

எழுத்துக்களை கையால் எழுதுவதை சிறப்பாக கூறமாட்டார்கள். காலால் எழுதினால் அது மிக சிறப்பானது. கண்களால் எழுதினால் என்னவென்று சொல்வது. மத்திய சீனாவின் Henan மாநிலத்தை சேர்ந்த Ru Anting மூக்கால் நீரை உறிஞ்சி கொண்டு கண்களால் பீச்சியடித்து எழுதும் திறமை கொண்டுள்ளார். Foshan என்ற இடத்தில் கண்ணால் நீரை பீச்சியடித்து சீன எழுத்துகளை எழுதி சுற்றுலாப் பயணிகளின் ஈர்த்துள்ளார். இப்போது 56 வயதான இவர், தான் இந்த சிறப்புத்திறன் பெற்றிருப்பதை எதிர்பாராதவிதமாக சிறுவயதில் கண்டறிந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இக்கலையை அவர் வளர்த்துள்ளார். கண்ணிலிருந்து மூன்று மீட்டர் தெலைவுக்கு அவரால் நீரை பீச்சியடிக்க முடிகிறது. இவருடைய இந்த அரிதான திறமையால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சீன ஷாங்காய் உலக புகழ்பெற்ற DSJJNS பதிவேட்டில் இவர் இடம்பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment