Monday, July 5, 2010

உடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்


மூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஸ்மோபாலிடன் பத்திரிக்கை இதுதொடர்பான கருத்துக் கணிப்பை ஒன்றை நடத்தியது. அதில் 2498 பெண்களிடம் உடல் பருமன் மற்றும் செக்ஸ் குறித்து கருத்துக் கேட்டனர்.
அப்போது மூன்றில் ஒரு பெண், தான் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பதாக கூறினார். அதேசமயம், உடல் பருமனால் பல சிக்கல்களை தான் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 73 சதவீதம் பேருக்கு 'பாடி பாரனோயா' (body paranoia) பிரச்சினை உள்ளது. அதாவது நமது உடல் பருமன் குறித்தும், உடல் அமைப்பு குறித்தும் மற்றவர்கள் கேலி பேசுவார்களோ என்ற பீதிதான் இது.
உடல் பருமனால் இந்தப் பிரச்சினைகளை இவர்கள் சந்தித்தாலும், செக்ஸ் விஷயத்தில் தாங்கள் திருப்தியுடன் இருப்பதாகவே பெரும்பாலானோர் கூறியுள்ளனர். 10 பேரில் 6 பேர் படுக்கை அறையில் தாங்கள் நன்கு செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கு பேர் சிறந்த செக்ஸ் உறவை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உறவு மேம்பட்டு வருவதாக பாதிப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு சதவீதம் பேர் மட்டுமே முற்றிலும் திருப்தி இல்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான கருத்து - உடல் பருமன் உடையவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருந்தாலும் கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் அதை அவர்கள் அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, June 2, 2010

உதடுகள் இரண்டு....முத்தமோ பல


கேட்டவுடன் ஜில்லென்று உள்ளே பூ பூக்க வைக்கும். இந்த முத்தம் ஒரு மனிதனை அடியோடு மாற்றிப் போடக் கூடிய வல்லமை பெற்றது.
மன அழுத்தத்தைக் குறைக்க, பதட்டத்தைக் குறைக்க, புத்துணர்ச்சி பெற என ஏகப்பட்ட வேலைகளைச் செய்கிறது முத்தம் என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
ஒரு நிமிடம் வரை நீளமான முத்தம் கொடுத்தால், நமது உடலில் 20 கலோரி வரை குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே முத்தம் என்பது அன்புப் பரிமாற்றம் மட்டுமல்லாமல், அட்டகாசமான ஆரோக்கிய டிப்ஸாகவும் உள்ளது.
இப்படிப்பட்ட முத்தத்தை பல வகைகளாக பிரித்து வைத்துள்ளனர் நிபுணர்கள். ஒருவர் முத்தமிடுவதை வைத்து அது எப்படிப்பட்ட முத்தம், எந்த வகை முத்தம் என்பதை கண்டுபிடித்து விட முடியுமாம்.
அதையும்தான் கொஞ்சம் பார்ப்போமே!

கத்துக்குட்டி கிஸ்...
முதல் முறையாக முத்தமிடுவோரிடம் ஒருவிதமான பதட்டம் இருக்கும். அவர்கள் கொடுக்கும் முத்தம் ஆழமாக இருப்பதை விட அவசர கதியில் இருக்கும். ஜஸ்ட் உதடுகளை 'டச்' செய்து விட்டு 'டக்'கென பிரிந்து போய் விடத் துடிப்பார்கள். இதை பிகின்னர் முத்தம் என்கிறார்கள்.
இன்னொரு வகை உண்டு. இது சற்று ரசித்து, ருசித்துத் தரக் கூடியது. இந்த முத்தத்தில் அவசரம் இருக்காது. அதேசமயம், நல்ல ஆழமும் இருக்காது. ஆனாலும், நிதானம் நிறையவே இருக்கும். உதடுகள் உரசிக் கொண்டிருக்கும்போது கைகள் வேறு எங்காவது விளையாடிக் கொண்டிருக்கும். இந்த முத்தம் நமது செக்ஸ் உணர்வுகளைத் தூண்ட உதவுமாம்.

'சிப்' கிஸ்..

இது சற்று விளையாட்டுத்தனமானது. பிடித்த குளிர்பானத்தை குடித்து விட்டு முத்தத்திற்கு வருவார்கள் ஆண்கள். முத்தத்தின் இனிமையுடன், உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் குளிர்பானத்தின் இனிமையும் சேர்ந்து டபுள் ஸ்டிராங்காக இருக்குமாம்.

டாக்கிங் கிஸ்...

வழக்கமாக முத்தமிட்டால் சத்தம் வரும். ஆனால் இந்த முத்தத்தின்போது பேச்சு வரும். அதாவது எதையாவது முனுமுனுத்துக் கொண்டே உதடுகளில் விளையாடுவது இந்த முத்தத்தின் வகை. உதடுகள் என்றில்லாமல் காது மடல்கள், கன்னங்கள் என உணர்ச்சிகளை அதிகம் தூண்டக் கூடிய இடங்களாகப் பார்த்து குறி வைத்து கொடுப்பார்களாம் இந்த முத்தத்தை. இது செக்ஸ் மூடைக் கிளப்ப ரொம்ப உபயோகப்படுமாம்.

'டீஸர்' கிஸ்...

காது, முகம், கைகள் என உடலின் முக்கியப் பகுதிகளை உதடுகளால் நெம்புவது போல கொடுக்கப்படும் முத்தம் இது. கடியும், பிடியுமாக இருக்கும் இந்த கலவை முத்தமும், பெண்களின் உணர்வுகளைத் தூண்ட ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றாம். ஆனால் இந்த வகை முத்தத்தை கொடுப்போர், உதடுகளை மட்டும் கண்டுக்கவே மாட்டார்கள். மற்ற இடங்களுக்கு மறக்காம்ல் விசிட் அடித்து விடுவார்கள்.

ஆவேச முத்தம்...

பெயருக்கேற்ப, இது கொஞ்சம் வேகமானது. முகத்தை ஏந்திப் பிடித்தபடி படு ஆழமாக கொடுக்கப்படும் முத்தம் இது. உதடுகளுடன் உதடுகளைப் பொருத்தி அழுத்தத்துடன் கொடுக்கப்படும் இந்த முத்தம், உணர்வுகள் உச்சத்திற்குப் போகும்போது கொடுக்கப்படுமாம்.

இந்த முத்தம் சொல்லும் சேதி என்னவென்றால் - நான் 'ரெடி', நீயும் ரெடியா என்பது.

இது கொஞ்சம்தான், இப்படி நிறைய வெரைட்டிகள் இருக்கிறதாம் முத்தத்தில். நம்ம ஊர் சினிமாக்களில், கொய்யாப் பழத்தை ஹீரோயினும், ஹீரோவும் ஆளுக்குப் பாதி கடித்தபடி கொடுத்துக் கொள்வார்களே, அது எந்த வகை முத்தம் என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லலாமே...!

Tuesday, May 25, 2010

ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம்


புதிதாக ஒரு இன்ஹேலர் வரப் போகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? - ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் தருவதுதான்.
இந்த இன்ஹேலரில் அபோமார்பின் என்ற மருந்து பவுடர் வடிவில் இடம் பெற்றுள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், இந்த இன்ஹேலரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது, ஒரு பஃப் எடுத்துக் கொண்டால் போதும். நமது மூளையின் கெமிக்கல் ரிசெப்டார்களை தூண்டுவித்து செக்ஸ் உறவுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்குமாம்.
உண்மையில் இந்த அபோமார்பின் பர்கின்சன் வியாதிக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ஆய்வுகளின்போது இது ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதை ஆய்வாளர்கள் கண்டனர். இதையடுத்து ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக இதை இன்ஹேலர் வடிவில் கொண்டு வருகின்றனர்.
இன்னும் இது விற்பனைக்கு வரவில்லை. பரீட்சார்த்த நிலையில்தான் உள்ளது. ஆஸ்த்மா இன்ஹேலர் போலவே இது பார்ப்பதற்கு இருக்கும். எழுச்சிக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த அபோமார்பின் இன்ஹேலர் பெரும் நிவாரணமாக அமையும், அவர்களும் செக்ஸ் வாழ்க்கையில் இயல்பாக ஈடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களாக வயாகரா, சியாலிஸ், லெவிட்ரா ஆகியவைதான் செக்ஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கான மருந்தாக உள்ளது. இந்த நிலையில் இதன் அடுத்த கட்டமாக பவுடர், இன்ஹேலர் வடிவில் ஆண்மைக் குறைவுக்கான மருந்து உருவாகியிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள வயாகரா உள்ளிட்ட மருந்துகளால் உடனடி நிவாரணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வயாகரா எடுத்துக்கொண்டால் குறைந்தது 40 நிமிடங்களாகும் - 'மூட்' வருவதற்கு.
அதேபோல, சியாலிஸ், லெவிட்ரா போன்றவையும் கூட உடனடி நிவாரணத்தைத் தராது. மேலும் இந்த மருந்துகளைப் பயன்படுத்திய ஆண்களில் 30 சதவீதம் பேருக்கு இது குறிப்பிட்ட பயனைத் தரவில்லை.
ஆனால் தற்போது வெக்சுரா நிறுவனம் தயாரித்துள்ள இந்த அபோமார்பின் இன்ஹேலரை ஒரு முறை எடுத்துக் கொண்டால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் உறுப்பு எழுச்சி அடைந்து உல்லாசத்திற்கு மனதும், உடலும் தயாராகி விடுகிறதாம்.
இதுதொடர்பாக 600 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில் பெரும்பாலானவர்களுக்கு இது நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக வெக்சுரா நிறுவனம் கூறுகிறது

Sunday, May 16, 2010

சர்கோஸியால் எனது செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு- கார்லா ப்ரூனி புலம்பல


பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை மணந்து கொண்டது முதல் எனது செக்ஸ் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது உடல் தேவையை போக்காமல் தனது பணியிலேயே பிசியாக இருக்கிறார் சர்கோஸி என புலம்பியுள்ளார் கார்லா.
இத்தாலியைச் சேர்ந்த மாடல் தான் கார்லா. பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை தீவிரமாக் காதலித்து கரம் பிடித்தவர். இவர்களது காதல் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் கூட இந்த பரபரப்பு சற்றும் குறையாமல் விறுவிறுப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது.
இடையில் புதுக் காதலரை பிடித்து விட்டார் கார்லா என செய்திகள் வெளியாகின. இருப்பினும் இது புஸ்வாணமாகி விட்டது.
சமீபத்தில் வெளியான ஒரு நூலில், கார்லா கூறியதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியிருந்தது.
அமெரிக்காவுக்கு சர்கோஸியுடன், கார்லா விசிட் அடித்தபோது, கார்லாவும், ஒபாமாவின் மனைவி மிஷலும் சந்தித்துப் பேசினர்.
அப்போது மிஷலிடம் கார்லா கூறுகையில், ஒருமுறை காலையில் நானும், சர்கோஸியும் படுக்கையில் பிசியாக இருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டு அதிபர் சர்கோஸியைப் பார்க்க வந்திருந்தார்.
இருப்பினும் எங்களால் படுக்கை அறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அந்த அதிபரை காக்க வைக்க நேரிட்டது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்துள்ளதா என்று கேட்டு மிஷலை நடுங்க வைத்தார் கார்லா.
கார்லாவின் கேள்வியைக் கேட்டு சற்று ஆடிப் போன மிஷல், பின்னர் சுதாரித்து சிரித்தபடி அப்படியெல்லாம் எனக்கு நேர்ந்ததில்லை என்று கூறி நழுவினார்.
இந் நிலையில் சர்கோஸியை மணந்தது முதல் செக்ஸ் தேவை பூர்த்தியாகாமல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் கார்லா. இதுவும் ஒரு நூலில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதாகும் கார்லா, இதுகுறித்து ஜோனாதன் ஆல்டர் என்பவர் எழுதியுள்ள நூலில் கூறுகையில், எனது கணவர் சர்கோஸி தனது பணியில்தான் தீவிரமாக உள்ளார். இதனால் எனது உடல் தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.
எனக்கு விருப்பமான வரை செக்ஸில் ஈடுபடுவதை அவரது வேலைப்பளு தடுக்கிறது. இதனால் எனது செக்ஸ் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளன என்று கூறியுள்ளார் கார்லா.
கார்லா செக்ஸ் மீது அதிக மோகம் கொண்டவர். ஒரு ஆணுடன் மட்டும் உறவு கொள்வது மிகவும் போரடிக்கும் விஷயம் என்று முன்பு ஒரு முறை கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் இங்கிலாந்து ராக் நட்சத்திரங்களான மைக் ஜேகர், எரிக் கிளாப்டன், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் லாரன்ட் பேபியஸ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்தான் கார்லா என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 26, 2010

பிரபலமாகும் கன்னித்தன்மை ஆபரேஷன்!


வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இந்தியாவிலும் தற்போது பிரபலமாகி வருகிறதாம். இந்தியாவின் பெருநகரங்களில் இந்த வகை ஆபரேஷன் மிகவும் அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கன்னித்தன்மைக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அதை விட அதிக மரியாதை உண்டு. தான் காதலிக்கும், தான் மணக்க விரும்பும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம்.
தற்போது இந்த எண்ணம் வெளிநாடுகளிலும் கூட பரவியுள்ளது. அங்குள்ள பெண்கள் கன்னித்தன்மையை மீண்டும் மீட்க அறுவைச் சிகிச்சை முறைகளை நாட ஆரம்பித்துள்ளனர். தற்போது அந்த பேஷன் இந்தியாவுக்கும் தொற்றி விட்டது.
பெரும்பாலும் நடுத்தர வயதுப் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷனை அதிகம் செய்து கொள்கிறார்களாம்.
வயது முதிர்ந்த பெண்கள் என்றில்லாமல் எதிர்பாராதவிதமாக கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் சிக்கியவர்கள், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டவர்கள் என சகல தரப்பினரும் இந்த ஆபரேஷன் மீது ஆர்வம் கொண்டுள்ளனராம்.
இப்படித்தான் கன்னித்தன்மை இழப்பு ஏற்படும் என்று இல்லை. விளையாட்டுத் தறையில் இருப்பவர்களுக்கு கன்னித்தன்மை என்று கூறப்படும் ஹைமன் சவ்வுப் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்டவர்களும் கூட இந்த வகை ஆபரேஷன் மூலம் கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்.
ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் இந்த அறுவைச் சிகிச்ச பிளாஸ்டிக் சிகிச்சை போன்றதுதான். இப்படிப்பட்ட அறுவைச் சிகிச்சை வசதிகள் தற்போது டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பல பிரபல மருத்துவமனைகள் என்றில்லாமல் நடுத்தர ரக மருத்துவமனைகளிலும் கூட இந்த ஆபரேஷன்களை செய்கிறார்கள்.
இதுதொடர்பாக பத்திரிக்கைகள், இன்டர்நெட்டில் விளம்பரங்களும் செய்வது அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷன்களைச் செய்து கொள்ள அதிகம் வருகிறார்களாம். அந்த அளவுக்கு கலாச்சாரம் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்த வகை ஆபரேஷன்களுக்கு அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை ஆகுமாம். சாதாரண மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை செலவாகுமாம்.

Wednesday, April 21, 2010

செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண

செல்போன்களிலிருந்து வரும் வைப்ரேஷன் மூலம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.
செல்போன் என்றில்லாமல் எதில் எல்லாம் வைப்ரேஷன் வருமோ, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது பெயர் அமன்டா பிளவர்ஸ். உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை பயன்படுத்தும்போது அதிலிருந்து ஏற்படும் வைப்ரேஷன் தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதாக கூறுகிறார் அமன்டா. அதுவும் எப்படி என்றால் ஒரு நாளைக்கு பத்த முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு.
உடற்பயிற்சி சாதனம் என்றில்லாமல், செல்போன்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வைப்ரேஷன்களும் கூட தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதாக கூறுகிறார் அமன்டா.
அமன்டாவுக்கு இயல்பாகவே செக்ஸ் உணர்வு அதிகமாம். அதற்கு காரணம், அவரது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறே காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
24 வயதாகும் அமன்டா இதுகுறித்துக் கூறுகையில், ஏதாவது வைப்ரேஷனை எனது உடல் சந்தித்து விட்டால் உடனே செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு விடுகிறது. உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது வேகமாக இருக்கிறது.
செல்போனிலிருந்து வரும் வைப்ரேஷன் கூட என்னை விட்டு வைப்பதில்லை. இதனால் மிகவும் அவதிப்படுகிறேன். இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறேன் என்றார்.
தனது பிரச்சினையை சரி செய்ய தொடர் சிகிச்சைக்கும் உட்பட்டுள்ளாராம் அமன்டா.

Tuesday, April 20, 2010

; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ


திரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் குமரி மாவட்ட இளைஞர்களின் செல்போன்களில் ஒலிக்கும் புதிய ஆடியோ பேச்சால் மாவட்டமே கிறுகிறுத்து கிடக்கிறது.
செல்போனில் செக்ஸ் வீடியோ காட்சிகள் பரவியது போல் இப்போது செக்ஸ் ஆடியோ பேச்சுகளும் பரவி வருகிறது. சமீபத்தில் இங்குள்ள இளைஞர்கள் சிலரது செல்போனில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிய பேச்சு ஒலிபரப்பாகி வருகிறது. இருவருக்கும் இடையேயான சம்பாஷனை அந்த பெண்ணின் முதலிரவு நாட்களில் இருந்து தொடங்குகிறது.
முதலில் அந்த ஆண் நண்பர்தான் பெண்ணை தொடர்பு கொண்டு பேசுகிறார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பல நாள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனால் அந்த பெண், ஆண் நண்பருடன் சகஜமாக பேசுகிறார்.
குசலம் விசாரிப்பு முடிந்ததும் அந்த ஆண் நண்பர் மெல்ல அவரது முதலிரவு நிகழ்ச்சியை பற்றி கேட்கிறார். முதலில் செல்ல சிணுங்கலுடன் சொல்ல மறுக்கும் அப்பெண் நண்பரின் வற்புறுத்தலால் பேச ஆரம்பிக்கிறார்.
கணவர் தன்னை எங்கெங்கு தொட்டார் என்ன செய்தார் என்பதை சொல்கிறார். இரவு விளக்கு அணைந்த பின்பு காமிராவிலும் படம் பிடிக்க முடியாத காட்சிகளையும் அந்த பெண் சங்கோஜமின்றி விளக்குகிறார். இடையிடையே ஆண் நண்பரின் சந்தேகங்களுக்கும் கூச்சமின்றி பதில் கூறுகிறார்.
முதலிரவு முடிந்து அடுத்து வந்த நாட்களில் கணவனும் மனைவியும் அந்தரங்கமாக இருந்த நேரங்களையும் அந்த பெண் நண்பரோடு பகிர்ந்து கொள்வது காது கூசும் அளவுக்கு பதிவாகி உள்ளது.
இந்த குரல் பதிவை அந்த பெண்ணிடம் பேசிய ஆண் நண்பர்தான் செய்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு இடையிலான உரையாடலை கேட்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த பெண்ணின் பேச்சு இயல்பாக இருப்பதையும், ஆனால் அவரோடு பேசும் ஆண் உஷாராக இருந்து பெண்ணிடம் விஷயத்தை கறப்பதிலேயே குறியாக இருப்பதும் தெரிகிறது.
சுமார் 25 நிமிடங்கள் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை கேட்கும் மாணவர்கள் நிச்சயமாக செக்ஸ் உணர்வுக்கு ஆட்பட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே இதுபோன்ற உரையாடல்கள் செல்போன்களில் பரவுவதை தடை செய்ய “சைபர் கிரைம்” போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.