள்ஸின் இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது என்று இங்கிலாந்து மக்கள் தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
விரைவில் இளவரசர் வில்லிம்யஸை மணக்கவிருக்கும் கதே, மறைந்த இளவரசி டயானாவைப் போலவே இங்கிலாந்து மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் என்று வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 2 ஆயிரத்து 500 பேரிடம் ராஜ குடும்பத்தினர் பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. இதில் டயானாவும் கதேயயும் சமமான வாக்குகளைப் பெற்றனர். இங்கிலாந்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் 81 சதவீதத்துடனும், அவரது பாட்டி மகாராணி எலிசபெத் 80 சதவீதத்துடனும் மக்களிடையே அதிக பிரபலமாக உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற பாதிப்பேருக்கு இளவரசர் சார்ள்ஸ் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. மேலும், அவரது இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 10இல் 8 பேர் ராஜ திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும், டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை கதேக்கு வில்லியம்ஸ் அணிவித்தது மிகச் சரியே என்றும் தெரிவித்தனர்.திருமணத்திற்கு பிறகு கதே வேலைக்கு போகலாமா என்று கேட்டதற்கு 52 சதவீத இங்கிலாந்து மக்கள் தாரளமாகப் போகலாம் என்றனர். ஆனால், அமெரிக்கர்களோ கதே வேலைக்குப் போகாமல், ராஜ கடமைகளை மட்டும் செய்யட்டும் என்கின்றனர்.

மெட்ரோநியூஸ்

Thursday, April 21, 2011

இளவரசர் வில்லியம் கதே திருமண நினைவு முத்திரைகள்


இளவரசர் வில்லியம் கதே அரச திருமணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் றோயல் மெயில் (Royal Mail) புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
அரச தம்பதியினரின் உத்தியோகபூர்வ திருமண நிச்சயதார்த்த வைபவத்தின்போது பிரபல புகைப்படக் கலைஞரான மைரோ டெஸ்டினோ
(Mairo Testino) வினால் எடுக்கப்பட்ட உருவப்படங்களையே இந்த முத்திரைகள் கொண்டு விளங்குகின்றனவாம். அவரின் கைவண்ண தொழில் நுட்பத்தில் உருவான தம்பதிகளின் படமானது முதற் தர 1.10 பவுண் பெறுமதியான முத்திரையாகப் போகிறதாம். இந்த முத்திரைகள் யாவும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியாரின் பிறந்த தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள.
அரச தம்பதியினரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருமண ஞாபகார்த்த முத்திரை வெளியீடானது மகாராணியின் பேரப்பிள்ளைகளின் ஒருவரின் திருமணத்தைக் குறித்த முதலாவது நிகழ்வாகும்.றோயல் மெயில் பணிப்பாளர் ஸ்ரீபன் அகார் இது பற்றி விபரிக்கையில்,இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்திரை வெளியீட்டை நடாத்துவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன் இந்த முத்திரைகள் இங்கிலாந்தில் மட்டுமின்றி உலகம் பூராவும் பிரபல்யம் பெற்று விளங்குமென நம்புகிறோம்'' எனக் கூறியுள்ளார்.அதே சமயம் இளவரசர் வில்லியம்இதற்கு முன்னரும் இரு தடவைகள் கீணிதூச்டூ Mச்டிடூ இன் முத்திரைகளில் தனது முகத்தைக் காட்டியுள்ளார். அதாவது மகாராணியின் தாயாரின் 100 ஆவது பிறந்த தின (ஆகஸ்ட் 4, 2000) முத்திரையிலும் கடந்த 2003 இல் நடந்த தனது 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரையிலும் அவர் தோன்றியுள்ளார். இப்புதிய முத்திரைகள் இரண்டு முதல் வகுப்பு முத்திரைகளாகவும் இரண்டு 1.10 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியõன முத்திரைகளாகவும் உள்ளமை கவனிக்கத்தக்கது. நேற்று 21 ஆம் திகதி முதல் இப்புதிய முத்திரைகள் தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளதுடன், இவற்றுக்கான கட்டணங்கள் கடந்த ஏழாம் திகதி முதல் றோயல் மெயிலின் இணையத்தளம் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.அத்துடன் 1981 இல் நடந்த இளவரசர் வில்லியமின் பெற்றோராகிய இளவரசர் சாள்ஸ் இளவரசி டயானா திருமணத்தின் போதும் இத்தகைய திருமண நினைவு முத்திரைகளை றோயல் மெயில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகம் பூராவும் அஞ்சலாக்கப்படும் 20 கிராம் எடை வரையான அனைத்து கடிதங்கள் அட்டைகளுக்கும் இப்புதிய 1.10 பவுண் பெறுமதியான முத்திரைகள் பாவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோநியூஸ்22/04/11

இளவரசர் வில்லியம் கதேஉருவங்கள் பொறித்த துவாய்கள் விற்பனை


இம்மாதம் 29 ஆம் திகதியன்று திருமணப் பந்தத்தில் இணையவுள்ள இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் மற்றும் மணப்பெண்ணான கதே ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய ஞாபகார்த்த தேநீர் துவாலைகளை (துவாய்களை) விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டுமென அரண்மனைப் பொறுப்பதிகாரியான சாம்பெஸை ஏர்ஸ் பீல் கடந்த வருடம் குறிப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
ஆயினும் நேற்று முன்தினம் பல்மோரலில் உள்ள அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடை யில் அத்தகைய இரண்டு விற்பனைப் பொருட்களைக் கண்டு அனைவரும் திகைப்படைந்தனராம். அரச உரிமைப் பொருட்களான பருத்தித் துணியிலான 6 ஸ்ரேலிங்பவுண் பெறுமதியான அந்தத் துவாய்கள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட போதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று, ஆடம்பரமான முறையில் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கலவையில் இளவரசர் வில்லியமும்கதேயும் புன்னகை பூத்தபடி காணப்படுவதாக அமைந்துள்ளது.
மற்றைய ஒன்றில் மணப் பெண் கதே தொப்பி ஒன்றை அணிந்த வண்ணம் குதிக்கால் உயர்ந்த பாதணிகளுடனும் மற்றும் குட்டைப் பாவாடையுடன் செந்நிற தொலைபேசிக் கூண்டொன்றைப் பின்னணியாகக் கொண்டு காணப்படுகிறாராம்.
இந்த சுவாரஸ்யமான விற்பனையின்போது அரச ஆடைத்தொகுப்பின் ஓர் அங்கமான உத்தியோகபூர்வ தேநீர் துவாயை ஒன்று 7.95 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது. வில்லியம் கதே தோன்றும் அந்த நீல வெள்ளை வர்ணக் கலவையுள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துணியில் வில்லியம்கதே இருவரினதும் முதலெழுத்துக்களான ஙி மற்றும் இ யுடன் சிறியதொரு கிரீடமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று துவாய்களையும் 'க்டூண்tஞுணூ ஙிஞுச்திஞுணூண்' நிறுவனம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் அனுமதியுடன் விநியோகித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்21/04/11

செல்வி கதேயின் இரவு


இளவரசர் வில்லியமை மணமுடிக்கவுள்ள கதே மிடில்டன் ஒரு தனிப்பெண்ணாக தனது கடைசி இரவைக் கழிக்கவுள்ள ஹோட்டல் அறை இது தான்.
மத்திய லண்டனில் உள்ள கோரிங் ஹோட்டலில் உள்ள இந்த மிகவும் ஆடம்பரமான அடுக்குஅறையை தனிப்பெண்ணாகத் தனது கடைசி இரவைக் கழிப்பதற்கு மிடில்டன் தெரிவு செய்துள்ளார்.
இதற்கென இந்த ஹோட்டல் 150000 பவுண் செலவில் மெருகூட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் மேல் மாடியில் இந்த அறை அமைந்துள்ளது.
இளவரசர் வில்லியமுடனான திருமண தினத்துக்கு முந்திய இரவு மிடில்டன் இங்கு தங்கியிருப்பார். இந்த ஹோட்டல் அறையானது பாரம்பரியமும் நவீனமும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு அறையாகும்.
இது ஐந்து அறைகளின் விசாலத்தை ஒன்றிணைத்த ஒரு பகுதியாகும். இங்குள்ள மலசல கூட உபகரணங்கள் 19ஆம் நூற்றாண்டு முதல் இந்தத் துறையில் தலைசிறந்த வடிவமைப்பாளர்களாகத் திகழும் தோமஸ் கிரப்பர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அசல் "வெனரபல்' ரக உற்பத்திகளாகும். உலகில் பல அரச குடும்ப மாளிகைகளில் இந்த வகை மலசல கூட உபகரணங்களே பாவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல், பெறுமதி மிக்க ஓவியங்கள் பலவும் இந்த அறையை அலங்கரிக்கின்றன. விக்டோரியா மகாராணி தனது திருமணத்தின்போது அணிந்திருந்தது போன்ற ஒரு மாதிரி ஆடை இந்த அறையின் ஆடைகள் வைப்பதற்கான அலுமாரியை இன்னமும் அலங்கரிக்கின்றது.
இங்குள்ள குளியல் அறையிலும் நீர்த் தாக்கம் ஏற்படுத்தாத தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. கதே மிடில்டன் தனது தாய், சகோதரி, மற்றும் பிரதான மணப்பெண் தோழி ஆகியோருடன் இங்கு தங்கவுள்ளார்.
ஒரு இரவுக்கான கட்டணம் 5000 பவுண்களாகும். மிடில்டன் குறிப்பிட்ட இந்தத் தினத்தில் தங்குவதற்கு பேர்கிங்ஹோம் அரண்மனைக்கு அருகில் அவருக்கு ஒரு இணைப்பு இல்லம் வழங்கப்பட்டது.
ஆனாலும், அதை ஏற்காமல் திருமணத்துக்கு முன் பொதுவான ஒரு இடத்தில் தங்க வேண்டும் என முடிவு செய்து இந்த ஹோட்டலைத் தெரிவு செய்துள்ளார்.
மெட்ரோநியூஸ்20/04/11

Sunday, April 10, 2011

செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து!

அதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி- உங்களுக்கு மாரடைப்பு வரலாமாம்.


மாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்டத்தட்ட38 காரணிகள் குறித்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைகிறது என்பதே இந்த ஆய்வின் நோக்கம்.

இந்த ஆய்விலிருந்து, காபி, செக்ஸ் மற்றும் மது ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

பிற காரணிகளை விட மது, செக்ஸ்,காபி ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைவதாக வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், காற்று மாசும் மாரடைப்பு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளதாம். புகை பிடித்தல் பழக்கமும் கூட மாரடைப்புக்கு வித்திடுமாம். அதேசமயம், செக்ஸ், காபி மற்றும் மது ஆகியவைதான் மிக முக்கிய காரணிகளாக உள்ளன.

அதிக அளவில் காபி சாப்பிடுவோருக்கும், அடிக்கடி மது அருந்துவோருக்கும், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மாரடைப்பு ஏற்பட பிற காரணிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுபவை, போக்குவரத்து நெரிசல், போதை மருந்துகள் உள்ளிட்டவை. இதில் போதை மருந்துகளை விட காற்று மாசுதான் மிக அபாயகரமானவை என்றும் வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்